விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (29.01.2026) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் [Tamil Nadu Wilderness Experiences Corporation (TNWEC)] சார்பில் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு முகாமிற்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம்(TNWEC) இணைந்து, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் (Environment Education Programme EEP) கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இயற்கை முகாம் செண்பகத்தோப்பு பகுதியில் நடைபெற்றது.இம்முகாமில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இயற்கை சூழலில் அனுபவக் கற்றலை பெற்றனர்.மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இயற்கையை பாதுகாக்கும் பொறுப்புணர்வை வளர்ப்பதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும் முகாமின் ஒரு பகுதியாக இயற்கை நடைபயணம், பறவை பார்வையிடல், அடையாளம் காணுதல் மற்றும் கலந்துரையாடல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டன.இந்நிகழ்ச்சியில் வன சரக அலுவலர், வனத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் (29.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், சாத்தூர் வட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பயிலும் 1075 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.பின்னர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பயிலும் 249 மாணவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 8,678 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6,562 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. அதில், இன்றைய தினம் சாத்தூர் வட்டாரத்தில் 1,075 மடிக்கணினிகளும், சிவகாசி வட்டாரத்தில் 1,551 மடிக்கணினிகளும், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 249 மடிக்கணினிகளும் என மொத்தம் 2,875 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.முன்னொரு காலத்தில் படிக்கிற பொழுது, முதலில் மணலை பரப்பி எழுத வைத்து பாடம் கற்பிக்கப்பட்டது. பிறகு சிலேட்டுகளில் எழுதி படித்தும், பின்பு சிலேடு உடைந்து விடுவதால் தகரத்தில் முலாம் பூசி சிலேடு பயன்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் பள்ளியில் சென்று அரசால் இலவசமாக சிலேடு, புத்தகம் கொடுப்பது என்பது மிகப்பெரிய காரியமாக இருந்தது.இன்று அதெல்லாம் பழமையாகி விட்டது. இன்றைக்கு நம்முடைய கையில் செல்போன் மற்றும் மடிக்கணிகள் உள்ளது. காரணம் என்னவென்றால் உலகம் மிக வேகமாக நகர்ந்து வருகிறது. அந்த உலகத்தோடு இணையாக மாணவர்களும் பயணிக்க வேண்டி இருக்கின்றது. அதனால், மாணவர்களை தயார் படுத்த வேண்டிய கடமை நம்முடைய அரசுக்கு இருக்கிறது.தற்போது கல்லூரி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் நிறைய பேர் கல்லூரிக்கு சென்றிருக்க மாட்டார்கள். கல்லூரிக்கு முன்னரே பெரும்பாலும் படிப்பை முடித்து விடுவார்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உங்களை எல்லாம் படிக்க வைத்திருக்கின்றார்கள். படிக்க வைத்ததற்கு பிறகு உங்களுக்கு திறன்களை வளர்க்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும்போது, அவர்கள் கொடுக்கக்கூடிய ஊதியத்திற்கு ஏற்றார் போல எவ்வளவு திறமை இருக்கிறது, நீங்கள் தகுதியாக இருக்கிறீர்களா என்று பார்க்கிறார்கள்.எனவேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அந்தத் திறன்களை வளர்ப்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக உங்களுடைய திறமைகளை வெளியே கொண்டு வரும் பணியை செய்கிறார்கள். அந்த திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கான பணியை செய்வதற்கு உறுதுணையாக இருக்கத்தான் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றஇளைஞர்கள் அதிகமாக இருக்கின்ற நாடு இந்தியா. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலம் இருக்கின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை சாமர்த்தியதனமாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் உருவாக்க வேண்டிய கடமை அரசினுடைய கடமை.கடந்த 5 வருடங்களில் மாவட்டத்தில், அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்போது வேலை வாய்ப்புக்கான தேவை அதிகமாக இருக்கிறது. வரும் காலங்களில் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களுக்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை நம்முடைய மாவட்டத்திலேயே உண்டாக்கக்கூடிய பணிகளை செய்து வருகிறோம்.நீங்கள் வேலைக்கு வேற மாவட்டத்திற்கு செல்ல தேவையில்லை. நம்முடைய மாவட்டத்திலேயே தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அதற்கு தேவையான சாலை வசதிகளும், விமான, துறைமுக வசதிகளும் இருக்கின்றன.திருப்பூர், சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை இல்லாமல் நம்முடைய பகுதிகளிலேயே வேலைவாய்ப்பை உண்டாக்கக்கூடிய பணியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆசியோடு உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு எப்படி படிக்காமல் இருந்த ஒரு சமுதாயத்தை படிக்க வைத்ததோ, அதுபோல, படிக்க வைப்பதோடு இல்லாமல் எதிர்காலத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்புகளை பல்வேறு இடங்களில் உருவாக்கித் தரக்கூடிய சூழ்நிலையை, அடுத்து வரக்கூடிய காலங்களில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்து கொடுப்பார்கள்.மாணவர்கள் மடிக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரக்கூடிய உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்பாமல், அதை ஆராய்ந்து, உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையை தெரிந்து கொண்டு எதிர்காலம் உங்கள் கையிலே வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கத்தான் உலகம் உங்கள் கையில் திட்டம். அதை நீங்கள் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் வேலை இல்லாத பட்டதாரிகள் இல்லை என்ற சூழ்நிலையை மாற்றி எல்லோருக்கும் வேலை கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்குவோம் என தெரிவித்தார்.