விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரிபள்ளியில் நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு நீட் தேர்வில் படித்து வெற்றி பெறுவதற்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் (08.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தற்போது வாக்களிப்பதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் போதும் என்ற தகுதி மட்டுமே உள்ளது. ஆனால் நூறு வருடத்திற்கு முன் நடந்த தேர்தலில் எல்லோருக்குமான வாக்குரிமை இல்லை. வருமான வரி செலுத்துவோர் போன்ற குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே இருந்தது. பெண்களுக்கான ஓட்டுரிமையும் பிற்காலத்தில் தான் கிடைக்கப்பெற்றது.வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் இந்தியா முழுவதும் பெற்ற வாக்கு சதவீதம் 68 விழுக்காடு. தமிழ்நாட்டில் கடந்த சில தேர்தல்களில் சுமார் 71 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நன்கு மெத்த படித்தவர்கள் உள்ள நகர்ப்புற பகுதிகளில் தான் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. ஜனநாயகம் வழங்கி இருக்கக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.இன்று நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அதில் எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்வது இந்த தலைமுறைக்கான மிகப்பெரிய பிரச்சினையாக கூறப்படுகிறது. அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும்.வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கலந்து கொண்ட முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நகராட்சி மாரியம்மன் கோவில் அருகில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, கலைக்குழுவினரின் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (08.04.2024) துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் 18 வயது நிரம்பிய முதல் மற்றும் இளம் தலைமுறை, மாற்றுத்திறனளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும், பொதுமக்களிடையே நேரடியாக விளக்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் மூலமாகவும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டி, வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்குதல், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகள், வங்கிகள், வங்கி ஏ.டி.எம் மையங்கள், தபால் நிலையம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் (ளுவiஉமநசள) ஒட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் திரையிடுதல், தொலைகாட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் சாத்தூர் பேருந்து நிலையத்திலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் ஆலங்குளம் பேருந்து நிலையத்திலும், விருதுநகர் வட்டத்தில் மாரியம்மன் கோவில் அருகிலும், இராஜபாளையம் வட்டத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் முத்தாலம்மன் கோயில் திடலிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் ஆண்டாள் திருக்கோயில் வளாகத்திலும், சிவகாசி வட்டத்தில் சிவன் கோயில் வளாகத்திலும், காரியாபட்டி வட்டத்தில் காரியாபட்டி பேருந்து நிலையத்திலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் சிவன் கோயில் அருகிலும், திருச்சுழி வட்டத்தில் பேருந்து நிறுத்தத்திலும் தேர்தல் விழிப்புணர்வு பொதுமக்களை எளிதாக சென்றடையும் வகையில், கலைக்குழுவின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதன்படி, விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகில் கிராமிய கலைக்குழுவினரின் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(08.04.2024) மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1895 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 145 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 145 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.202- இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 15 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203- திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 7 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 19 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 28 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 38 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 145 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.தேர்தல் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிந்து, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள்தெரிவித்தார்.இக்கூட்டத்தில்மாவட்டமுன்னோடிவங்கிமேலாளர்திரு.பாண்டிச்செல்வம், வங்கி பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் (06.04.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விசிறியினையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக மதுரை சாலை வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், வட்டாட்சியர், உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் (07.04.2024) உலக சுகாதார தின நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் ஏப்ரல் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நோயை வரும் முன் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு எது மாதிரியான விழிப்புணர்வை நாம் தருகின்றோம் என்பது முக்கியம். சரியான உணவு, ஓய்வு, உடல் உழைப்பு இந்த மூன்றும் சரியாக இருந்தால் ஏறத்தாழ 70 சதவீத வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் வருவதை தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நமது மாவட்டத்தில் பள்ளிகள் படிக்கக்கூடிய வளரிளம் பெண்கள் 13 வயதிலிருந்து 17 வயது வரை இருக்கக்கூடிய பெண்களில் இரத்தசோகை என்று சொல்லக்கூடிய ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கக்கூடிய குறைபாடு தொடர்பாக பரிசோதனை செய்ததில் ஏறத்தாழ பாதி பெண் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நோய் கிடையாது, இது ஒரு சத்துக் குறைபாடு ஆகும். ஆனால் இதனை சரி செய்வதற்கான ஒரே வழி அவர்களுக்கு சத்தான உணவை கொடுப்பது.