25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (05.06.2024) பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.  I A S,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, அவர்களின் மறுவாழ்வு, இழப்பீடு பெற்று தருதல், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை குழந்தைகள் பாதுகாப்பில் திறம்பட பயன்படுத்துவது மற்றும் வழக்குகளில் விரைவான நீதியை பெற்று தருதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக குழந்தைகளை கண்காணித்தல், அவர்களை முன்பருவ கல்வியில் விடுதல் இன்றி சேர்த்தல்,சமூக நலத்துறையின் மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றுப்படுத்துதல், அவர்களுக்கு சட்ட உதவியை பெற்று தருதல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு நிதியினை வழங்குதல், குழந்தை திருமணம் நடைபெறா வண்ணம் குழந்தைகளை கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், குழந்தை திருமணம் நடைபெற்றால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் கண்டறிதல் குறித்தவிழிப்புணர்வை மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மூலமாக ஏற்படுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மகளிர் திட்டம் மூலமாக சுய உதவி குழுவினருக்கு கடன்களை பெற்றுதருதலில் இலக்குகளை எட்டுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
 இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி பேச்சியம்மாள்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சூரியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி அருள்செல்வி மாவட்ட செயலாளர். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திருமதி ராசாத்தி, குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி கெங்கா, அரசு வழக்கறிஞர்கள்இ சுகாதாரத் துறை அலுவலர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News