விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கோபாலபுரம் கிராமத்தில் (06.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு வருவதையும், வாக்காளர் படிவம் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S,. அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுஅதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம். மேலராஜகுலராமன் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் நர்சரி பூங்கா அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில் (03.11.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்றுச்சக்கர வண்டிகள் வேண்டி மனு அளித்த 5-மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5-நபர்களுக்கு தலா ரூ.11,500/- வீதம் மொத்தம் ரூ.57,500/- மதிப்பில் மூன்றுச்சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.சுப்புராஜ் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மனைவி திருமதி மல்லிகா என்பவருக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும்,சாத்தூர் வட்டம், கஞ்சம்பட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.ச.கருத்தபாண்டியன் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மகன் திரு.க.சங்கர் கணேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும், திருச்சுழி வட்டம், முத்துனேந்தல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.சோ.செல்லம் என்பவரது வாரிசுதாரரான அன்னாரது மகள் திருமதி சத்தியவாணிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும், காரியாபட்டி வட்டம் சிறுவேப்பங்குளம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை காலமான திரு.வே.பரமன் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மகள் திருமதி சமுத்திரசெல்வி என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும்,என கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை காலமான 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயதிற்குள்ளும் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள். மேலும் திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் எதிர்வரும் 09.11.2025 அன்று காலை 6.30 முதல் நடைபெற உள்ளது.மேலும், 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களில் ஆண்களுக்கு 8 கி.மீ பிரிவின் கீழும், பெண்களுக்கு 5 கி.மீ பிரிவின் கீழும் மற்றும் 25 வயதிற்கு மேல் நிரம்பியவர்களில் ஆண்களுக்கு 10 கி.மீ பிரிவின் கீழும், பெண்களுக்கு 5 கி.மீ பிரிவின் கீழும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேற்கண்ட பிரிவுகளில் முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மும், நான்கு முதல் பத்தாம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசாக ரூ.1,000/- மும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ/மாணவியர் தங்களது வயதுச் சான்றிதழை தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 09.11.2025 அன்று காலை 6.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் முன்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் ஆஜராகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.வெற்றி பெற்ற மாணவ/மாணவியர் தங்களது வங்கிக்கணக்கு புத்தக நகலினை (Active Account with correct A/C Number & IFSC Code Only) மாவட்ட விளையாட்டு அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும் பரிசுதொகை வங்கி பரிவர்த்தனை மூலம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். எனவே, மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேசிய ஆயுஷ் இயக்கம் மற்றும் இந்திய மருத்துவம் & ஓமியோபதித்துறை (NAM) மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின்(NHM) கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 14.11.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.1. பதவியின் பெயர் : ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் (Consultant – Yoga and Naturopathy)கல்வித்தகுதி : BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) Registration with respective Board/counciவயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாகமொத்த காலிப் பணியிடங்கள் : 03 (அரசு மருத்துவமனைகள் - திருவில்லிபுத்தூர் – 01, சாத்தூர் - 01, இராஜபாளையம் – 01)மாத தொகுப்பூதியம் : ரூ.40,000/- 2. பதவியின் பெயர் : ஹோமியோபதி மருத்துவர்கல்வித்தகுதி :BHMS (Bachelor of Degree BHMS From recognized university) வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாகமொத்த காலிப் பணியிடங்கள் : 01 (டி.மானகசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்) மாத தொகுப்பூதியம் : ரூ.34,000/- 3. பதவியின் பெயர் : பல்நோக்கு பணியாளர்கள் (Attender / Multipurpose Worker) கல்வித்தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி தமிழில் எழுதப் படிக்க தெரிய வேண்டும். வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக மொத்த காலிப் பணியிடங்கள் :04 (அரசு மருத்துவமனைகள் - ஸ்ரீவில்லிபுத்தூர்-1, சாத்தூர் -1, இராஜபாளையம்-1, சிவகாசி-1)மாத தொகுப்பூதியம் : ரூ.10,000/- 4. பதவியின் பெயர் : சிகிச்சை உதவியாளர்கள் (Therapeutic Assistant) கல்வித்தகுதி :Diploma in Nursing Therapist course (for certificate issued by Government of Tamilnadu only) வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக மொத்த காலிப் பணியிடங்கள் : 04 [அரசு மருத்துவமனைகள் - இராஜபாளையம்-2 (ஆண் - 1, பெண்-1) , சிவகாசி-2 (ஆண்-1 , பெண்-1)]மாத தொகுப்பூதியம் : ரூ.15,000/-மேலும், இந்த பதவி முற்றிலும் தற்காலிகமான ஒன்றாகும். எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்கவேண்டும். மேற்குறிப்பிட்டபதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.விண்ணப்ப படிவங்களை http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது அருகிலுள்ள மாவட்ட சுகாதார நல அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.