இவற்றை கண்டறியாமல் விட்டுவிட்டால் அந்தப் பெண் திருமணம் ஆகி குழந்தைக்கு தாயாக உருவாகின்ற பொழுது அவர்களுக்கும், அந்த குழந்தையின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இந்த ரத்த சோகை குறைபாட்டினை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதனை தவிர்க்கலாம்.உலகத்தில் அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருக்கக்கூடிய நாடாக 2030-ல் நமது நாடு வரப்போகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போதும் கூட கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் 10 இல் மூன்று அல்லது நான்கு நபர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உணவு பழக்க வழக்கம் மாறுதலினாலும், தூங்கக்கூடிய நேரம் குறைந்துவிட்ட காரணத்தினாலும் இது மாதிரியான வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் வருகின்றன.உடல்நலத்திற்கு மிக முக்கியமானது சரியான உணவு, சரியான ஓய்வு, சரியான உடல் உழைப்பு இந்த மூன்றும் இல்லை என்றால் நம் உடல் நோயை உருவாக்கிக் கொண்டே இருக்கும். மேலும் உடல் நலத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே போல் மன நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான்கு நபர்களில் ஒருவருக்கு சற்று மனநலப் பிரச்சனையோடு இருக்கிறார் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனநல நோய்க்கு என்று தனியாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஆலோசனைகளை பெறுவதில் ஒரு சமூக தடை இருக்கின்றது. எதிர்மறையான பார்வை சமூகத்தில் இருக்கின்றது. இவற்றையெல்லாம் போக்கி பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு மாதங்கள் சரியான சிகிச்சை மேற்கொள்ளும் போது அது சரி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இன்று நிறைய மருத்துவ வசதிகள் இருக்கின்றன. நமது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. உடல் மற்றும் மன நலம் சார்ந்து நிறைய கருத்துக்களை பொது மக்களுக்கு எடுத்துச் சென்று சொல்வதிலும், அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களினுடைய உடல், மனநலத்திற்கு தங்களுடைய பணியை அர்ப்பணித்து கொள்வதற்கு இந்த நாளில் உறுதி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.மேலும், மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும், இந்த நிகழ்ச்சியில் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.முன்னதாக மரு.சுசித்ரா தேவி மனநலம் குறித்து பேசினார். குடிபோதையில் இருந்து விடுபடுவது மற்றும் அதற்கான மன நல பிரச்சனைகள் சார்நத உணர்வில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவனையில் அதற்கான சிகிச்சை “குடி மற்றும் போதை மறுவாழ்வு” சிகிச்சை பிரிவு மூலம் வழங்கபடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார். குழந்தைகள் நலம் குறித்து மரு.மஞ்சு பார்கவி குழந்தைகளுக்கு பாலூட்டும் முறை குறித்தும், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பது குறித்தும் எடுத்துரைத்தார். மரு.அருணாச்சலம் வயதான பின்பு வரும் நோய்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் மற்றும் அவர்களை கவனித்து கொள்ளும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.அதை தொடரந்து, அரசு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்ட கைகழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு நடனம் மற்றும் மருந்தியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் குடிபோதை விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அலுவலர் மரு.கா.இளங்கோவன், மரு.ச.ஜெகமணி,மருத்துவர்கள்,செவிலியர்கள், மருந்தியல் கல்லூரி மாணவர்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.வாக்குச் சாவடி தலைமை அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர்கள் 1, 2, 3 என வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற இருக்கும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப் பதிவு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.இதில் 202-இராஜபாளையம் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற பி.ஏ. சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் 1281 அலுவலர்களுக்கும், 203-திருவில்லிபுத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கலசலிங்கம் பல்கலை க்கழகத்தில் 1391 அலுவலர்களுக்கும், 204-சாத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் 1380 அலுவலர்களுக்கும், 205- சிவகாசி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளியில் 1350 அலுவலர்களுக்கும், 206-விருதுநகர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1262 அலுவலர்களுக்கும் , 207-அருப்புக்கோட்டை தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற தேவாங்கர் கலைக்கல்லூரியில் 1243 அலுவலர்களுக்கும், 208- திருச்சுழி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற சேது தொழில் நுட்ப பயிலகத்தில் 1336 அலுவலர்களுக்கும் என மொத்தம் 9243 அலுவலர்களுக்கு பயிற்சிகள் நடைபெற்றன.இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது.மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரத்தில் 09.04.2024, 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தினங்களில் வட்டார அளவிலான கபாடி போட்டிகள் நடைபெற உள்ளது.அதன்படி, 09.04.2024 அன்று நரிக்குடி வட்டத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சாத்தூர் வட்டத்தில் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியிலும்,10.04.2024 அன்று திருச்சுழி வட்டத்தில் எஸ்.பி.கே கல்லூரணி மேல்நிலைப் பள்ளியிலும், விருதுநகர் வட்டத்தில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், சிவகாசி வட்டத்தில் கே.எம்.கே.