25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 06, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும் பணி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (05.04.2024) மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S, அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  நடைபெற்றது.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 07.04.2024 அன்று அந்தந்த தொகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 05, 2024

வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   (04.04.2024) மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல், இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும்  தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில்,  பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி,  100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில்  கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று  வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று,  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அனைவரும் தவறாமல் நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,  தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 04, 2024

சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி, மணிக்கட்டி ஊரணியில் (03.04.2024) மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட வாக்காளர் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில்,  பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, சிவகாசி மாநகராட்சி மணிக்கட்டி ஊரணியில் மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட வாக்காளர் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மக்களவைத் பொதுத் தேர்தல் 2024-ல் எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாட்டினுடைய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து தொகுதிகளுக்கும்  வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு, மூன்று தேர்தல்களில் சுமார்  70 லிருந்து 75 சதவீதம் தான் வாக்கு பதிவாகி உள்ளது. அதாவது நாளில் ஒருவர் ஓட்டு போடுவதில்லை.தேர்தல் நாளன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறையும் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் மொத்தம் 1895 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் கடந்த தேர்தல்களில் சுமார் 20 வாக்குச் சாவடிகளில் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அந்த 20 வாக்குச் வாக்குச்சாவடிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள்; சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ளன.இப்பகுதியில் இந்த முறை முழுமையாக  மாநில சராசரியை விட அதிகமான மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். நகர்ப்புற பகுதியில் வேலைக்கு செல்லக்கூடிய கூடியவர்கள், இளைஞர்கள் மாணவர்கள் கூட அவர்களுக்கு வாக்குரிமை இருந்தும் வாக்குப்பதிவை கடந்த தேர்தலில் பதிவு செய்யலாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அதை எல்லாம் களைந்து அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள், மாணவர்கள், வேலைக்கு செல்ல கூடியவர்கள் அனைவரும் இந்த முயற்சியை கூட்டு முயற்சியாக இருந்து வாக்குப்பதிவை உயர்த்த வேண்டும் என்பதை உங்களுக்கு வலியுறுத்துவதற்காக இது போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகாசி பகுதியில் பல்வேறு தனியார் அமைப்புகள் சமூக பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளிலும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்று அனைத்து மக்களும் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கின்றதோ அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி  வாக்குப்பதிவு நாளன்று அனைவரும் வாக்களிப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் சிவகாசி பகுதியில் அதிக அளவில் வாக்குபதிவு நடைபெற நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உறுதி மேற்கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்; பலர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று, மணிக்கட்டி ஊரணி தொடங்கி சுமார் 8 கி.மீ நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பின்னர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் மக்களவை பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு, அதி நவீன மின்னனு திரை வாகனத்தில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் திரு.விஸ்வநாதன், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 04, 2024

எஸ்.எப்.ஆர் பெண்கள் கல்லூரியில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், எஸ்.எப்.ஆர் பெண்கள் கல்லூரியில்  (03.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தற்போது வாக்களிப்பதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் போதும் என்ற தகுதி மட்டுமே உள்ளது. ஆனால் நூறு வருடத்திற்கு முன் நடந்த தேர்தலில் எல்லோருக்குமான வாக்குரிமை இல்லை. வருமான வரி செலுத்துவோர் போன்ற குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே இருந்தது. பெண்களுக்கான ஓட்டுரிமையும் பிற்காலத்தில் தான் கிடைக்கப்பெற்றது.வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் இந்தியா முழுவதும் பெற்ற வாக்கு சதவீதம் 68 விழுக்காடு. தமிழ்நாட்டில் கடந்த சில தேர்தல்களில் சுமார் 71 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நன்கு மெத்த படித்தவர்கள் நிறைந்த நகர்ப்புற பகுதிகளில் தான் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. ஜனநாயகம் வழங்கி இருக்கக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.இன்று நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அதில் எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்வது இந்த தலைமுறைக்கான மிகப்பெரிய பிரச்சினையாக கூறப்படுகிறது. அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும்.வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும்  இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Apr 04, 2024

கரிசல்குளம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலபள்ளியில் நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தினை பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி புத்தகங்களை வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கரிசல்குளம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலபள்ளியில்  (03.04.2024) நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி புத்தகங்களை வழங்கினார்.