மேலும், விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். சுயசான்றொப்பமிட்ட கல்வித்தகுதிக்கான சான்றிதழ் (ம) மதிப்பெண் சான்றிதழின் நகல், சுயசான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகல், சுயசான்றொப்பமிட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல் (குடும்பஅட்டை/ஆதார் அட்டை ) உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் , மாவட்ட சுகாதார நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம்-626 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம். மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 03.11.2025 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள்/அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று கலந்து கொண்டு தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,., அவர்கள் (29.10.2025) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி, வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆண்டுதோறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை வீணாக்காமல் சேமித்து வைப்பதாகும். மேலும், மழைநீரை சேமிப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, வீடுகள், நிறுவனம், கடைகள் , பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழைநீரை சேகரிப்பதால், கோடைகாலங்களில் வரும் தண்ணீர் பிரச்சினையை தவிர்க்க முடியும்.மேலும், திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம், வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்சுவதால், சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கவும், கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்க முடிகிறது. நம் மக்களிடையே பல்வேறு வகையான நோய்கள் அதாவது, காலரா, காய்ச்சல் , வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, இருமல், வாந்தி போன்ற நோய்கள் நீரின் மூலம் பரவுகின்றன.அதனை தடுப்பதற்கு, குடிக்கும் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இப்பேரணியில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, விருதுநகர் மாரியம்மன் கோவில் முன்பாக தொடங்கி, பழைய பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திருமதி கற்பகம் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், இளநிலை நீர் பகுப்பாய்வாளர், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (29.10.2025) 4-ஆவது விருதுநகர் புத்தக திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 14.11.2025 முதல் 24.11.2025 வரை 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒருமக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில், முதலாவது புத்தக திருவிழா கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நான்காவது விருதுநகர் புத்தக திருவிழா - 2025 “அறிவும் வளமும்” என்ற தலைப்பில், விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 14.11.2025 முதல் 24.11.2025 வரை 11 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், தொல்லியல்துறை அரங்குகள், அறிவரங்கம், பசுமை அரங்குகள், புத்தக நன்கொடை அரங்கு, உணவு மற்றும் சிற்றுண்டி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.மேலும், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் தலைசிறந்த ஆளுமைகளின் சிறப்புரைகள், சிறப்புப் பட்டிமன்றங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களில் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறும், இந்த புத்தகத் திருவிழா குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தகவல்களையும் கொண்டு செல்வதற்கும், போதுமான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி அனைவரும் பயன்பெறுவதற்கு போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.10.2025) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 2025 நவம்பர் 4ம் தேதி முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும். வாக்காளர்கள் மேற்படி படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதனுடன் எந்தவொரு ஆவணத்தையும் அப்போது இணைத்து வழங்கத் தேவையில்லை.வாக்காளர்கள் தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தை கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத நபர்கள், தங்கள் குடும்ப நபர்கள்/உறவினர்கள் பெயர்கள் 2002 பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தையும் குறிப்பிடலாம்.கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குதல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறுவது போன்ற பணிகள் 2025 நவம்பர் 4ம் தேதி முதல் 2025 டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும். இக்காலத்தில் இதுவரை பெயர் சேர்க்கப்படாத நபர்களும் குடியிருப்பு இடம் மாறியுள்ளவர்களும், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பதற்கு முறையே படிவம் 6 மற்றும் 8ஏ அல்லது 8பி ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.கணக்கெடுப்பு படிவங்களை கையொப்பமிட்டு அளித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 2025 டிசம்பர் 9 முதல் 2025 ஜனவரி 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோருதல், ஆட்சேபணைகள் தெரிவித்தல், திருத்தம் செய்யக் கோருதல் போன்ற படிவங்கள் / கோரிக்கைகள் பெறப்பட்டு, அப்படிவங்களுடன், ஏற்கனவே பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீதும் 2025 ஜனவரி 31ம் தேதி வரை விசாரணை செய்யப்பட்டு, பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நல்ல முறையில் நடைபெறுவதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகம்து இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரமணன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர், தேர்தல் பணி அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.