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் திருவில்லிபுத்தூர் மங்காபுரம் மேல்நிலைப் பள்ளியிலும்,11.04.2024 அன்று அருப்புக்கோட்டை வட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காரியாபட்டி வட்டத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், இராஜபாளையம் வட்டத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், நரிக்குடி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97912-29305 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08322 என்ற தொலைபேசி எண்ணிலும், சாத்தூர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94864-97010 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89912 என்ற தொலைபேசி எண்ணிலும், வெம்பக்கோட்டை வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94864-27621 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08294 என்ற தொலைபேசி எண்ணிலும், வத்திராயிருப்பு வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 89254-91170 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 89258-09644 என்ற தொலைபேசி எண்ணிலும்,திருச்சுழி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94453-83316 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08317 என்ற தொலைபேசி எண்ணிலும், விருதுநகர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97916-34373 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08304 என்ற தொலைபேசி எண்ணிலும், சிவகாசி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 99444-24654, 98650-71770 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89921 என்ற தொலைபேசி எண்ணிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 84282-72694 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89916 என்ற தொலைபேசி எண்ணிலும்,அருப்புக்கோட்டை வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 99941-03896 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89919 என்ற தொலைபேசி எண்ணிலும், காரியாபட்டி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94424-18663 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 89258-09649 என்ற தொலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97893-83956 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08278 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.வட்டார அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.5000-மும், மூன்றாவது பரிசாக ரூ.3000-மும் வழங்கப்படும். பின்னர் மாவட்ட அளவில் 13.4.2024 அன்று நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50,000-மும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா ரூ.25,000-மும் வழங்கப்படும்.போட்டியின் விதிமுறைகள் :1. நேர்மையாக மற்றும் 100 % வாக்குப்பதிவினை வலியுறுத்தி 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்/பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு கபாடி போட்டி நடத்தப்படுகிறது.2. ஆண்களுக்கான கபாடி போட்டியானது 11 வட்டாரங்களில் நடத்தப்பட்டு( Selection Match), போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பெற்ற அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும்.3. பெண்களுக்கான கபாடி போட்டியானது மாவட்ட அளவில் மட்டும் நடைபெறும்.4. போட்டியாளர் குறிப்பிட்ட ஒன்றியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்;.5. ஆதார் அட்டை கண்டிப்பான முறையில் எடுத்து வர வேண்டும்.6. 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள இயலும்.7. சாதி, கட்சி - தொடர்பான உடைகள் அணிந்து வரக்கூடாது.8. அனைத்து நிகழ்வுகளிலும் நடுவரின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.9. காலை 06.00 மணிக்குள் அனைத்து அணிகளும் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும்.10. ஒன்றியத்தில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.11. 08.04.2024-அன்று மாலை 6 மணிக்குள் முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும். (இணைப்பு I-ல் உள்ள பொறுப்பு அலுவலர்களிடம்). போட்டி நாளன்று அணிகள் பதிவு செய்ய இயலாது.12. 3 கட்டமாக வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்படும். (இணைப்பு I-ல் உள்ளவாறு).13. போட்டிகள் காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும்.14. போட்டிகள் இயற்கை ஆடுகளத்தில் நடைபெறும்.பெண்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பதிவு செய்திட கீழ்க்கண்ட பொறுப்பு அலுவலரிடம் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.பொறுப்பு அலுவலர்கள் விபரம் :1. ஏ.பி.எஸ்.ராஜா - 94881512142. பி.கனி முத்துக்குமரன் - 99945119663. பி.விவேகானந்தன் - 9865071770இந்த போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (06.04 2024) விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் முன்னிட்டு, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களவைத் பொதுத் தேர்தல் 2024 யை முன்னிட்டு முனைவர் வீ.பஜெயசீலன் I A S, அவர்கள் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கல்லூரியில் (05.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மக்களவை பொதுத் தேர்தல் 2024- எதிர் வரும் ஏப்ரல் -19 அன்று நடைபெறயுள்ளதை முன்னிட்டு, இந்த தேர்தலில் மாவட்டத்தில் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும், வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஜனநாயகத்தில் வெளிப்படையான, நியாயமான முறையில் பொதுமக்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தெரிவு முறைதான் தேர்தல். அந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான ஒரே தகுதி 18 வயது பூர்த்தி அடையந்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான்.18 வயது நிரம்பியவர்கள் முதலில் வாக்களார் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். அதற்காக வருடத்தில் நான்கு முறை வாக்களர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்களார் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் இணையதளம் வழியாக தங்களது வாக்களார் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொளள்லாம்.வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.இன்று நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அதில் எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்வது இந்த தலைமுறைக்கான மிகப்பெரிய பிரச்சினையாக கூறப்படுகிறது. அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் நடைமுறை, வேட்பாளர்கள், வேட்பாளர்கள் தெரிவு செய்யும்முறை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.