25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 20, 2024

“ஆய்வு நோக்கில் வ.உ.சி. யும், முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பன்முகப் பார்வையும்” என்ற தலைப்பில், மாநில அளவிலான ஒருநாள் வரலாற்றுக் கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மாவட்ட நிர்வாகம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, இராஜபாளையம்  இராஜீக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து “ஆய்வு நோக்கில் வ.உ.சி. யும், முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பன்முகப் பார்வையும்” என்ற தலைப்பில், மாநில அளவிலான ஒருநாள் வரலாற்றுக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் தலைமையில்  (19.07.2024) நடைபெற்றது.இக்கருத்தரங்கில் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வை தேடுதல், ஆய்வுப் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுதல், வரலாற்று மாணவர்களை ஊக்கப்படுத்துதல் குறித்து உரையாற்றினார்.தமிழ்நாட்டில் குறிப்பாக தொல்லியலில் ஏற்பட்ட சமீபகால ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானது அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய ஆய்வு மாணவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் அது குறித்த விழிப்புணர்வை வழங்கியது ஒரு மைல்கல். தற்போது நாம் பெருமையாக பேசிக் பேசிக்கொண்டிருக்கக்கூடிய கீழடியின் தொடக்கமும் அப்படித்தான் இருந்தது. ஆனால், தற்போது வரலாற்று ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தொல்லியல் குறித்த ஆர்வமூட்டும்  பயிற்சியின் விளைவாக அங்கிருந்து ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இந்த கீழடி பகுதியினுடைய தரைப்பகுதியில் இருந்து கருப்பு பானை ஓடைகளில் சில குறியீடுகள் இருக்கின்றன என்று ஆர்வம் கொண்டு அந்த ஆய்வை தொடர்ச்சியாக பல கட்டங்களாக பேசியும் எழுதியும் கொண்டு சென்றதின் விளைவுதான் அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது.அந்த ஆய்வுகள் தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குறிப்பாக வைப்பாற்றங்கரை என்று சொல்லக்கூடிய வைகைக்கும் தாமிரபரணிக்கும் இடையே பாயக்குடிய வைப்பாற்றங்கரையில் நமது மாவட்டத்தில் சில முக்கியமான ஆய்வுக் கருவிகள் இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்களுக்கும் இந்த பகுதியில் இருக்கக்கூடிய ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இந்த செய்தியை எடுத்து செல்ல வேண்டும் என்பது அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளுக்கு இந்த துறையை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.சமூக, அரசியல், விடுதலை என எந்த புரட்சியாக இருந்தாலும், மிகப்பெரிய கனவை சில சாமானியர்கள் அல்லது ஒரு சாமானியன் உருவாக்கிய வரலாறு உலகம் முழுவதும் இருக்கிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வ.உ.சி. அவர்களின் வரலாறு.சலபதி அவர்கள் வ.உ.சி குறித்து 16 வயதில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார். அது குறித்து இன்று வரைக்கும் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சமூகத்தின் வ.உ.சி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கக் கூடியவர்.வ.உ.சி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் பற்றிய புத்தகத்தையும், அவர் குறித்து எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகளையும் படிக்க தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 பக்கம் 15 பக்கங்கள் ஒதுக்கி படிக்க வேண்டும்.வ.உ.சி.அவர்கள் ஆற்றிய பணிகள் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு இருந்தன. வ.உ.சி. பற்றிய நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும், இன்னும் அவர் கனவு கண்ட ஒவ்வொரு தத்துவத்திலும், அது பொருளாதாரமாக தத்துவமாக இருக்கலாம், தமிழின் உடைய இலக்கிய மரபு குறித்த பெருமையாக இருக்கலாம், அவற்றை அவர் கொண்ட தத்துவங்களை அவர் அடைந்த பெருமைகளை எல்லாம் இன்று நாம் மீட்டு உருவாக்கி  இருக்கிறோமா அல்லது இன்றைய சமூகம் அது குறித்து மதிப்பிடுகிறதா என்ற கேள்வியை எடுத்து பார்த்தால் இன்னும் நாம் வ.உ.சி குறித்து நிறைய பேச வேண்டும். இதன் தொடர்ச்சியான மரபும், இதன் தொடர்ச்சியான கன்னியையும், அடுத்த அறிவுத் தலைமுறைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கடத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் உடைய நோக்கம் ஆகும்.இக்கருத்தரங்கில், நூலகர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் திரு.ரெங்கையா முருகன் அவர்கள் வ.உ.சி.யும் தமிழும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எழுத்தாளர் திரு.கா.உதயசங்கர் அவர்கள் வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும் என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் தமிழ்த்துறை, முனைவர் இரா.இலக்குவன் அவர்கள் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுகளில் வ.உ.சி.யும் பாரதியும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

