மறைந்த தயாரிப்பாளர் ஏ. வி. எம்.சரவணன், அவரே பிளான் போட்டு கட்ட வைத்தது தான் ராகவேந்திரா மண்டபம் என்றார் நடிகர் ரஜினி.
நடிகர் ரஜினி சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் ஏ. வி. எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் பங்கேற்று, "ஏ.வி.எம்., தயாரிப்பில் நான் 11 படங்களில் நடித்தேன். ஒவ்வொரு படத்தின் வெற்றியிலும் அவரது பங்கு இருக்கும். கோடம்பாக்கத்தில் சும்மா இருந்த என் இடத்தில் ஏ. வி. எம்.சரவணன் அவரே பிளான் போட்டு கட்ட வைத்தது தான் ராகவேந்திரா மண்டபம்.சிவாஜிக்கு பின் ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க, உடம்பு, மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைபிடிக்கிறேன்” என்றார் நடிகர் ரஜினி.
0
Leave a Reply