25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 07, 2026

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி   28.02.2026 முதல் 90 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் ஆறு நோய்களை தடுப்பதற்கான விரிவு படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978 - இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தற்போது 11 வகையான தடுப்பூசிகள் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும்  குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு  12 வகையான தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்புளுயன்ஸா - நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நியுமோகோக்கல் நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காச்சல் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக தற்போது பெண்களை தாக்கும் கருப்பைவாய் புற்று நோயை தடுப்பதற்காக  இந்தியா முழுவதும் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி (கார்டாசில்) ஒரு தவணை வரும் 28.02.2026 முதல் வழங்கப்பட்டு வருகிறது.நமது விருதுநகர் மாவட்டத்தில் இத்தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வைத்து   28.02.2026 முதல் 90 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.நமது மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 27.02.2026 அன்று நடைபெற்றது.தடுப்பூசி செலுத்திய குழந்தைகளின் பதிவுகள் U-WIN செயலியில் பதிவிடப்பட்டு அவர்களுக்கு மின்னணு சான்றிதழ் (Digital Vaccination Certificate) வழங்கப்படும். இதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் 14 வயதுடைய பெண் குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தையுடன் வரவேண்டும் மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பயனாளிகள்   (14 வயதுடைய பெண் குழந்தைகள்) ஆதார் எண்ணுடன் வரவேண்டும்.நமது சுகாதார மாவட்டத்தில் இத்தடுப்பூசி மூலம் 14 வயதுடைய பெண் குழந்தைகள் 20788 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 14 வயதுடைய பெண் குழந்தைகளுடைய பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலித்தி கருப்பைவாய் புற்றுநோயில் இருந்து பாதுகாத்திட வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 07, 2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு  2025-2026 சம்பா பருவத்தில்நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 04.03.2026 வரை 29,796 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 3560 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.71,01,20,229/-ஐ (ரூபாய் எழுபத்தொரு கோடியே ஒரு வட்சத்து இருபதாயிரத்து இருநூற்று இருபத்தொன்பது மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளன.      விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, கம்மாப்பட்டி மற்றும் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கழக விதிகளின்படி சராசரியாக விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.     விவசாயிகள் அறுவடை செய்த நெல்லியை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். பயனடைந்த விவசாயிகள் அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

Mar 06, 2026

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஜே.சி.ரெசிடென்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு(04.03.2026 முதல் 06.03.2026 வரை) நிகழ்ச்சியின் 2 ஆவது நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் உரையாற்றினார்.மத்திய, மாநில அரசுகளால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துகின்ற முக்கிய பணிகளை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், களப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முடியும் என்ற நோக்கத்தில்தான் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மகளிர் உதவி எண்.181 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (OSC) மற்றும் காவலன் (SOS) செயலியின் மூலம் அவசர உதவியை வழங்குகிறது.மேலும், குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் 2005, போஸ்கோ சட்டம் சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் மற்றும் பெண்குழந்தை பாதுகாப்புச்சட்டம் போன்றவைகள் பெண்கள் மற்றும் நிதி உதவி அளித்து சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.இந்த அரசு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து நன்கு அறிந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும்.எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டத்தின் கீழ் சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்கள் (இளைஞர் நீதிக்குழுமம்) 7 நபர்களுக்கு சுயதொழில் புரிந்திட தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.கே.ஜெயக்குமார், விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் திருமதி பி.எஸ்.ஏ.நிஷாந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு.க.பிரதௌஸ் பாத்திமா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் திரு,பால் இக்னேசியஸ் சேவியர்ராஜ், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Mar 06, 2026

மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (05.03.2026) பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Mar 06, 2026

மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்திடவும், மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்திற்கு (DLCA) வெளிப்பணி மூலம், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட வேண்டியுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த, ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியுள்ள நபர்கள் வரும் 09.03.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மையம், கடை எண்: 7, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பழையபேருந்து நிலையம் அருகில், விருதுநகர், மின்னஞ்சல் முகவரி clcvnr2021@gmail.com என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலகமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 06, 2026

தமிழ்நாடு மாநில ஊரக,நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 07.03.2026 அன்று நடைபெறவுள்ளது .