Jul 20, 2024

FDDI நடத்திய உயர்கல்விக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றுஹைதராபாத் மற்றும் சென்னை நிறுவனத்தில் சேர்ந்துள்ள மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19.07.2024) கிருஷ்ணன் கோவில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பயின்று ஒன்றிய அரசு நிறுவனமான FDDI (Foot Wear Design and Development இன்ஸ்டிடியூட் )நடத்திய உயர்கல்விக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, ஹைதராபாத் நிறுவனத்தில் சேர்ந்துள்ள த. ஈஸ்வர பாண்டி மற்றும் FDDI சென்னை நிறுவனத்தில் சேர்ந்துள்ள அ.முகமது அஜ்மல் தக்க்ஷீன் ஆகிய மாணவர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/கோ ஆப் டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் மரு.இரா ஆனந்தகுமார். I A S., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசிலன் I A S, அவர்கள் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

Jul 20, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில்  (19.07.2024) மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு /கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் மேலாண்மை இயக்குநர்  மரு.இரா.ஆனந்தகுமார்.I A S. அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Jul 20, 2024

வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஷத்ரிய வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கருவூலம் சார்பில், வருமானவரி  பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ச.சுந்தர் அவர்கள் தலைமையில் 18.07.2024 அன்று நடைபெற்றது.ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குதுறை, சென்னை அவர்களின் அறிவுரையின்படி வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வருகிற அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தின் கீழ் வருகின்ற தமிழ்நாடு அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன்கருதி வருமான வரி பிடித்தம் குறித்த கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மதுரை சரக வருமான வரி துணை ஆணையர் திரு. மதுசூதனன், I.R.S.,  அவர்கள், வருமான வரி அலுவலர் திரு.ஜி.வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு முறையாக வரிப்பிடித்தம் செய்வது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், வரிப்பிடித்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இக்கூட்டத்தில் 250-க்கும் மேற்ப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Jul 20, 2024

அருப்புக்கோட்டை நகரில் வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது

நமது தமிழ்நாடு அரசானது பொதுமக்களின் நலன் கருதி பொது மக்கள் தங்களது நில ஆவணங்களை எளிதில் எங்கிருந்தும் உடனடியாக பெற்றுக்கொள்ள ஏதுவாக ஆன்லைன் பட்டா திட்டம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.         தற்போது நமது அருப்புக்கோட்டை நகரில் நகர நில அளவைக்குட்பட்ட வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.          பொதுமக்கள் தங்கள் கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டு மனைகளுக்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா பெறவும், பாகவிஸ்தி பத்திரங்கள் அடிப்படையில் தனிப்பட்டா பெறவும், கிரையம் பெற்றது முதற்கொண்டு நாளது தேதி வரை பட்டாமாற்றம் செய்யாமல் இருப்பின், பட்டா பெறவும், தங்களிடம் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களின் நகல்களுடன் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தேவைப்படும் ஆவணங்கள்:1. கிரைய ஆவணம் மற்றும் மூல ஆவணத்தின் நகல்2. வில்லங்கச்சான்று (EC)3. ஆதார் அட்டை நகல்4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்5. இறப்பு மற்றும் வாரிசு சான்று (இறந்தவரின் பெயரில் பட்டா இருக்கும் நேர்வுகளில்)

Jul 19, 2024

சிவகாசி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து கள ஆய்வு

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 18.07.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 19.07.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று சிவகாசி சிறுகுளம் கண்மாயில் நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், சிவகாசி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை முறைகள்,  அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், மகபேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனை தொடர்ந்து, அண்ணா காலனியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடிக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம், எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், சிவகாசி சார்பாவதிவாளர் அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்தல் குறித்து ஆய்வு செய்தார்.சிவகாசி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளுக்காக பெறப்படும் கட்டண விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சிவகாசி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் கிராம கணக்குகள்,  பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.சிவகாசி நகர காவல் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு நகரப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை, அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சாலைபாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.  சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சிவகாசி துணைமின் நிலையத்தை பார்வையிட்டு, நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து, சிவகாசி முஸ்லீம் துவக்கப்பள்ளியை பார்வையிட்டு, கற்பிக்கும் முறைகள்,  அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.அதனை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், வெடி விபத்தில் காயமடைந்த 10 நபர்களுக்கு தலா 1 இலட்சம் வீதம்  மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் வழங்கினார்.

