25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 25, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், (24.07.2024) அறிவியல் களப்பயணத்தில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பயிலும் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்., மாவட்டத்தில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.அதன்படி, இந்த அறிவியல் பயணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸ் (ஐபிஆர்சி) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மையமாகும்.இந்திய விண்வெளி திட்டத்திற்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்ப தயாரிப்புகளை செயல்படுத்த தேவையான வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.இது இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையங்களில் உருவாக்கப்படும் உந்துவிசை அமைப்புகள் மற்றும் நிலைகளை சோதனை செய்தல், அசெம்பிள் செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது குறித்தும், இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களின் அனைத்து திரவ, கிரையோஜெனிக் மற்றும் செமிக்ரையோஜெனிக் நிலை மற்றும் இயந்திரம் தொடர்பான சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுவது குறித்தும்,திருநெல்வேலி அறிவியல் மையத்தில் அறிவியல் நிகழ்வுகள், டைனோசர் பார்க், மின்னணுவியல், இயற்பியல் பிரிவு, பல இயற்பியல் சார்ந்த நுணுக்கங்கள், பறவைகள் மற்றும் உயிரினங்கள், பல அறிவியல் சார்ந்த விசயங்கள், எலக்ட்ரானிக்ஸ் பற்றிய அறிவியல் ஜாலங்கள், மாய கண்ணாடி பகுதி, கோளரங்கம் என்ற வானியலை உங்கள் கண் முன்னே கொண்டு வருவது போன்ற அமைப்பு, சூரியன் மற்றும் பிற கோள்களை அருகில் இருந்து பார்ப்பது போன்ற அமைப்பு, திரையில் பார்க்கும் காட்சியை கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் முப்பரிமாண திரையரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள், தொழில் நுட்பங்கள், பயன்கள் குறித்து அறிந்து கொண்டோம்.இந்த அறிவியல் களப்பயணம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த அறிவியல் பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Jul 25, 2024

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்  திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S, அவர்கள்  (24.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பாலையினை பார்வையிட்டு நாற்பாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்தும், தற்போது அதனுடைய நிலை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், மல்லி ஊராட்சி உள்;ர்பட்டி கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை பெற்ற பயனாளியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, முள்ளிக்குளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,மல்லிபுதூர் ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், புதிய நூலகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சாரதா வித்யாலயா ஆரம்பப்பள்ளியில் கட்டடத்தின் தரம் மற்றும் மதிய உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) திருமதி ஜெ.உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி சா.தேவாசீர்வாதம், வட்டாட்சியர், உதவிப்பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 25, 2024

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்; “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  (24.07.2024) கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை நகர்ப்புற பகுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த "மக்களுடன் முதல்வர்" என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு  முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய  பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடைபெற்று வருகிறது.  தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக,  15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம்  காணப்பட்டுள்ளன.“மக்களுடன் முதல்வர்” முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.மேலும், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகிய வட்டாரங்களில்  நாளை (25.07.2024) நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்., I A S., சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், வட்டாட்சியர் திரு.வடிவேல், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 25, 2024

நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்களில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை உதவி செயற் பொறியாளர் திரு.செபஸ்டின் பிரிட்டோ ராஜ் (சிறப்பு திட்ட செயலாக்கத்துறையினால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரி) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி சாத்தூர், விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய உட்கோட்டங்களில் பாதிப்புக்குள்ளான அண்ணாநகர் - அரிஜன் காலனி - கரிசல்பட்டி சாலை, கன்னிசேரி - மத்தியசேனை சாலை, சங்கரலிங்கபுரம் - ஒண்டிப்புலி சாலை, கொங்கன்குளம் - திருவேங்கிடபுரம் சாலை, சமுசிகாபுரம் - வடகரை சாலை, இராஜபாளையம் - அய்யனார்கோவில் - மருங்காவூர் சாலை, கொத்தன்குளம் - சத்திரப்பட்டி சாலை, லட்சுமியாபுரம் ஒன்றிய எல்கை சாலை, கரிசல்பட்டி - தும்மையாபுரம் சாலை, சுந்தரபாண்டியம் - கோட்டையூர் ஆகிய சாலைகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் தடுப்புச்சுவர் பணிகள் மற்றும் பாலப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரி/ உதவி செயற் பொறியாளர் திரு.செபஸ்டின் பிரிட்டோ ராஜ்; அவர்கள் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது விருதுநகர் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களில் ரூ.54.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நிரந்திர மற்றும் தற்காலிக வெள்ள பாதிப்பு மறுசீரமைப்பு பணிகளை திட்டமிட்டவாறு விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.இந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் திருமதி பாக்கியலட்சுமி மற்றும் அனைத்து உதவிக் கோட்டப் பொறியாளார்கள், உதவிப் பொறியாளர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.மேற்கண்ட ஆய்வில் சிறப்பு செயலாக்கத்துறையினால் நியமிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட அறிவுரைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Jul 25, 2024