தமிழ்நாட்டில், அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 8,678 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6,562 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.அதில், இன்றைய தினம் சாத்தூர் வட்டாரத்தில் 1,075 மடிக்கணினிகளும், சிவகாசி வட்டாரத்தில் 1,551 மடிக்கணினிகளும், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 249 மடிக்கணினிகளும் என மொத்தம் 2,875 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில் நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து கிராம நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், "கல்வி மூலம் சமூக மேம்பாடு தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், "உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும். இந்த மடிக்கணினிகளை நல்ல விதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் (28.01.2026), மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு, இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வரும் நிகழ்வினை முன்னிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, சாத்தூர் வட்டம், வெங்கடாசலபுரத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று சந்தித்து, உரிய பயிற்சி வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கான எதிர்காலத்திட்டங்களை செயல்படுத்தவும் தொடங்கப்பட்ட உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் படிவங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வெங்கடாசலபுரத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, சாத்தூர் நகராட்சி, தில்லை நகரில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, வாக்காளர் வரைவுப் பட்டியலில் 18-வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதமாக, படிவம்-6 வழங்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் (28.01.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழுவில் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் விளையும் நெல், பருத்தி விதை, உளுந்து, சோளம், எள், நிலக்கடலை, மிளகாய் வத்தல், கொப்பரை தேங்காய், பாசிப்பயறு, குதிரைவாலி, கம்பு, மல்லி, கரும்பு, வெல்லம், முந்திரி, சூரியகாந்தி விதை மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருட்களையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து உலர வைத்து காய வைப்பதற்கு உலர்கள வசதியும், விளைபொருட்களை சேமித்து வைக்க 17400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 16 குடோன்கள் பரிவர்த்தனை கூடம், ஏலக்கொட்டகை வசதியும் மற்றும் மூன்று குளிர்பதன கிட்டங்கி வசதியும் உள்ளன. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த அனைத்து வேளாண் விளைப்பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பயன பெற கேட்டுக்; கொள்ளப்படுகிறது. பொருளீட்டுக்கடன் வசதி :சிறு, குறு விவசாயிகளுக்கு,விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 50 சதவீதமும் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகள் கடன் பெற்ற 15 நாட்களுக்கு வட்டி கிடையாது. அதன் பிறகு 5 சதவீத வட்டி மட்டும் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக கிட்டங்கியில் விளைபொருட்களை 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்திட, ஏதுவாக வியாபாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகளிடம் இருந்து பொருளீட்டு கடனுக்காக 9 சதவீதம் வட்டியும் மற்றும் 180 நாட்கள் வரை இருப்பு வைத்து பயன் அடையலாம். FPO-களுக்கு ரூ.10.00 இலட்சம் வரை பொருளீட்டுக்கடன், 5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.குறைந்த வாடகையில் இருப்பு வைக்கும் வசதி: விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைப்பதற்கு நாள் ஒன்றுக்கு 1 குவிண்டாலுக்கு 25 பைசா வீதமும், வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு 1 குவிண்டாலுக்கு 50 பைசா வீதமும் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயன் பெறலாம். மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-National Agriculture Market): விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைகள் (e-NAM) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விளைபொருட்கள் தரப்பகுப்பாய்வு செய்யப்பட்டு மின்னணு முறையில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு உரிய கொள்முதல் தொகை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.விலை ஆதரவு திட்டம் (Price Support Scheme - PSS)மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின்கீழ் (Price Support Scheme - PSS) சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் வாயிலாக NAFED நிறுவனத்தின் மூலம் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.78/- என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதி விவசாயிகள் சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து 25.03.2026-க்குள் பதிவு செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் மற்றும் பொருளீட்டுகடன் பெறுவதற்கும் 9952341770 என்ற எண்ணில் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 8248405989 என்ற எண்ணில் இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 9003356172 என்ற எண்ணில் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 7904537699 என்ற எண்ணில் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைகூட மேற்பார்வையாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பூலாங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் (27.01.