25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Probationary Officers (PO)  பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான  அடிப்படை பயிற்சி வகுப்புகள் 27.08.2024 அன்று நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Probationary Officers (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள் 27.08.2024 அன்று நடைபெற உள்ளது

வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள  4455 Probationary Officers (PO) பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கு 01.08.2024 ஆம் தேதியிலிருந்து 21.08.2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் அடிப்படை பயிற்சி வகுப்பு  27.08.2024 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.
இவ்வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள்  https://forms.gle/AEWhBaLz1C4gvCB16  என்ற கூகுள் பார்ம் (Google Form)  மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
எனவே, இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News