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ இன்பர்மேசன் லிமிடேட் தங்களது  நிறுவனத்தில் காலியாக உள்ள ஹோம் சேல்ஸ் ஆபிஸர், ஜியோ பாயின்ட் அஸிஸ்டெண்ட மேனேஜர்,  டிஜிட்டல் ரிபைர் ஸ்பெஸலிஸ்ட், ப்ரி லான்சர் டெக்னீசியன் போன்ற 4000- த்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை பூரத்தி செய்யவுள்ளது. இதில்  விருதுநகர்  மாவட்டத்திற்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்  பூர்த்தி செய்யப்படவுள்ளன.இதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-07-2024 அன்று விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  நடைபெறவுள்ளது.  விருப்பமுள்ள 10 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரி கல்வித்தகுதி வரை பயின்ற 18-45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in/   என்ற இணையதளத்தில்  தங்களது  சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் 26.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.  இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 25, 2024

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. இரண்டு கால் செயலிழந்த மாற்றுத்திறனாளி, மளவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மூளை முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2) விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரம் பெறுவதற்கு  மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068, விருதுநகரில் தொடர்புக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 24, 2024

ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழா

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பரளச்சி கிராமத்தில் (23.07.2024) தானம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.முன்னேற விளையும் மாவட்டமான நமது விருதுநகர் மாவட்டம் பல்வேறு குறியீடுகளில் இன்னும் நாம் அடைவதற்கும், செல்வதற்குரிய தூரமும் நிறைய இருக்கிறது.திருச்சுழி பகுதியில் பெரும்பாலான இடங்கள் வானம் பார்த்த பூமியாக இருக்கக்கூடிய பகுதிகள். இன்னும் பல இடங்களில் வரலாறு எடுத்து பார்த்தால், இந்த பகுதியில் 12 ஆம் நூற்றாண்டு பாண்டியர்கள் கால ஆட்சிக் காலத்தில் நிறைய குளங்களை வெட்டிய இடங்களை நாம் பார்க்க முடியும். அதற்குப் பின் வந்த நாயக்கர் காலத்தில் இந்த பகுதியில் நிறைய விவசாயங்களை செழிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக வடிகால்களை தோற்றுவித்து, நிறைய குளங்களை, ஏரிகளை வெட்டினார்கள்.இப்பகுதியில் இயல்பாகவே மழைப்பொழிவு குறைவு. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவை விட விருதுநகர் மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைவு. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சராசரி மழைப்பொழிவை விட இந்த பகுதியில் 600 முதல் 700 மில்லி மீட்டர் வரை தான் சராசரி மழைப்பொழிவு இருக்கிறது. எனவே பெரும்பாலும் விவசாயம் என்பது இங்கே வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கிறது. எனவே விவசாயத்திலிருந்து வரக்கூடிய வருமானம் என்பது மிக சொற்பமாகவும், குறைவாகவும் இருக்கக்கூடிய சூழல் உள்ளது. கால்நடை வளர்ப்புக்கும் தொழிலுக்கும் தண்ணீர், மேச்சல் நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த பகுதியில் இயல்பாகவே பொருளாதார குறியீடுகள் என்பது சற்று குறைவு. இது போன்ற கிராம பகுதிகளில் அரசினுடைய திட்டங்களான வறுமை ஒழிப்பு திட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தி வந்தாலும், பொதுமக்கள் குழுவாக இணைந்து அதன் மூலமாக செயல்படும் போது அதற்கான விளைவுகள் இன்னும் அதிகமாக இருக்கிறது.  மகளிர் சுய உதவி குழுக்களினுடைய வருகைக்கு பிறகு 20 முதல் 30 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தில் அடைந்து இருக்கக்கூடிய முன்னேற்றங்கள் மிகப் பெரிது. ஒரு பொருளாதார தத்துவத்தில் வறுமையின் நச்சு சுழல் என்று குறிப்பிடுவார்கள். வறுமையை  ஒரு காலகட்டத்தில் அதற்கென்று தனியாக சிறப்பாக கவனம் செலுத்தி அதை அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.