விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பேருந்து நிலையத்தில் (22.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சியினைமாவட்டதேர்தல்அலுவலர்மாவட்டஆட்சித்தலைவர்முனைவர்வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார்.மேலும், “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும், தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என்ற உறுதிமொழியோடு கையெழுத்திட்டனர்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி சாத்தூர் பேருந்து நிலையத்தில், இன்று வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.பின்னர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு கணினி அறையில் (22.03.2024) மக்களவை பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட இணையவழி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி (First Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மக்களவைப் பொதுத் தேர்தல்-2024-யை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்றத் தொகுதியான அல்லம்பட்டி சாலை மற்றும் மதுரை - தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் இரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மக்களவைப் பொதுத்தேர்தல் -2024 இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 16.03.2024 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 21 பறக்கும் படை, 21 நிலையான கண்காணிப்புகுழு, 7 வீடியோ கண்காணிப்பு குழு ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை குழுக்கள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற விகிதத்தில், ஒரு துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர், ஒரு சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 விடியோகிராப்பர் என 6 நபர்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள 21 பறக்கும் படை வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவிகள் பொறுத்தப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற விகிதத்தில், ஒரு துணை வட்டாட்சியர் அதற்கு மேற்பட்ட நிலையிலான அலுவலர், ஒரு சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 விடியோகிராப்பர் என 6 நபர்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், மாவட்டத்தில் 7 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு துணை வட்டாட்சியர் அதற்கு மேற்பட்ட நிலையிலான அலுவலர், துணை அலுவலர் என 2 நபர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும், தேர்தல் கட்டுப்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உடைய C-VIGIL என்ற தொலைபேசி செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று(21.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கை வாக்காளர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கை வாக்காளர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திருநங்கை வாக்காளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கருமாரிமடம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தில் பங்கு கொள்வீர் என்ற உறுதிமொழி பத்திரத்தினை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் மாணவர்களிடம்,“பாராளுமன்றத் தேர்தலில் மக்களாட்சியின் மீது பற்றுடனும், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவேன் என்றும். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்பேன் என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்." என்ற உறுதிமொழி அடங்கிய பத்திரத்தில் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கி வருமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
கோடை காலம் ஆரம்பித்துள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் வெப்பக்காற்று தாக்கத்தால் பொது மக்கள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.வெப்பக்காற்று என்பது 3 டிகிரி செல்சியஸ் சாதாரண வெப்ப நிலைக்கு மேல் 3 நாட்களோ அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இருந்தால் அது வெப்ப நிலையிலிருந்து 50 டிகிரி செல்சியஸ்க்கு மேல் ஐந்து நாட்களோ அல்லது அதற்குமேற்பட்ட நாட்கள் இருந்தாலோ அல்லது எந்த பகுதியிலுள்ள உயர் தட்ப வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் இரண்டு நாளுக்கு மேல் இருந்தாலோ அல்லது வெப்பக்காற்றாகும்.பருவமழைக்கு முன்னர் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வெப்ப காற்று காலமாகும்.வெப்பக்காற்று காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை:-• உள்ளூர் தட்பவெப்ப அறிவிப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்தும், வானொலியில் கேட்டும், நாளிதழ்களில் படித்தும் தெரிந்து கொள்ளுதல்.• தாகமின்றி இருந்தாலும் தேவையான அளவு குடிநீர் அருந்துதல்.• லேசான இளம்வண்ண தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், சூரிய ஒளியில் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பிற்கான கண்ணாடி, குடை, தொப்பி, காலணிகள் அணிதல்.• வெளியில் பணிபுரியும் பொழுது தொப்பி, குடை, துணி ஆகியவற்றை தலை, கழுத்து, முகம் மற்றும் கை கால்களில் பயன்படுத்துதல்.• உடலில் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்கும் பொருட்டு உப்பு சர்க்கரை கரைசல் வீட்டில் தயாரிக்கும் நீராகாரங்களான லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மோர் போன்றவற்றை பயன்படுத்துதல்.• வெப்பக்காற்று தாக்குதல் அறிகுறிகளான வெப்பக் கொப்பளங்கள் தோன்றுதல் உஷ்ண பாதிப்புகளான உடல் தளர்ச்சி, தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வியர்த்தல், வலிப்பு குறித்து தெரிந்து இருத்தல். உடல்நலக்குறை நினைவின்மை ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை அணுகவும்.• கால்நடைகளை நிழலில் வைத்து பராமரித்தல், அதிக அளவு குடிநீர் கொடுத்தல்.• வீட்டிலுள்ள திரை சீலை, நிழற்தட்டி மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து வீட்டை குளிருடன் வைத்திருத்தல்.• பணிபுரியும் இடங்களில் குளிர்ந்த குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தல்.• சூரியஒளி நேரடியாக படுமாறு தொழிலாளர்கள் பணிபுரிதல் தடுத்தல்.• பகலில் குளிரான நேரங்களில் கடினமான உடலுழைப்பை மேற்கொள்ள திட்டமிடுதல்.• வெளிப்பணிகளின் போது ஒய்வு நேர அளவை அதிகரித்தல்.• கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துதல்.வெப்பக் காற்று காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க கூடாதவை:• நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் விட்டு செல்லுதல் கூடாது.• நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சூரியஒளி உடலில் படாதவாறு பார்த்துக் கொள்ளுதல்.• கருப்புநிற, கடினமான, இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்கவும்.• நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளி வேலை பார்ப்பது மற்றும் அதிக உஷ்ணநிலை இருக்கும்பொழுது கடினமான உடலுழைப்பை மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.• சமயலறை கதவு, ஜன்னல்கள் திறந்த நிலையில் காற்றோட்டமாக இருக்க செய்வதுடன், அதிக உஷ்ணமான நேரங்களில் சமையல் செய்வதும் தவிர்க்க வேண்டும்.• மதுபானங்கள், டீ, காபி மற்றும் காற்றடைக்கப்பட்ட பானங்கள் ஆகியவை உடலில் நீர் இழப்பு ஏற்பட செய்யக் கூடியவை. எனவே அருந்துவதை தவிர்க்கவும்.• அதிக புரதமுள்ள உணவு மற்றும் பழையக் கெட்டுப்போன உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.மேலும், இது தொடர்பான விவரங்கள் மாவட்ட அவசர செயல்பாட்டு மையம், தொலைபேசி எண்-1077 (04562-252017)-ல் தொடர்பு கொள்ளவும். கோடை கால வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் பொருட்டு தரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், குடிநீர் வாரியத்திற்கும், நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், தேவையான சிகிச்சை அளிக்குமாறும், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
