25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பத்தாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பத்தாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பத்தாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.2023 -24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயின்று, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெற்றது. அத்துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட நிர்வாகத்தின் மற்றொரு முன்னெடுப்பாக, உயர்கல்வி பயில சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.08.2024 அன்று நடைபெற்றது.
 

இக்கூட்டத்தில் முதற்கட்டமாக 26 மாணவர்கள் கலந்து கொண்டனர். அம்மாணவர்களில் பலர் பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கப்பட்டனர். அதில் தொழிற்பயிற்சி நிலையங்களில் 18 மாணவர்களும், டுடோரியல் படிக்க விரும்பிய 7 மாணவர்களை டுடோரியல் பயிற்சி வகுப்பிலும், ஒரு மாணவி மட்டும் பதினொன்றாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News