வறுமையில் இருப்பவர் தொடர்ச்சியாக கடன்களை பெறும் போது, அவர் வாழ்நாள் முழுவதும் வட்டியை செலுத்தவும், கடனை அடைப்பதற்கும் செல்கிறது. மொத்த சம்பாத்தியத்தினுடைய பெரிய செலவு என்பது முதலில் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். சேமிப்பவர்களால் தான் இந்த வறுமையினுடைய நச்சு சுழலில் இருந்து வெளியே வர முடியும்.வரக்கூடிய சம்பளத்தில் மாத மாதம் சேமிக்கும் போது, ஒரு ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர் மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கிறார்களோ அதே மாதிரியான பணம் இந்த சேமிப்பின் மூலம் பெறப்படும். சேமிப்பு தான் இது மாதிரியான அடுத்தடுத்த வளர்ச்சியை கொடுக்குமே தவிர, அதற்கு எதிராக இருக்கக்கூடிய செலவு என்பது அந்த நச்சு சுழலில் கொண்டு போய் சேர்த்து விடும்.கடன் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கான வட்டியும், கடனையும் திருப்பி செலுத்தக்கூடியது நமது கட்டுப்பாட்டை விட்டு மீறுகின்ற போது அது ஒரு தனி மனிதரை அந்த நச்சு சுழலில் சென்று செலுத்தி விடுகிறது. எனவே இதை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற அறக்கட்டளை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அரசுனுடன் இணைந்து குறைந்த வட்டியில் நுண்கடன்கள் வழங்கி அதை முறையாக செலுத்தி அந்த வறுமையில் இருந்து வெளியில் வருவதற்கு உதவி செய்கின்றனர்.எனது இந்த கடனை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய வருமானத்தைப் பெருக்குவதும் மிக முக்கியம். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிறைய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல அவர்களுக்கான நிறைய தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.சாதாரண கூலி வேலைக்கு சென்றவர்கள் கூட, குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தையல் போன்ற தொழில் செய்வதன் மூலம் அவர்களுடைய வருமானம் கணிசமாக உயர்ந்து இருக்கின்றது. இது போன்று தொழில்கள் செய்வதற்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அதற்கான பயிற்சிகள் வழங்குவதோடு கடனுதவிகளும் வழங்கப்படுகிறது.மேலும், நமது பகுதிகளில் அரசினுடைய திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலமாகவும் நீர்நிலைகளை மேம்படுத்துவதன் மூலமாக இப்பகுதியில் விவசாயம் செழிப்பாக செய்ய முடியும். விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதற்கு இணையாக இருக்கக்கூடிய கால்நடை வளர்ப்பும் செய்ய முடியும்.இந்த பகுதிகளில் குளம் என்பது ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக இருந்தது. ஒரு குளத்தை பாதுகாப்பது என்பது அந்த கிராமத்தினுடைய கடமை. கிராமத்தினுடைய குளத்தை பாதுகாப்பதற்கு என்று அவர்களுக்குள்ளேயே முறை வைத்து காவல் காத்த காலமும் இருந்தது. இன்று நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.எனவே நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதன் மூலமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை போன்ற தொழில்களை செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் சிறு சிறு வியாபாரங்களை செய்வதற்கு இது போன்ற நிறைய பயிற்சிகளை, வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  இது போன்ற கடன் திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இது போன்று ஊரகப்பகுதிகளில் இயங்கக்கூடிய நிறுவனங்கள், வங்கிகள் அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இந்த வறுமையினுடைய நச்சு சுழலில் இருந்து பொதுமக்களை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள். எனவே இது போன்ற பல்வேறு திட்டங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு கிராமத்தில் ஒரு சமுதாயமாக இணைந்து நாம் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