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நடைபெற்ற 26-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற 26-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏற்பட்ட பெருந்தொற்றான கொரனா நோய்த்தொற்றினை நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அணுகு முறையினாலும், உரிய நடவடிக்கைகளினாலும் அத்தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டார்.அந்நாளிலிருந்து, இம்மருத்துவத்துறை, சுகாதாரத்துறை நாளுமொரு வண்ணமாக வளர்ச்சியடைந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் என்று தொடங்கப்பட்டு, இன்றைய தினம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமாக உயர்த்தப்பட்டு மக்களுக்கு உயர்தர சிகிச்சையினை அளிக்கும் திட்டமாக உயர்ந்துள்ளது.இத்திட்டத்தின் மூலம், ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் நவீன உபகரணங்களை கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை, விருதுநகர் மாவட்டத்தில் 36-இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, 25-முகாம்கள் நிறைவுற்று, தற்பொழுது 26-ஆவது முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இம்முகாம்களிலேயே, ஏறத்தாழ 40,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். ஒரு சிறந்த ஆட்சி என்பது மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு செயலாற்றுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று வழங்குவது தான்.மருத்துவத்துறை அதிகாரிகள் தங்களது முழு நேரத்தையும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் பணியாற்றுகிறார்கள் என்று கூறினால் அதற்கு முழு காரணம் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் காரணம்.பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய தேவைகளை மருத்துவத்துறை அலுவலர்களிடம் எடுத்துக் கூறி, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.இன்றைய தினம், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில், 36-சிறப்பு மருத்துவ முகாம் நடத்த நிர்ணயிக்கப்பட்டு, தற்பொழுது 25-ஆவது முகாம் நிறைவுற்று 26-ஆவது முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கிராமப்புறங்களுக்கே வருகை புரிந்து, மக்களுக்கு தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி பயனடையமாறும், இத்தகைய திட்டத்தினை அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, 10-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 3-கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும், 3-நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகளையும், 2-நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளையும், 3-தூய்மை பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர் நல வாரிய அட்டைகளையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் திருமதி யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், குமிழங்குளம் ஊராட்சியில் (26.01.2026) 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2025 முதல்31.10.2025 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்தும், தொழிலாளர் வரவு - செலவு திட்டம் குறித்தும் வரவு - செலவு திட்டப் பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விபரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும்.இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் தேவைகளை அறிந்து இனி வரும் காலங்களில் படிப்படியாக பூர்த்தி செய்து தரப்படும்.தற்பொழுது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று , வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலுக்கு முன்னதாக 16,26,458 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தி கொள்ளவும்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் மூலம் மகளிருக்கான கடனுதவிகள், உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களின் தேவைகள் அறிந்து அதனை பூர்த்தி செய்தும், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ சிறப்பு முகாம் மூலம் சிறப்பு சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம் சார்பாக பள்ளிக்கல்வியினை தொடர இயலாத மாணவர்களின் இல்லங்களுக்கு மாவட்ட நிலை அலுவலர்கள் நேரடியாகச் சென்று, கல்வியினைத் தொடர இயலாத நிலையினை கண்டறிந்து அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கல்வியினைத் தொடர்வதற்காக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.மேலும், இரத்த சோகை குறைபாடுள்ள 430-கர்ப்பிணி தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1800-குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை அலுவலர்கள் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கேச் சென்று அளித்து வருகின்றனர்.இதுபோன்று பொதுமக்களின் குறைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, 2-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் ஆடு மற்றும் கறவை மாடு வளர்ப்பிற்காக மொத்தம் ரூ.60 மதிப்பிலான கடனுதவிகளையும், ஒரு நபருக்கு சிறு வணிகக் கடை அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் கடனுதவியும் என 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில் சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், வட்டார வளர்ச்சி அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.01.2026) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் வரவேற்றார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.15 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய 169 தலைமைக் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக ஒரு பயனாளிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் போர் கைம்பெண் கருணைத்தொகையும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.25,000/- போரில் ஊனமுற்றமைக்கான வருடாந்திர பராமரிப்பு மானியத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வரும் 19 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சிறப்பு இனங்களில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது சிறு சேமிப்பு தொகையை வழங்கிய பள்ளி மாணவனுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கும்,2 சிறந்த குருதிக் கொடையாளர்களுக்கும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் பொது வாழ்க்கைக்கான சிறந்த சேவை புரிந்தவருக்கும், ஒரு சிறந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கும், சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளருக்கும், சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு உதவிய எழுத்தாளருக்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் பயன்பெற்று முன்னேறி வரும் 5 பயனாளிகளுக்கும், 2 சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், ஒரு சிறந்த பள்ளிக்கும், சிறந்த இளம் தொழில் முனைவோர், சிறந்த பெண் தொழில் முனைவோர், சிறந்த மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர், சிறந்த வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சிறந்த விவசாயி, சிறந்த சுற்றுச்சூழல் ஊக்கி ஆகியோருக்கும், 2 சிறந்த தன்னார்வ கொடையாளர்களுக்கும், 2 சிறந்த அங்கன்வாடி பணியாளர்கள், 2 சிறந்த அங்கன்வாடி உதவியாளர்கள், 2 சிறந்த சத்துணவு பணியாளர்கள், 4 சிறந்த தொண்டு நிறுவனங்கள், 2 சிறந்த திருநங்கைகள், 11 சிறந்த ஊராட்சி செயலர்கள், 3 சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு சாலை பாதுகாப்புக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரியும் 2 தூய்மைப்பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த 12 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், நகராட்சியில் சிறப்பாக பணிபுரியும் 2 தூய்மைப்பணியாளர்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகள் துறையில் 2 பணியாளர்கள், தீயணைப்பு மீட்புத்துறையில் 3 பணியாளர்கள், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிபுரிந்தமைக்காக 4 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.2000/-ரொக்கப்பரிசு, சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைச் சார்ந்த 149 அரசு பணியாளர்களுக்கும், குடியரசு தின விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த 16 நபர்களுக்கும் என மொத்தம் 293 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), மாவட்ட அளவிலான அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், சூலக்கரை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று, குடியிருந்து வரும் 27 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது.மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டங்களில் ஒன்றாக நமது மாவட்டம் திகழ்கிறது.அந்த வகையில் அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 27 குடும்பங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகளை பெற்று குடியிருந்து வருவதாகவும், இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டார்கள்வழங்கிடவேண்டுமெனகோரிக்கைவைத்தனர்.அதனடிப்படையில், குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருவாய்த்துறையின் மூலம், 27 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களில் நாங்கள் குடியிருந்து வந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே வீடு தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டுக்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர் திரு.செந்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார்அவர்களின்131வதுபிறந்ததினத்தைமுன்னிட்டுஅன்னாரதுசிலைக்குமாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தியாகி சங்கரலிங்கனார் தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் எனப் போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல் ஆவார்.இவர் 1895-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26-ஆம் நாள் பெரிய கருப்பசாமி நாடார் - வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். 1914-ஆம் ஆண்டு பெண் கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1920-ஆம் ஆண்டு இராஜாஜியைச் சந்தித்தபோது அவரது சீடரானார். இவர் மாதர் கடமை என்னும் நூலை எழுதி வெளியிட்டார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப் பணியை மேற்கொண்டார்.திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாத சிறைத் தண்டனைப் பெற்றார். கரூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும், 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.தேசசேவையின் காரணமாக 1944-ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு, திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1951-ஆம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டார்.இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்திய வழியில் அதிக நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் தியாகச் செம்மலாக சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார். தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.77 இலட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.மேலும், விருதுநகர் மாவட்டத்தில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 26 மற்றும் நினைவு நாளான அக்டோபர் 13 - ஆம் நாளன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் இன்று (26.01.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா.ஆனந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.