விருதுநகர், அழகாபுரி கிராமத்தில் இன்று(20.03.2024) மூத்த வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதிக முறை ஜனநாயக கடைமையாற்றிய மூத்த குடிமக்களாகிய உங்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தற்போது வாக்களிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் மூத்த குடிமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். மக்களாட்சி தத்துவத்தில், பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்ட எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வாக்களிப்பதின் அவசியம்; குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாட்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் தவறாமல் வாக்களித்து மற்ற வாக்காளர்களுக்கு ஒரு உந்துகோலாக அமைய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, அழகாபுரி கிராமத்தில், கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், நியாய விலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்று வாக்களிக்க கூடாது என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டு வில்லைகளை (sticker) ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வகை இரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு முத்திரையிடும் பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திருமதி மகேஷ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி சூரியகுமாரி, மண்டல துணை வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர், தேர்தல் அலுவலர்கள், களப்பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் (17.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,IAS., அவர்கள் தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும், “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி சிவகாசி காமராஜர் சாலையில் இன்று வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த பேரணியில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு “என் வாக்கு என் உரிமை” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விசிறியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை வாக்களர்களான கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, காமராஜர் சாலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிவகாசி பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படைதன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் (19.03.2024)தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,தேர்தல் கட்டுப்பாட்டறைக்கு வரக்கூடிய புகார்கள் குறிந்து கேட்டறிந்தார்
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் 19.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 20.03.2024 புதன்கிழமை துவங்க உள்ளது.வேட்புமனு படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக்கொள்ளலாம். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 27.03.2024 புதன்கிழமை ஆகும். 23.03.2024 சனிக்கிழமை மற்றும் 24.03.2024 ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இயலாது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வாகனங்களில் வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் மற்றும் அவருடன் கூடுதலாக நான்கு நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் காவல் துறையின் மூலம் செய்யப்பட்டுள்ளது. .பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் மேற்கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இடைவேளை ஏதுமின்றி பெற்றுக் கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் போது வைப்புத் தொகையாக (Deposit) ரூ.25,000 செலுத்த வேண்டும்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் பாதிக் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஒவ்வொரு நாளிலும் பெறப்படும் வேட்புமனுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழி பத்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும். மேலும் இவை வலைதளத்திலும் வெளியிடப்படும். இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்துதல் விதிகள் 1961 இன் விதி 27-A இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு அத்தியாவசியப் பணிகள் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் பிரிவு 60 (உ)- இன் படி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் வகையின் கீழ் வரும் பணியாளர்கள் அனைவரும், Absentees Voters employed in Essential Services (AVES) என்ற பிரிவின் கீழ் அஞ்சல் வாக்குச் செலுத்தும் வசதியினைப் பெறத் தகுதியுடையோர் ஆவார். அதன்படி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அத்தியாவசியப் பணிகள் துறையின் பணியாளர்களில் அஞ்சல்வாக்கு மூலம் வாக்கு அளித்திட விரும்பும் அனைவரும் 34-விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு படிவம் 12D இல் விண்ணப்பம் செய்திட வேண்டும்.விண்ணப்பதாரர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற பேரவைப் பகுதிகளில் ஏதாவது ஒரு பகுதியில் வாக்காளராகப் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.தேர்தல் நாளான 19.04.2024 அன்று விண்ணப்பதாரர் அலுவலகப் பணியில் இருப்பார் என்பதற்கும், அதனால் உரிய வாக்குச்சாவடியில் வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளவர் என்பதற்கும், துறையின் பொறுப்பு அலுவலர் (Nodal Officer Appointed by the Organization concerned) படிவம் 12 D இன்; பாகம் II இல் சான்று அளித்திட வேண்டும்படிவம் 12D ஆனது 34-விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு 25.03.2024 ற்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். எனவே, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்றப் பேரவை பகுதிகளின் அத்தியாவசியப் பணிகள் துறைகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு பெற்றுள்ள பணியாளர்களில் அஞ்சல் வாக்குமூலம் வாக்களிக்க விரும்புவோர் அனைவரும் மேற்கண்ட வகையில் 25.03.2024-ற்குள் படிவம் 12D இல் அஞ்சல் வாக்குக்கோரி விண்ணப்பிக்கலாம் என 34-விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.