Jul 24, 2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (23.07.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல்திட்டத்தின்கீழ்,ரூ.13.05இலட்சம்மதிப்பில்புனரமைப்புமற்றும்பராமரிப்புபணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,வலையபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.50 இலட்சம் மதிப்பில், வலையப்பட்டி ஊராட்சி மேற்கு பகுதியில் புதிய ஊரணி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,வலையப்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மற்றும் வலையப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.2.45 இலட்சம் மதிப்பீட்டில்,  500 மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,பின்னர், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30.10 இலட்சம் மதிப்பில், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.பின்னர், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திருமதி. காளியம்மாள்,தென்னாட்டான் என்பவருக்கு வீடு கட்டுவதற்கான பணி  ஆணையினை   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வத்திராயிருப்பு வட்டாட்சியர்; திருமதி சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி.லலிதா, பொறியாளர்கள் திருமதி வள்ளிமயில், திரு.ராஜகுமார், மேற்பார்வையாளர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 24, 2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (23.07.2024) கலந்துகொண்டு,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்முகாமில், வேளாண்மைத்துறையின் மூலமாக  ஒரு பயனாளிக்கு ரூ.4000/- மதிப்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் மாடி தோட்ட செயல் விளக்கத் திடலுக்கு இடுபொருட்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.4000/- மதிப்பில், காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்கத் திடலுக்கு இடுப்பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை நகர்ப்புற பகுதிகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த "மக்களுடன் முதல்வர்" என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய  பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடைபெற்று வருகிறது.  தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக,  15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம்  காணப்பட்டுள்ளன.“மக்களுடன் முதல்வர்” முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, ஆதி திராவிட நலத்துறை அலுவலர் திரு. ரமேஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  திரு.காளிமுத்து, வத்திராயிருப்பு வட்டாட்சியர் திருமதி சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி.லலிதா, பொறியாளர்கள்  திருமதி வள்ளிமயில், திரு.ராஜகுமார், மேற்பார்வையாளர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 24, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 25.07.2024 அன்று திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் வட்டாரங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ”கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள்.  முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.    தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, 25.07.2024 அன்று, திருச்சுழி, விருதுநகர், திருவில்லிபுத்துார் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.திருச்சுழி வட்டாரத்தில், கல்லுாரணி / நாடார் திருமண மண்டபத்தில்,  கல்லுாரணி, ஆலடிப்பட்டி, கீழகண்டமங்கலம், குலசேகரநல்லுார், தமிழ்பாடி, திருச்சுழி,  குல்லம்பட்டி, சவ்வாசுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும்,விருதுநகர் வட்டாரத்தில்,  ரோசல்பட்டி / அய்யனார் வதனா திருமண மண்டபத்தில், பெரிய பேராலி, சிவஞானபுரம், பாவாலி, சத்திரெட்டியபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும்,வெம்பக்கோட்டை வட்டாரத்தில், தாயில்பட்டி/கம்மவர் திருமண மண்டபத்தில் தாயில்பட்டி, பேர்நாயக்கன்பட்டி,வெற்றிலையூரணி, மேலஓட்டம்பட்டி, சுப்ரமணியபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கும்,திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் டி.மானகசேரி, மல்லிபுதூர், முள்ளிக்குளம், மல்லி, இனாம் நாச்சியார் கோவில்  ஆகிய ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர்  முகாம்  25.07.2024 அன்று  நடைபெற உள்ளது.மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும். இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறும், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 29 30 31 32 33 34 35 ... 69 70

AD's



More News