நேற்று, இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன், சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இது, நடப்பு சீசனில் சென்னை அணி பங்கேற்ற கடைசி போட்டி. ஆடிய சென்னை அணி5-2 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. சென்னை அணி சார் பில் டேனியல் சிமா (25, 90+6வது நிமிடம்), இர்பான் யாத்வாட் (57, 90வது) தலா 2, லுாகாஸ் பிரம்பில்லா (45 + 3வது) ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணிக்கு ரீ டச்சிகாவா (18வது நிமிடம்), முகமது சனான் (62வது ) தலா ஒரு கோல் அடித்தனர்.சென்னை அணி 24 போட்டியில், 7 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 27 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது.
டில்லியில், வரும் மார்ச் 11,13ல்மாற்றுத்திறனாளி களுக்கான உலக'பாரா' தடகளகிராண்ட் பிரிக்ஸ் தொடர்,. முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படும்,இத்தொடரில்,20 நாடுகளை சேர்ந்த,250க்கும் மேற்பட்ட 'பாரா'விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் (உயரம் தாண்டு தல், 'டி64'), நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல், ‘எப்41'), தரம்பிர் ('கிளப் த்ரோ', 'எப்51') உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தரம்பிர் கூறுகையில், சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவுக்கு பெருமை தேடித்தர முயற்சிப்பேன்,” ,"சொந்த மண்ணில் உலக 'பாரா' தடகளம் நடக்க இருப்பது இந்திய நட்சத்திரங்களுக்கு,. நீண்ட நாள் கனவுநிறைவேறியது..
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, டென்மார்க் கின்ராஸ்மஸ் கெம்கே மோதினர். முதல் செட்டை 21,16 எனக் கைப்பற்றிய ஆயுஷ், இரண்டாவது செட்டை 21-23 என போராடி இழந்தார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்டஆயுஷ் 21-17 என வென்றார்.ஒரு மணி நேரம். 21 நிமிடம் நீடித்த காலிறுதியில் அசத்திய ஆயுஷ் 21,16,/21,23/,21,17 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
சர்வதேசசெஸ்கூட்டமைப்பு(பிடே)சார்பில்20வயதுக்குட்பட்டோருக்கான உலகஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்,மான்டினிகிரோ வில் நடந்தது. ஓபன் பிரிவில் மொத்தம் 157 பேர்பங்கேற்றனர். இந்தியா சார்பில் 18 வயதுபிரனவ் வெங்கடேஷ், பிரனீத், அஷ்வத் உள்ளிட்டோர் களமிறங்கினார். பிரனவ். போட்டியின் 18வதுநகர்த்தலில் 'டிரா'செய்தார். இதையடுத்து 11சுற்றில் 7 வெற்றி,4'டிரா'செய்த பிரனவ்,9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். உலக ஜூனியர் செஸ்சாம்பியன் தொடரில் இந்தியாவின் ஆனந்த்(1987),ஹரிகிருஷ்ணா(2004),அபிஜீத் குப்தா(2008) கோப்பை வென்றனர். தற்போது 17 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் பிரனவ் இத்தொடரில் சாம்பியன் ஆனார்.
பிராகு மாஸ்டர்ஸ் செஸ்தொடரில்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரிஉள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். இதன்9வதுசுற்றில்தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் எடிஸ் குரேல் மோதினர்.. இப்போட்டி 39வது நகர்த்தலின் போது'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 40வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஒன்பது சுற்றுகளின் முடிவில் 3 வெற்றி,6 'டிரா' என6.0 புள்ளிகளுடன் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
துபாயில் வரும் மார்ச் 9 நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி, சான்டனர் வழிநடத்தும் நியூசிலாந்தை எதிர் கொள்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது.இதுபற்றி நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் கூறுகையில், 'துபாயில் மட்டும் விளையாடுவதால், இங்கு எப்படி செயல்பட வேண்டுமென இந்தியாவுக்கு தெளிவாக தெரியும். தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. பைனலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்," என்றார்.
குத்துச்சண்டைகிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,)மார்ச் 21-27ல் தேசிய சாம்பியன்ஷிப் , 'நடப்பு சாம்பியன்' ரயில்வேஸ் உட்பட 300க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். செஸ் செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ்கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.இதன் 7வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, சீனாவின் யி வெய் மோதி, 61வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். அரவிந்த், 39வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஏழு சுற்றுகளின் முடிவில் தமிழகத்தின் அரவிந்த், 5.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். பாட்மின்டன் பிரான்சில் சர்வதேச பாட்மின்டன் தொடர் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 19 இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி (48வது இடம்), முன்னாள் உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-12' ஆக உள்ள, சிங்கப்பூரின் லோகியான் இயுவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய ஆயுஷ், அடுத்த செட்டை 21-9 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் ஆயுஷ் 21-17, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றில் ஆயுஷ் ஷெட்டி, 21–17, 21-17 என ஹாங்காங்கின் குனவானை வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். டென்னிஸ்செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மரியா கார்லியை அமெரிக்காவில் நடக்கும் இந்தியன் வெல்ஸ் ஓபன் முதல்சுற்றில் வீழ்த்தினார். கிரிக்கெட்இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள்இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஏப். 27- மே 11, இடம்: கொழும்பு) பங்கேற்கின்றன.
தேசிய மாஸ்டர்ஸ் தட கள சாம்பியன்ஷிப் தொட ரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணை யத்தின் நேதாயத்தின் நேதாஜி சுபாஷ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல் படுபவர்கள், இந்தோனே ஷியாவில் நடக்கவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிக்கு தகுதி பெறுவர். கடந்த சில ஆண்டு களாக தமிழக அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழக அணியினர் வெள்ளி வென்றனர். தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் பாலசுப்ரமணியன், ரகுநாத், கணேசன், ஜெயச்சந்திர பாண்டி.
மும்பையில், சி.சி.ஐ.. ஸ்னுாக்கர் கிளாசிக்தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் (ரவுண்ட் 32) பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ். பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, தெலுங்கானா வின் ஹிமான்ஷு ஜெயின் மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' பங்கஜ் அத்வானி 4-1 (43-77, 72-35, 80-33, 80-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று நடந்தஇரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை எதிர்கொண்டது. நியூசிலாந்து அணி 50 ஓவரில்362/6 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 312/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல், மார்ச் 9ல் துபாயில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி, ஏற்கனவே நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.