25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 03, 2024

தமிழக அளவிலான சிறப்பு செலவுக் கணக்கு பார்வையாளர் நியமனம்

மக்களவைத் பொதுத் தேர்தல்-2024 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தால் அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏற்கனவே தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது திரு.B.R..பாலகிருஷ்ணன், IRS(IT) (1983) (R)  (தொடர்பு எண் : 9345298218) என்பவர் தமிழக அளவிலான சிறப்பு செலவுக் கணக்கு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்

Apr 02, 2024

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (01.04.2024) மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்ற முறையில்  ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  நடைபெற்றது.பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இணைய வழியில் சீரற்ற முறையில்  ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தம் 1628 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மக்களவை பொதுத்தேர்தல் 2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு 27 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கூடுதலாக தேவைப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கிடும் பொருட்டு, இன்று இணைய வழியில் சீரற்ற முறையில்  ஒதுக்கீடு செய்யப்பட்டு, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 333 வாக்குப்பதிவு இயந்திரங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 308 வாக்குப்பதிவு இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு 308 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு 333 வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 1628 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

Apr 02, 2024

வாக்கு எண்ணிக்கை மையமான வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், மக்களவை பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில்  (01.04.2024) ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Apr 02, 2024

100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்  (28.03.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும். நாம் போடும் ஒரு ஓட்டினால் என்ன ஆகப்போகிறது என்று கூறுவது சரியானதாக இருக்க முடியாது.முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்ட போது எல்லோரும் வாக்களிக்க முடியாது. குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது. இப்போது 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம். நாட்டில் அனைவரும்  சமம். நாட்டில் 18 வயது நிரம்பிய ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், முதல் குடிமகன் முதல்  ஒரு சாதாரண குடிமகன் வரை ஒரு சமமான உரிமையை உறுதி செய்வது தான் வாக்குரிமை.  நமது நாட்டில் சராசரியாக 70 முதல் 75 விழுக்காடு தான் கடந்த சில தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான்.தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் நாளன்று அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஜனநாயக வழி என்பது 18 வயது நிரம்பிய அனைவருக்குமான வாக்குரிமை மூலம் உங்களுக்கு தேவையான தலைவர்களை தேர்வு செய்து தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த  ஜனநாயகம் தருகிறது. ஜனநாயகத்தின் உடைய மிக முக்கியமான வாய்ப்பு நமக்கு வாக்குரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கு உரிமையை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகத்தில் நாம் பங்களிப்பதற்கான உரிமையும், பொறுப்பும் அளிப்பது தேர்தல். வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும்  இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Apr 02, 2024

கூரை குண்டு ஊராட்சியில் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) வழங்கும் பணி

விருதுநகர் மாவட்டம், மக்களவை பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு கூரை குண்டு ஊராட்சியில் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்  (01.04.2024) வாக்காளர்களுக்கு வழங்கி பணியினை தொடங்கிவைத்தார்.

Apr 01, 2024

ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள்

மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகர்புறம், பேரூராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும், பதாதைகள், சுவரொட்டிகள், வாகனங்களில் ஒட்டு வில்லைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு ஊரக பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 01, 2024

விருதுநகர் பாரளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குதல் தொடர்பான கூட்டம்

விருதுநகர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.03.2024) மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் பாரளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குதல் தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Apr 01, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள்/முகவர்களுடனான கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (30.03.2024) தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மற்றும் செலவின பார்வையாளர் திரு.ரதோஷியாம் ஜஜீ, இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் செலவினங்கள் குறித்து வேட்பாளர்கள்,முகவர்களுடனான கூட்டம் நடைபெற்றது.அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும்.வழிபாட்டுத்தலங்களில் பிரச்சாரம் செய்யவோ, தனிநபர்களை விமர்சனம் செய்யவோ, இதர கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு இடையூறு செய்யவோ கூடாது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வது கூடாது. ஜாதி மத உணர்வினை தூண்டும் வகையில் செயல்படக்கூடாது. இரவு 10 மணிக்குப் பின்னரும், காலை 6 மணிக்கு முன்னரும் பிரச்சாரங்கள் செய்யவோ கூட்டங்கள் நடத்தவோ கூடாது. தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் இடம் நேரம் குறித்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு முன் அனுமதியும் பெறப்பட வேண்டும். உறுதி செய்யப்படாத தகவல்களை வைத்து ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது.தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக ஏதேனும், சந்தேகம் இருப்பின் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆகியோரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும், தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரின் முகவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நேரில் சந்திக்கலாம் என தெரிவித்தார்.வேட்பாளர்கள் தேர்தலுக்கான செலவினத்தை தனி வங்கிக்கணக்கு மூலம் பதிவு செய்ய வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.95 இலட்சம் தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி சட்டப்பூர்வமாக செலவினம் செய்யலாம். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் செலவினக்கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். உள்ளூர் தொலைக்காட்சிகளில், ஊடக சான்றளிப்பு பெறாமல் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்ப கூடாது.பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்களுக்கு  9489985882 என்ற கைபேசி எண்ணில் (அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.dpi@gmail.com) தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பொது பார்வையாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜ்குமார், வட்டாட்சியர், கைபேசி எண்: 7010795006 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள மக்களைவைப் பொதுத்தேர்தலில் அனைத்து நடத்தை விதிகளை பின்பற்றி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நேர்மையான, அமைதியான, முற்றிலும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து வேட்பாளர்கள்/ முகவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, வேட்பாளர்கள் / வேட்பாளரின் முகவர்கள்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த தேர்தல் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Apr 01, 2024

