'விருஷபா' மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். தற்போது வெளியிட்டுள்ள டீசரில் ,'பாகு பலி' போன்று சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. பிரமாண்ட அரண்மனை செட்டுகள் மன்னர் வேடத்தில் மோகன்லால் சண்டையிடும் காட்சிகள், போன்றவை டீசரில் இடம் பெற்றுள்ளன. தீபாவளிக்கு தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் ரிலீஸாகிறது.
நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் ,அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட,2 மடங்கு இப்போது சூர்யா, ஜோதிகா ஒருவேளை சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.சிவக்குமார் சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான்7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ.15000 வருகிறது. பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய7 ஆண்டுகள் ஆன செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை. மற்றொன்று பான் இந்தியா எதிர்பார்ப்புடன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1. இந்த இரண்டு படங்களின் வசூல் வேட்டையில், 'காந்தாரா சாப்டர்1!' பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தி, முதல் நாளிலேயே ரூ.89 கோடி க்கும் அதிகமாக வசூலித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2ம் பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' படத்தை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கடந்த வாரம் ரிலீசான இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. "முதல் பாக வெற்றியால் எதிர்பார்ப்பு அதிகரித்து, இப்படத்தில் முழு கவனம் செலுத்த முடியாது, என்பதால் 3 ஆண்டுகள் முழுமையாக அர்ப்பணித்து இந்த சாப்டர் 1 படத்திற்காக பணியாற்றினேன்" என்றார் ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா சாப்டர் 1' நேற்றுமுன்தினம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித் துள்ளது. தொடர் விடுமுறையால் இந்த வாரத்திற் குள் 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. காந்தாரா முதல்பாகம் 400 கோடி வசூலித்த நிலையில் அதைவிட இப்படம் நிச்சயம் கூடுதலாக வசூலிக்கும்.
'காந்தாரா சாப்டர் 1', ரிஷப் ஷெட் டியின் கன்னட படம், லோகாசாப்டர் 1 கல்யாணி பிரியதர்தஷனின் மலையாள படம், 'ஓஜி'சந்திரா, பவன் கல்யாணின் தெலுங்கு படம் ஆகியவை ரூ.300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்துள்ளன. காந்தாரா 4 நாட்களிலும், லோகா 40 நாட்களிலும், ஒஜி 10 நாட்களிலும் இந்த சாதனையை படைத்தன.
படங்களின் வெளியீடு இந்தாண்டு 200ஐ கடந்து விட்டது. வெற்றி 10 சதவீதம் வெற்றி. ஆனாலும் படங்கள் வெளியீடு குறையவில்லை.இந்தவாரம்அக்.,9ல்'அக்னிபத்து' படமும், அக்.,10ல்"அனல்மழை, இறுதிமுயற்சி, மருதம், நெடுமி, ரவாளி, தந்த்ரா, உயிர் மூச்சு, வில்" ஆகிய படங்களும், ஓடிடி யில் நேரடியாக 'ராம்போ' படம் என மொத்தம் 10 படங்கள் வெளியாகின்றன.
ஆண்டுக்கு ஒரு முறை 1980களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் கூடி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு 80ஸ் ரீ யூனியன் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில்நடிகர்கள்சிரஞ்சீவி, வெங்கடேஷ், பிரபு, சரத்குமார், ரத்குமார், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் குஷ்பூ, சுஹாசினி, நதியா, ராதா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், நடிகை லிசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றதற்காக ஷாருக்கானை அனைவரும் வாழ்த்தினர், ஆனால் ஒரு ஊடகவியலாளர் கூட சனாதனியின் விக்ராந்த் மாஸ்ஸியைப் பாராட்டவில்லை.
3டி அனி மேஷன் படம் சமீபத்தில் 'மகாவதார் நரசிம்மா' என்ற வெளியாகி ரூ.300 கோடி வசூலை ஈட்டியது. அடுத்து தெலுங்கில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் 'வாயுபுத்ரா' என்ற 3டி அனிமேஷன் படம் தயாராகிறது.ஹனுமன் புகழ் பாடும் இந்தபடம் பான் இந்தியா வெளியீடாக 2026 விஜயதசமிக்கு வெளியாகிறது.
திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தை 'நாள் 2' என்ற மராட்டிய படத்திற்காக ,ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் தேசிய விருது பெற்றார். அவருக்கு கமல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவில், "என்னுடைய 6 வயதில் முதல் தேசிய விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு பாராட்டுகள். நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து இன்னும் பல தூரம் செல்ல பாடுபட வேண்டும் மேடம். என குறிப்பிட்டுள்ளார்.