25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 17, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் (16.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.  இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று(16.09.2025) இராஜபாளையம் நகராட்சி வைத்தியநாதபுரம், சிவகாசி மாநகராட்சியில் ஜே.ஏ.போஸ் மஹால்,  திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு,  வெம்பக்கோட்டை வட்டம் வெம்பக்கோட்டை, விருதுநகர் வட்டம் மூளிப்பட்டி, சாத்தூர் வட்டம் சிறுகுளம்  ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி, வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, இம்முகாமில் குடும்ப அட்டை வேண்டி மனு அளித்தவர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.முன்னதாக, வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள், மருந்து பொருட்களின் இருப்பு,  மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Sep 17, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 19.09.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 19.09.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.                        இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, TVS SUNDARAM BRAKE LININGS, BALASANKA TVS,DEVENDRAN PLASTICS, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற25-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 19.09.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் இச்சேவையானது  முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.              இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.              மேலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 17, 2025

அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிபயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு 30.09.2025 வரைகாலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 30.09.2025 வரை சேர்க்கை நடைபெறுகிறது.எனவே ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மற்றும் மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.          விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது. மாதாந்திர உதவித்தொகை ரூ.750- வழங்கப்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- உதவித் தொகை வழங்கப்படும்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும், 2 செட் சீருடை தையற்கூலியுடன் வழங்கப்படும், பாடநூல்கள் மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும், விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும், மூடு காலணி வழங்கப்படும், கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும், அடையாள அட்டை வழங்கப்படும், தேர்வுக்கு கட்டண விலக்கு வழங்கப்படும்.மேலும்,பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில், வளாக நேர்முகத்தேர்வு நடத்தி (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொழிற்நிறுவனங்களின் தகுதி நிலைக்கேற்ப வழங்கப்படும்.இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 16, 2025

நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களை அவர்கள் வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (15.09.2025) பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் ஈட்டும் பெற்றோர்கள் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு கல்வி பராமரிப்பு செலவினத்திற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 105-பள்ளி மாணவர்களுக்கு ரூ.76 இலட்சத்துக்கான வைப்பு நிதிக்கான பத்திரங்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களை  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.அதன்படி,  விபத்து காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் அல்லது நிரந்தர முடக்கம் காரணமாக வருவாய் ஈட்ட இயலாத பெற்றோரின் குழந்தைகளுக்கு அவர்களின் கல்வியினை இடைநிற்றல் இன்றி தொடர்வதையே முதன்மை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில்,  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களில், பெற்றோரை இழந்த அல்லது நிரந்த முடக்கம் அடைந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் அனுமதி அளிக்கப்பட்டு, அந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.மேலும், அம்மாணவ/மாணவியர்களின் தங்களின் கல்வியினை, வைப்புத் தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்தும்,  முதிர்வுத் தொகையிலிருந்தும் தொடரும் வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்த வகையில்,  விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தொடக்கக்கல்வி பயிலும் 33 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதமும், பள்ளிக்கல்வி பயிலும் 11 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதமும் மற்றும் 61 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதமும் என மொத்தம் 105 மாணவர்களுக்கு ரூ.76 இலட்சத்துக்கான வைப்பு நிதிக்கான பத்திரங்கள்  வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகள் சிறப்பினையும், கல்விக்கு அரசுப் பள்ளிகள் ஆற்றிய பங்களிப்பினை கொண்டாடும் வகையில்  “நூற்றாண்டு திருவிழா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 24 அரசு தொடக்கப் பள்ளிகள், 5-அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 02-அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன்,  திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல்,  முதன்மை கல்வி அலுவலர்திரு. மதன்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 16, 2025

பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவிதொகைக்கான ஆணைகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (15.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைரூ.4.46இலட்சம்மதிப்பிலானஆணைகளைவருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும், இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் இதற்கான முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடி ரூபாயை அரசு வழங்கும் எனவும் அறிவித்தார்.அதனடிப்படையில், பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) மாதந்தோறும் ரூ.2000/-மும் மற்றும் தாய், தந்தை இருவரும் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) ரூ.4000/- மும் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், முதற்கட்டமாக கட்டமாக, பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த 79 குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.10.82 இலட்சம் மதிப்பிலான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, இன்று இரண்டாம் கட்டமாக கடந்த பட்டாசு விபத்துக்களில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு நவம்பர் 2024 முதல் ஆகஸ்ட்-2025 வரையிலான மாதங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4.46 இலட்சத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்று பட்டாசு தொழிற்சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான கல்வி செலவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், திட்ட இயக்குநர் ( தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.பி.ராஜ்குமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், பட்டாசு தொழிலாளர்களுடைய குழந்தைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Sep 16, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை அறிவித்தவுடனே அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையம் தற்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கென ‘சிறப்புத் தீவிரத் திருத்த” (Special Intensive Revision – SIR)  பணிகளை மேற்கொள்ள உத்தேசித்து இதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக அனைத்து மாநிலங்கள்  / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை கடந்த 10.09.2025 அன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM)  இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.இம் மாநாட்டில் ‘சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆணையம் மதிப்பீடு செய்தது. பீகார் மாநிலத்தில் நடைபெற்றுவரும் ‘சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகளில் பின்பற்றப்பட்ட உத்திகள், கட்டுப்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விளக்கக்காட்சி பீகார் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்டது.ஒவ்வொரு மாநிலத்திலும், இதற்கு முன்னர் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட தேதி மற்றும் அத்திருத்தத்தின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, அச்சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பின்னர் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பதிவேற்றுவது குறித்த நிலையையும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது பட்டியலில் உள்ள வாக்காளர்களை, கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் போது இருந்த வாக்காளர்களுடன் இணைப்பதற்கான நிலையையும் அவர்கள் வழங்கினர்.எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் நிலையும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதையும், மேலும், அதில் தகுதியற்ற எந்தவொரு நபரும் சேர்க்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், தகுதியுள்ள குடிமகன் எவரும் எளிதாக சமர்ப்பிக்கும் வகையில் ஆவணங்கள் அமைந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான அனைத்துப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 100 வயதைக் கடந்த வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்த்தல், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் பெறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்யும் பணி மற்றும் அவர்களது மாற்றுத்திறன் குறித்த விபரத்தைப் பதிவு செய்யும் பணி ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்புச் செய்யும் பொருட்டு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்களும் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 15, 2025

ஆனைக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று  ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆனைக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் தனியார் நிறுவனமான சுரபி அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் (13.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

Sep 15, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  (13.09.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்  தொடங்கி வைத்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற மாபெரும் மருத்துவ முகாம்   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிந்தையில் உதித்த முத்தான  திட்டங்களிலே ஒன்றாக அமைந்து தமிழ்நாட்டில் கடைக்கோடியில், பட்டி தொட்டிகளில் இருக்கக்கூடியவர்களை  நாடி சென்று அவர்களுக்கு பரிசோதனைகள் வழங்கும் திட்டமாக இன்றைக்கு உருவாகி இருக்கிறது. இந்த 4 ஆண்டுகால ஆட்சியில்  நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வி, சுகாதாரம் இரண்டிலும் மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நரிக்குடியில்  இந்த முகாமில் பார்க்கின்ற பொழுது இந்த கிராமத்தில் இருந்து மட்டுமல்ல, இந்த ஒன்றியத்தினுடைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று கூடியிருக்கக் கூடிய காட்சியை பார்க்க முடிகிறது.இந்த முகாமில் பல்வேறு துறையினுடைய வல்லுனர்கள்  இங்கே இருக்கிறார்கள். உங்களின் மருத்துவ பரிசோதனைக்காக  விருதுநகர், அருப்புக்கோட்டை நகர்ப்பகுதி மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய  வசதிகள்  நம்முடைய கிராம பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் சிறப்பு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அது குறித்து, அந்த கிசிச்சைக்கான காப்பீடுகள்  உடனே கிடைக்கும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.மருத்துவத்துறையிலே இது மாபெரும் திட்டம். நம்மைக் காக்கும் 48, இன்னுயிர் காப்போம் திட்டம், நலம் காக்கும் மருத்துவம் போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதாக உள்ளது. இந்த திட்டங்கள் மக்களிடம் பாராட்டை பெற்று  மக்களிடையே நம்பகமான திட்டமாக  இந்தியாவிலே முதன்மை இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக நமது முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார். எனவே இந்த முகாமினை இப்பகுதிகள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது  02.08.2025 அன்று  முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,     நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது., இன்று (13.09.2025) ஆறாவது கட்டமாக நடைபெறும்  இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதன்படி, இன்று நரிக்குடி, மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை  நிதி, சுற்றுச்சூழல்  மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.

Sep 13, 2025

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் (12.09.2025) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா. I. A. S.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகலினையும், பட்டா வேண்டி மனு அளித்து, திர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும் மின் இணைப்பில் பெயர் மாற்றும் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசிலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றும் செய்த நகலினையும் வழங்கினார்.

Sep 13, 2025

”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் 13.09.2025 அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 02.08.2025 அன்று சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதல் முகாமில் சுமார் 1200 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அதன்படி,13.09.2025 அன்று  நரிக்குடி  மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவு நோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன.    மேலும், இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சன்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு இச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

1 2 ... 65 66 67 68 69 70 71 ... 138 139

AD's



More News