விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 14.10.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.கோட்ட அளவிலான கூட்டத்தில், விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காண விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும் நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டம், செம்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் (03.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. அதன்படி, காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டம், செம்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இம்முகாம்களில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் தார்பாய்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 11.10.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது. இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் MRF, V.V.V & SONS EDIBLE OIL, ROYAL ENFIELD ACADEMY, APOLLO PHARMACIES, MEENAKSHI MISSION HOSPITAL, LAKSHMI MILLS WORK COIMBATORE, SENTERSOFT TECHNOLOGIES, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/FBjDgJFUQc4ChtNc9 ஐ பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் (02.10.2025) அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் 157-வது பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.கதர் விற்பனை நிலையத்தில் கதர் இரகங்கள், பாலியஸ்டர் இரகங்கள், கண் கவர் பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், போர்வைகள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு இரகங்கள் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர்களுக்கு சீருடை வகைகளும் இவை தவிர அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு 8 தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் தங்களது மாத ஊதிய அளவிற்கு கதர் இரகங்கள் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பாலியஸ்டர், பட்டுக்கு இரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.பொது மக்களும், வாடிக்கையாளர்களும், அலுவலக பெருமக்களும், ஆசிரியர்களும், ஊராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்கள் வாங்கி பயன்பெறலாம்.விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.75.00 இலட்சம் மதிப்பிலான கதர் துணிகள் விற்பனை செய்து மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தினை பிடித்தது. அதுபோல் 2025-ம் ஆண்டிற்கும் இம்மாவட்டத்திற்கு ரூ.1 கோடி கதர் விற்பனைக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அனைவரும் கதர் மற்றும் பட்டு இரகங்களை காதி கிராப்ட்களில் வாங்கி பயன் பெறுவதுடன் தங்கள் நல் ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, விருதுநகர் இரயில் நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன், மாவட்ட குடிசைத்தொழில் ஆய்வாளர் திரு.தேவராஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், கதர் வாரிய பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஒகேசனல்; ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் மாவட்ட தீயணைப்புத் துறையின் சார்பில் 25.09.2025 அன்று தீ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த ஒத்திகை பயிற்சியில் பேரிடர் காலங்கள் மற்றும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பணிபுரிந்து வருகின்றோம் என்றும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், மீட்கப்பட்ட அவர்களை எவ்வாறு தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், தீ விபத்தின் வகைகள் குறித்தும், அதனை ஆரம்ப நிலையில் தடுக்கும் முறைகள் குறித்தும், பெரும் தீ விபத்துக்கள் மற்றும் ஆயில் தீ விபத்துக்களை எவ்வாறு தீயணைப்பு ஊர்திகளை கொண்டு எளிதில் அணைக்கலாம் எனவும் விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.மேலும், அவசர கால மீட்பு ஊர்தியில் உள்ள மீட்பு கருவிகளான மகிட்டா ஷா (அ) பவர் ஷா கட்டர் ரூ ஸ்பிரிட்டர், அயன் கட்டர், கான்கிரீட் கட்டர், ஹைட்ராலிக் கட்டர் அன்டு ஸ்பிரட்டர், மேனுவல் கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, ஏர் லிப்டிங் பேக், டெலஸ்கோபி லேடார், அஸ்காலைட், டோர் ஓப்பனர், மூச்சுக்கருவி, பி.பி. சூட், மிதவை படகு(இரப்பர் படகு), தீயணைப்பான்கள் போன்ற செயல்படும் விதங்கள் பற்றியும்,விபத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்க பயன்படுத்தும் இரண்டு கை முறை, மூன்று கை முறை, நான்கு கை முறை, உப்பு மூட்டை முறை, முதுகுக்குப் பின் முதுகு வைத்து தூக்குதல், குழந்தை தூக்குதல் முறை, உட்காரும் சேர் மூலம் மீட்டல், போர்வை மூலம் மீட்டல், தீயணைப்பாளர் தூக்கி போன்ற மீட்பு முறைகள் பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி அலுவலர்(தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை) திரு.பாலமுருகன், கல்லூரி தலைவர் திரு.டிக்காட் ஜாக்சன், பேராசிரியர் திரு.சரவணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, திருவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 8 ஆவது கட்டமாக நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, நேரில் சென்று பயனாளிகளின் விவரங்கள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமைத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரும் நாற்றங்கால் நர்சரி பூங்காவினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சம்மந்தபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையகமான மதி பல்பொருள் அங்காடியினை நேரில் சென்று பார்வையிட்டு, சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் தொழில் முனைவோர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்சம் வீதம் 3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குனர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சீர்மரபினர் நலவாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜாபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரெங்காபுரம் ஊராட்சி மேலகோதை நாச்சியார்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்கள் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மட்டுமே கடந்த ஆகஸ்ட் 2025 வரை 13,191 பயனாளிகளுக்கு இலவச இணைய வழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக வெம்பக்கோட்டை வட்டம், மேலகோதை நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்கள் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இந்த இடங்களுக்கான இணைய வழிபட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டாக்களை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து 16 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.எங்களுக்கு இந்த இடத்திற்கான ஒப்படை ஆணைகள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இணைய வழியிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே எங்களைத் தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளதால், நாங்கள் எந்த வித தயக்கமின்றி எங்களுக்கான இடங்களில் வீடுகள் கட்டி குடியேற முடியும். எங்களுடைய பலவருட பயத்தையும், பதட்டத்தையும் எங்களுக்கு இந்த பட்டாக்கள் வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியாக மாற்றியிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 23.09.2025 முதல் 29.09.2025 வரை சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரமாக 23.09.2025 முதல் 29.09.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசு சேவைகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி, சிறப்பு இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும், 23.09.2025 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் நீல நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இப்பேரணியில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள், செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், செவித்திறன் குறையுடைய பள்ளிக் குழந்தைகள், செவித்திறன் குறையுடைய சங்க பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரிதிநிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்திவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (29.09.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மூலம், மாவட்டத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரகாட்டம், பறை இசை, ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட மேலாளர்(எய்ட்ஸ் கட்டுப்பாடு), மேற்பார்வையாளர்கள், கோடாங்கி கலைக்குழு மற்றும் வெண்மணி கிராமிய கலைக்குழுவினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.