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் திருவிழா 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்டபம், அல்லம்பட்டி விலக்கு, அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகரில் வைத்து காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 வரை நடத்தப்படவுள்ளது.இம்முகாமில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தனியார் துறை நிறுவனங்கள் இளைஞர்களை நேர்முகத்தேர்வு செய்து வேலை வாய்ப்பை வழங்கிடவும், தீன் தயாள்  உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களை பயிற்சிக்கு தேர்வு செய்திடவும் உள்ளனர்.இம்மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாமில், விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ ஐ.டி.ஐ / டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வி பயின்ற 40 வயதுக்குள்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை உள்;ளிட்ட இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்) கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புக்களை பெறவும், இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு முதல் பொறியியல் வரை படித்த 35 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்று, குடும்ப அட்டை இதர ஆவனங்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சியை பெற்று பயனடையுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கம், தரை தளம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் அனுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 06, 2026

பதிவுத்துறையில் ஆவணப் பதிவிற்காக ஸ்டார் 3.0 புதிய மென்பொருள் திட்டத்தின் ஸ்பிரிண்ட் -1 செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதிவுத்துறையில் ஆவணப் பதிவிற்காக ஸ்டார் 3.0(Star 3.0) திட்டம், ஸ்பிரிண்ட் -1 உள்ளடங்கிய காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப் பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், புலன வழி தகவல் தொடர்பு, கைபேசி செயலி, மையக் கணினி வழி சான்றிட்ட நகல் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட வில்லங்கச் சான்று வழங்குதல், விரைவுக் குறியீட்டுடன் கூடிய புதிய குறு பணப்பரிவர்த்தனை (QR Code Based Payment) ஆகிய  சேவைகளுக்கு புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 22.01.2026 அன்று துவக்கி வைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி காகிதமில்லா ஆவணப்பதிவில் (Paperless Registration) ஆவணத்தை பொதுமக்கள் எழுதி பதிவுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணைய வழியில் பணம் செலுத்தி ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகளுடன் நேரில் ஆஜராகி, சார்பதிவாளர் ஆவணத்தில் கண்ட நபர்களை அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையினை இணைய வழி மூலம் சரி பார்த்து கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணம் பதிவு செய்யப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியிலேயே பொது மக்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வகை காகிதமில்லா ஆவணப்பதிவில் அனைத்து வகை ஆவணங்களும் பதிவு செய்யப்படும்.நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மேற்கண்ட ஆவணப்பதிவு பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தராமலேயே மேற்படி மென்பொருளை பயன்படுத்தி  ஆவணப்பதிவிற்காக,நேரடி வருகையில்லா ஆவணப்பதிவுக்கு சம்பந்தப்பட்ட ஏழு வகையான ஆவணங்கள் கட்டுமான நிறுவனத்திடமிருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலிருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும் முதல் கிரைய ஆவணத்தைப் பொருத்து(First Sale)  பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட சொத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்தோ பத்திரத்தை இணையதள வழியாக பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.மேலும், விற்பனை உடன்படிக்கை(Sale Agreement), குத்தகை ஆவணம் (Lease Deed/ Agreement of Lease), உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம் (Deposit of Title Deeds), இரசீது ஆவணம் (Deed of Receipt), சுவாதீனத்துடன் கூடிய அடைமான ஆவணம் (Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா அடைமான ஆவணம் (Mortgage wilthout Possession Deed),  சுவாதீனத்துடன் கூடிய மேல் ஈடு ஆவணம் (Further Charge Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா மேல் ஈடு ஆவணம் (Further Charge Mortgage without Possession Deed), அறக்கட்டளை ஆவணம் (Deed of Trust) ஆகிய 7 வகை ஆவணங்களை இணைய வழியே பதிவுக்கு தாக்கல் செய்யும்  போது சொத்தினை எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர்களின் அடையாளமானது விரல் ரேகை ஆதார் ஆணையத்துடன் சரிபார்க்கப்பட்டு இணைய வழி கட்டணம் செலுத்தியவுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியில் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.எனவே மேற்கண்ட காகிதமில்லா ஆவணப்பதிவு மற்றும் நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு ஆகியவற்றை பதிவுத்துறையின் இணையதளமான www.tnreginet.net என்ற இணையதளத்தில் ஆவண உருவாக்கம் குறித்தும், தங்களுக்கான சேவைகளை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே தாங்களே ஆவணத்தினை உருவாக்கி சேவையை எளிதாக பெற்றுக்  கொள்ளலாம் என மாவட்டப்பதிவாளர்(நிர்வாகம்) அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