Apr 04, 2024

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில், (03.04.2024) மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, மக்களவைத் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதற்கும் 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தியும், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற இலச்சினை வரைபட வடிவில்(Image Formation) சுமார் 300 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நின்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில்,  பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சாதி, மதம், பொருளாதாரம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே வாக்கு தான். நமது வாக்குரிமையை பணம், பரிசுக்காக நாம் யாருக்கும் விட்டுத்தர கூடாது. நமது உரிமை இன்னொருவருக்கு அடகு வைக்க கூடாது. அதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். வாக்குக்கு பணம் வாங்கி விடுவது பரவி விட்டது என்றால் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது என்பது மிகவும் தவறானது என்பது குறித்து எல்லோருக்கும் வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.மகளிர் சுய உதவி குழு தலைவர்கள், செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உங்களுடைய பகுதியில் உறுப்பினர்கள், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் குடும்பத்திற்கும் அந்த விழிப்புணர்வு செல்லும். ஒரு நாள் தரக்கூடிய பணமோ அல்லது பரிசுப் பொருட்களுக்காக நமது வாக்கினை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை எல்லோருக்கும் வலியுறுத்தி மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் நீங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் வாக்குக்கு பணம் தரக்கூடிய அல்லது பெறக்கூடிய என இரண்டுமே தவறு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அனைத்து பெண்களும், நேர்மையாக வாக்களித்து உங்களைச் சார்ந்தவர்கள், உறவினர்கள் அண்டை வீட்டார்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திருமதி பேச்சியம்மாள், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 04, 2024

"Coffee With Colect" என்ற 64-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (03.04.2024) மக்களவைப் பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் நடைபெற்ற சிறப்பு "Coffee With Colect" என்ற 64-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீபஜெயசீலன் I A S, அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாக கலந்துரையாடினார்.

Apr 04, 2024

வாக்குச்சாவடி மையமான திருத்தங்கள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மாநகராட்சி, வாக்குச்சாவடி மையமான திருத்தங்கள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில்  (03.042024) மக்களவைப்  பொதுத் தேர்தல் 2004 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S ,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு  ஆலோசனைகளை வழங்கினார்.

Apr 03, 2024

ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள்

மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகர்புறம், பேரூராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, மக்களவைத் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படை;தன்மையுடன் நடைபெறுவதற்கும் 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தியும், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இலச்சினை வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து, அனைத்து தரப்பு வாக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொலைபேசியில் இலச்சினை ஒட்டுதல், நிச்சயம் வாக்களிப்பேன் என்ற தலைப்பில் செல்பி ஸ்டாண்ட், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி, மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கௌரவித்தல், மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு உறுதிமொழி பத்திரம் வழங்கி கையொப்பம் வாங்குதல்;, இருசக்கர வாகன பேரணி, மிதி வண்டி பேரணி, மாரத்தான், கிராம கலைநிகழ்ச்சிகள், இந்திய ஜனநாயக தேர்தலின் வரலாற்றை எடுத்துக்கூறும் புகைப்பட கண்காட்சி விழிப்புணர்வு பேருந்து, விழிப்புணர்வு பூங்கா அமைத்தல்  உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும், இளம் தலைமுறை மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு வினாடி வினா, கலந்துரையாடல் நிகழ்ச்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காபி வித் கலெக்டர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமும்,மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வாக்காளர்களையும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சென்றடையும் வகையில், என் வாக்கு என் உரிமை, 100 சதவிகிதம் வாக்களிப்போம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விசிறி, பலூன், பதாதைகள், சுவரொட்டிகள், அரசு கட்டடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் வரைதல், வாகனங்களில் ஒட்டு வில்லைகள், உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊரக பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 03, 2024

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை இணைய வழி கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள்

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  (02.04.2024) மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக இணைய வழி கணினி மூலம் சீரற்ற முறையில் (Randomization) சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணிகள், தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.மக்களவைத் தேர்தல்-2024 ஏப்ரல் -19 ந்தேதி நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1895 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய  வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1, நிலை -2, நிலை -3 மற்றும் 1200 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்குச்சாவடி அலுவலர் நிலை-4  என மொத்தம் 9,243 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 262 வாக்குச்சாவடி மையங்களில் 1281 அலுவலர்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 283 வாக்குச்சாவடி மையங்களில் 1391 அலுவலர்களும், சாத்தூர்  சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடி மையங்களில் 1380 அலுவலர்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 277 வாக்குச்சாவடி மையங்களில் 1350 அலுவலர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 256 வாக்குச்சாவடி மையங்களில் 1262 அலுவலர்களும், அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குச்சாவடி மையங்களில் 1243 அலுவலர்களும், திருச்சுழி  சட்டமன்ற தொகுதியில் 276 வாக்குச்சாவடி மையங்களில் 1336 அலுவலர்களும் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிளில்  1895 வாக்குச்சாவடி மையங்களில் 9243 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 61 62 63 64 65 66 67 68 69 70

AD's



More News