Jul 19, 2024

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில்  உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு (18.07.2024) விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில்  உள்ள அன்னாரது சிலைக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. பெ.ரா.வெற்றிவேந்தன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Jul 19, 2024

796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கல்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்  (18.07.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் 796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினி (Tablet) வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.அதன்படி, தமிழ்நாடு அரசு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79,723 ஆசிரியர்களுக்கு 101.48 கோடி ரூபாய் செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில்,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு இக்கையடக்கக் கணினி வழங்கப்படுகிறது.நமது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 796 அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் (937+1146) என மொத்தம் 2083 ஆசிரியர்களுக்கு இக்கையடக்கக் கணினி வழங்கப்படுகிறதுஇதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவு, மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அரசு வழங்கும் நலத்திட்டஉதவிகளை பதிவேற்றம் செய்வது மற்றும் மாணவர்களின் அறிவுத்திறனைஅறிந்துகொள்ள ஏதுவாக தேர்வுகள் நடத்திட என பல வழிகளில் பயனுள்ள இக்கையடக்கக் கணினி அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இடைநிலை உதவியாசிரியர் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் இக்கையடக்கக் கணினி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர் பெருமக்கள் தான் பெற்றோர்களை விட இளைய சமுதாயத்தை சரியான வழியில் கொண்டு செல்லக்கூடிய வகையில் குழந்தை செல்வங்களின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் என்ற உணர்வோடு பள்ளிக்கல்வித்துறையில் உட்கட்டமைப்பு திட்டங்களோடு, ஆசிரியர்களுக்கான நலனில் அக்கறையோடு செயலாற்றுகிறார்கள்.இன்றைக்கு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு இந்த கணினி என்பது மிக சாதாரணமாக இருக்கிறது. குழந்தைகள் கைபேசியை பெரியவர்களை விட மிக எளிதாக பயன்படுத்துகிறார்கள். நமக்குத் தெரியாதவற்றை கூட அந்த குழந்தைகள் நமக்கு சொல்லிக் கொடுக்கக் கூடிய அளவிற்கு அவர்களின் அறிவுத்திறன் இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. அதற்கு இணையாக நம்முடைய கற்றல்முறை இருக்க வேண்டும்.தற்போது உள்ள ஆசிரியர்கள் அவர்கள் படித்த காலத்தில் இருப்பதற்கும் தற்போதுள்ள கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசம் மற்றும் முன்னேற்றம் இருக்கிறது. விஞ்ஞான ரீதியாக இன்றைக்கு படிப்பின் தரம் உயர்ந்திருக்கிறது. அதற்கு நாம் இணையாக போட்டி போட வேண்டும் என்று சொன்னால் இது போன்ற மின் சாதனைகளை எல்லாம் உபயோகப்படுத்துகின்ற போதுதான் நம் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும். குழந்தைகளுக்கு உள்ள சந்தேகங்களையும் நம்மால் தீர்க்க முடியும். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த கையடக்க கணினி வழங்கப்பட்டிருக்கின்றது. சமுதாயத்தில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். சமுதாயம் எப்படி செல்ல வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் ஊட்டக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு ஒழுக்கம் மிகுந்த, நாட்டுப்பற்றுள்ள, சிறந்த அறிவாளிகள் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்றால் அது ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது. அதற்கு ஆசிரியர்களான நீங்கள் அத்தனை பேரும் தியாக உணர்வோடு பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Jul 19, 2024

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், "தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு" என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருவதை  (18.07.2024) பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Jul 19, 2024

அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (18.07.2024) விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S,., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

1 2 ... 31 32 33 34 35 36 37 ... 69 70

AD's



More News