ராஜபாளையம் அக்டோபர் 28 2024 எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் எ.கே.டி .கிருஷ்ணமராஜு அவர்கள் தலைமை தாங்கினார் .சிறப்பு விருந்தினராக மாவட்ட மாநாட்டு தலைவர் ரோட்டரியன் சண்முக நடராஜ் அவர்கள் கலந்து கொண்டு ரோட்டரி அறக்கட்டளையின் உண்மையான நோக்கத்தை தெளிவாக விளக்கி ,இது எவ்வாறு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சமூக நலனுக்காக பணியாற்றும் வழியை அமைத்தது என்பதை மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார் .ராஜபாளையம் ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்தி அவர்கள் எங்கள் கல்லூரி மாணவி ஸ்ரீராஜலட்சுமியை ரோட்ராக்ட் கிளப்பின் தலைவராக நியமித்து கௌரவபதக்கத்தை அணிவித்தார் .இதனை தொடர்ந்து தலைவரின் ஏற்கும் உறையும்,குழு உறுப்பினர்களின் அறிமுகமும் நடைபெற்றது .ரோட்டரி கிளப் செயலர் கார்த்திகேயன் ரோட்டரி பிரார்த்தனையை நிறைவேற்றினார் .கல்லூரி முதல்வர் முனைவர்.ஜமுனா அவர்கள் வரவேற்புரையாற்றினார் .ரோட்ராக்ட் கிளப்பின் செயலர் காயத்ரி லட்சுமி நன்றியுரை கூறினார் .
இராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொது மருத்துவ பிரிவு கண்சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் மதிப்பீடு மற்றும் மாதிரி வரைபடங்கள் குறித்து கேட்டிறிந்தார். இராஜபாளையத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் கட்டி பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் கட்டிடத்தின் பணிகள் முடிக்கப்பட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களானல் திறந்து வைக்கப்படும்.
.187 மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஒய்வு கல்வி அலுவலர் பொன்னம்பலம்,தாசில்தார் ராமசுப்பிரமணியம், ஆர்.ஐ. சுந்தர்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தாளாளர் திருப்பதி செல்வன் வரவேற்றார் முதல்வர் அருணா தேவி முன்னிலை வகித்தார். இரண்டு நாள் நடந்த கண்காட்சியை எம்.எல்.ஏ தங்கபாண்டியன் துவக்கி வைத்தார் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி ,வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் , இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு, வேர்ல்ட் விஷன் இந்தியா சார்பில் வழங்கப்பட்டது. சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி சண்முக வேல் ராஜ் ஊட்டச்சத்து பொருட்கள், இலவச சைக்கிள் வழங்கினார். வேர்ல்ட் விஷன் திட்ட இயக்குனர் செல்வின் அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
வெயிலின் தாக்கத்தால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து மாலையில் திடீரென குளிர்ந்தகாற்று வீசத்தொடங்கியது.பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் பலத்தமழை பெய்தது. பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், மலையடிப்பட்டி கணபதியாபுரம். அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், சொக்கர்கோவில், ரெயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவ , பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இராஜபாளையத்தில் மதுரை காமராஜ் பல்கலை மண்டலங்களுக்கு இடையே கல்லூரி மாணவியர்க்கான வாலிபால் போட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் காமராஜ் பல்கலை மண்டலங்களுக்கிடையே வாலிபால் போட்டி நடந்தது. 16 கல்லூரிகள் பங்கேற்றதில் இறுதி சுற்றுக்கு மதுரையில் லேடி டோக் கல்லூரியும், யாதவா கல்லூரியும் மோதின. இதில் மதுலை லேடி டோக் முதலிடமும்,யாதவா கல்லூரி இரண்டாவதும், மங்கையர்க்கரசி கல்லூரி மூன்றாமிடமும், வி.சி. வன்னிய பெருமாள் கல்லூரி நான்காம் இடம் பெற்றன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணமராஜு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கினர். முதல்வர் ஐமுனா வரவேற்றார்.
விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், இராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்கம் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.சென்னை, திருச்சி, கோவை, வேலூர், கன்னியாகமரி, விருதுநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து கல்லூரி மாணவர்கள் 38 அணியும், மாணவிகள் 28 அணி என 850 போர் பங்கேற்கின்றனர் காலை 7.00 மணிக்கு தொடங்கி மொத்தம் எட்டு ஆட்டங்களில் பகல் இரவு போட்டிகளாக லீக் மற்றம் நாக் அவுட் போட்டிகளாக நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி அக்டோபர் 2ம் தேதி மாலை நடைபெறும்.போட்டிகளை எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், ஊர்க்காவல் படை மதுரை சரக துணைத்தளபதி ராம்குமார் ராஜா தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழக கவுரவ செயலாளர் துரைசிங், இராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் நடுவே அமைந்துள்ள சஞ்சீவி மலையில் திடீரென பற்றிய தீயை வனத்துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே தண்டவாளத்தை அடுத்து சஞ்சீவி மலை உள்ளது. இதையொட்டி வடக்கு மலையடிப்பட்டி, குலார் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, காமராஜபுரம், எம்.ஜி.ஆர் நகர். அண்ணா பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் மலையின் வடக்கு பகுதி உச்சியில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. அதிவேக காற்றால் ஒரு பகுதியில் பற்றிய தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் மூலிகை உள்ளிட்ட பசுமையான மரங்கள் தீக்கிரையாகின. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், சேத்துார்,தேவதானம் அடுத்த பகுதிகளில் வறண்ட நிலங்கள், மழை பொழிவை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளுக்கு மக்காச்சோளம் ஒவ்வொரு வருடமும் கை கொடுத்து வரும். இந்நிலையில் இந்த வருடமும் ரெட்டியபட்டி, சிவலிங்காபுரம், ஆலங்குளம், வடகரை, தென்கரை, என்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி பயிராக ஆவணி மாதம் மக்காச்சோளம் பயிரிட்டு ஒரு மாதம் நட்டு வைத்து வளர்ச்சியை எதிர்பார்த்த சூழலில் தற்போது அடுத்து வரும் கடும் வெயில் மற்றும் பொய்த்துப்போன மழையால் கருகி நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது. கண்மாய், இரவை பாசனம் தவிர மீதி உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் உழுது ஆவணி மாத பட்டத்தில் மக்காச்சோள விதைகள் ரூ.4000, உழவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு ரூ.11,000 என ஏக்கருக்கு 15,000 என செலவிட்டும் தற்போது ஆவணி புரட்டாசி மாத மழை இல்லாததால் 15 நாட்கள் ஆன மக்காச்சோள கருதுகள் கருகிவிட்டன. கண்மாய் ஒட்டிய கிணற்று பாசன பகுதிகளில் இது ஓரளவு தண்ணீரை பாய்ச்சி தப்பித்த நிலையில் மழையை நம்பிய மக்காச்சோள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 416 குழந்தைகளுக்கு ரூ 10 லட்சம் கல்வி உதவி தொகையினை தலைமை நிதி அதிகாரி விஜயகோபால் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் சுந்தர்ராஜ், மனித வள துணைப் பொது மேலாளர் எட்வின் ஜார்ஜ் வழங்கினர். தொழிலாளர் நல அதிகாரி கவுதமன் வாழ்த்தினார். தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.