இளம் தலைமுறையினர்களுக்கான, மாநில அளவில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி

மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு,  18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், மலைவாழ் மக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, முதல் தலைமுறை வாக்களர்களான கல்லூரி மாணவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வரலாறு, வாக்களிப்பதின் முக்கியத்துவம், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது.இந்த வினாடிவினா போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததவாது:-இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள், இந்திய தேர்தலின் வரலாறு குறித்தும், தேர்தலில்  ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், ஜனநாயக கடமையை எல்லோரும் ஆற்ற வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஜனநாயக நாட்டில் ஒருவர் வாக்களிக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரே தகுதி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது மட்டும் தான். நமது நாட்டில் சராசரியாக 70 முதல் 75 விழுக்காடு தான் கடந்த சில தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக நகர் பகுதியில் வாக்கு சதவீதம் குறைந்து காணப்படுகிறது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான்.முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்ட போது எல்லோரும் வாக்களிக்க முடியாது. குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது.இப்போது 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம். நாட்டில் அனைவரும்  சமம். நாட்டின் முதல் குடிமகன் முதல்  ஒரு சாதாரண குடிமகன் வரை ஒரு சமமான உரிமையை உறுதி செய்வது தான் வாக்குரிமை.  அதனால் எல்லோரும் வாக்களிக்க வர வேண்டும். இது நமது ஜனநாயக கடமை குறிப்பாக இளம் தலைமுறையினர் வாக்களிக்க வேண்டும்.1952 முதல் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. உலகத்திலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட நாடாகவும், உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாகவும் நமது நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது.  இந்திய தேர்தல் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையிலும், வாக்களிப்பதின் அவசியத்தை இளம் தலைமுறை, முதல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.இப்போட்டியில் திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  இந்த வினாடி வினா போட்டியில் ஒரு குழுவுக்கு மூன்று நபர் வீதம் 60 குழுக்களாக 180 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.போட்டியில் முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டு 30 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. இக்குழுக்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நடத்தப்பட்டு 8 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.  அதைத்தொடர்ந்து மூன்றாம் நிலை தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.அதில் விருதுநகர் வே.வ. வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரிக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரிக்கு இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரா கல்லூரி மற்றும் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.இப்போட்டிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் கழகத்தின் இணை இயக்குனர் டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் நடத்தினார்.இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி கார்த்திகேயினி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா உட்பட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Apr 01, 2024

முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்குபெற்ற மாநில அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில்பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்குபெற்ற மாநில அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (31.03.2024) கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.பாராளுமன்றத் தேர்தல்-2024  எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்கேற்ற மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 8 கி.மீ தூரமும் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில்  மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, கோயமுத்தூர், திருச்சி, அரியலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும்/தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் கல்லூரி மாணவர் பிரிவில் முதல் இடம் பெற்ற எஸ்.முரளிதரன், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி  ரூ.10,000  முதல் பரிசையும், இரண்டாம் இடம்  வந்த எஸ்.முத்து இசக்கி, புனித சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை   ரூ.7,500 இரண்டாம் பரிசையும், மூன்றாம் இடம் வந்த  எஸ்.வல்லரசு, பிஷப் கல்லூரி, திருச்சி ரூ.5,000  மூன்றாம் பரிசையும், கல்லூரி மாணவியர் பிரிவில் முதலிடம் பெற்ற எஸ். சௌமியா Dr. NGP கலைக் கல்லூரி கோயம்புத்தூர் ரூ.10,000 முதல் பரிசையும், இரண்டாம் இடம் பெற்ற ஆர். அஸ்வினி SAW கல்லூரி  ரூ.7,500 இரண்டாம் பரிசையும் மற்றும் மூன்றாம் இடத்தை எ. கமல லக்ஷ்மி, ராணி அண்ணா கலைக் கல்லூரி  திருநெல்வேலி ரூ.5, 000 மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு   மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பரிசுத்தொகை க்கான காசோலைகளை வழங்கினார். இந்த  போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகங்கள் அடங்கிய டி- சர்ட் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டது.

1 2 ... 61 62 63 64 65 66 67 68 69 70

AD's



More News