Mar 05, 2026

வனமும், வாழ்வும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு வனத்துறை, திருவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்(திருவில்லிபுத்தூர் கோட்டம்) சார்பில் வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வனமும், வாழ்வும் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கும், மாவட்ட அளவிலான ஆசிரியர் பயிற்சி பட்டறையில் பயிற்சி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.03.2026) வழங்கினார்.மேலும், உலக வன உயிரின நாள்-2026 முன்னிட்டு இயற்கை பாதுகாப்பிற்கு மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு முயற்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பில் பங்களிப்பை, வழங்கிய 3 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் மற்றும் தலா ரூ.25,000/- பரிசுத்தொகைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், விருதுநகர் மாவட்டம் கோவிலார் அணை சூழல் சுற்றுலா  மையத்தில் ஈர நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் 20,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 அரசு மேல்நிலை/உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குள் உள்ள 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.மேலும், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் உயிரியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் தொகுப்புகளை கற்பிக்கும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை வனமும் வாழ்வும், உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.அவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்ட ஆசிரியர்கள், ஒவ்வொரு பள்ளியிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 வீதம் மொத்தம் 500 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சிகளை வழங்கியுள்ளனர். வன பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள், வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, மனித-விலங்கு மோதல் தடுப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கங்கள் இப்பயிற்சிகள் மூலம் வழங்கப்பட்டன.        இந்நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற 25 ஆசிரியர்கள் மற்றும் 500 மாணவர்களுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ரவி மீனா,இ.வ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், திருவில்லிபுத்தூர் உதவி வனப்பாதுகாவலர் திரு.ஞானப்பழம், வனச்சர அலுவலர்(சிவகாசி வன உயிரின சரகம்) திரு.பூவேந்தன், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 05, 2026

மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பொது சுகாதார கட்டடத்தினை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15- ஆவது நிதிக்குழு ஆணையம் சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பொது சுகாதார கட்டடத்தினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (04.03.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Mar 05, 2026

உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தின் கீழ் கருத்தாளர்களாக பணிபுரியவுள்ள ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (04.03.2026) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தின் கீழ் கருத்தாளர்களாக பணிபுரியவுள்ள ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள்  தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 500 மாணவர்கள் என மொத்தமாக 1500 முதல் 1600 வரை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.மேலும், அம்மாணவர்களை தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது? தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தருவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது என பல நோக்கங்களை கலந்துரையாடி ஒரே திட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அந்த திட்டம் தான் திசை. இந்த திட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவிகரமானதாக அமையும். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் ஆசிரியர்கள் செயல்படுவதோடு, மாணவர்களுக்கும் அந்த உணர்வை கற்பிக்க வேண்டும்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், பாடம் வாரியாக எடுக்க வேண்டிய மதிப்பெண்கள், உயர்கல்வியில் உள்ள துறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், முதுகலை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 29 30 31 32 33 34 35 ... 141 142

AD's



More News