இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்களுக்கான ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் கருணாகரன், உத்தரகாண்ட்டின் சூர்யாக்ஸ் ராவத் மோதினார். இதில் சதிஷ்குமார் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, பைனலில் மகாராஷ்டிராவின் தீப் ராம்பியா, அக்சயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 21-11, 20-22, 21-8 போராடி வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது. பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் ஹரியானாவின் அன்மோல், உத்தரகாண்ட்டின் அனுபமாவை சந்தித்தார்.இதில் அன்மோல் 21-16, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப்ப தக்கம் வென்றார்.பெண்கள் இரட்டையரில் கர்நாடகாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி 21-17, 15-21, 21-12 என காயத்ரி, மானசா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது. தமிழ கத்தின் வர்ஷினி, அருள் பாலா ஜோடி வெண்கலம் வென்றது.
கூடைப்பந்து. ஆண்களுக்கான கூடைப்பந்தில் வெண் கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகம், தெலுங்கானா மோதின. இதில் தமிழக அணி 21- 26 என வெற்றி பெற்று, வெண்கலம் வசப்படுத்தியது. நீச்சல் கர்நாடகாவின் 15 வயது நீச்சல் வீராங்கனை தினிதி. தேசிய விளையாட்டு நீச்சலில் நேற்று 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தங்கம் (57.34 வினாடி) கைப்பற்றினார். அடுத்து 4x100 மீ., ரிலே ஓட்டத்தில் சக கர்நாடக வீராங்கனைகளுடன் இணைந்து தங்கம் வசப்படுத்தினார். 1 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றினார்.நீச்சலில் மட்டும் கர்நாடக அணி 37 பதக்கம் (22 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம்) குவித்தது.
இந்தியாவின் 38வது ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பைனலில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார், மகாராஷ் டிராவின் ராகுலை எதிர் கொண்டார். இதில் வேல் வன் செந்தில்குமார், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் அபே சிங், வெண்கலம் கைப்பற்றினார்.பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பைனலில், கோவாவின் ஆகான்ஷா, 3-0 என மகாராஷ்டிராவின் அஞ்சலியை வீழ்த்தி தங்கம் வென்றார். தமிழககத்தின் ராதிகா வெண்கலம் வென்றார். தமிழககத்தின் பூஜா, ராதிகா, ஷமீனா, தீபிகா இடம் பெற்ற ஸ்குவாஷ் அணி, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தியது.
.ஆண்களுக்கான +109 கிலோ பளுதுாக்குதலில் தமிழக வீரர் ருத்ரமாயன் (355 கிலோ). இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர் 'ஸ்னாட்ச்' பிரிவில் 175 கிலோ துாக்கி தேசிய சாதனை படைத் தார். சர்வீசஸ் அணியின் லவ்பிரீத் (367). தங்கம். உத்தரகாண்ட்டின் விவேக் (280), வெண்கலப் கைப்பற்றினர்.பெண்களுக்கான +87 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் மேஹாக், ஸ்னாட்ச் (106 கிலோ), 'கிளீன் அண்டு ஜெர்க்' (141 கிலோ) என இரு பிரிவிலும் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.
கர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 6 தங்கம் ,1 வெள்ளிகர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 15. இவர், 400 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தேசிய சாதனையுடன் தங்கம் (4 நிமிடம், 24.60 வினாடி) வென்றார். இந்த தேசிய விளையாட்டில் இவர் வென்ற 6வது தங்கம் (1 வெள்ளி) உட்பட மொத்தம் 7) ஆனது. துப்பாக்கி சுடுதல் ஜோனாதன் ஆன்டனி தங்கம்துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பைனல் நடந்தது. பெங்களுரு வின் 15 வயது வீரர் ஜோனாதன் ஆன்டனி (240.7 புள்ளி) தங்கம் கைப்பற்றி னார்.பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன் பிரிவில் பஞ்சாப் வீராங்கனைகள் சிப்ட் கவ (461.2) தங்கம், அஞ்சும் மவுத்கில் (458.) வெள்ளி வென்றனர்.இந்தியாவில், வரும்பிப்.22 மார்ச் 16ல்சர்வதேசமாஸ்டர்ஸ்லீக்முதல்சீசன்நடக்கஉள்ளது.இதில்இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான போட்டிகள் நவி மும்பை,ராஜ்கோட், ராய்ப்பூரில் நடக்கவுள்ளன.
நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. 'மாஸ்டர்ஸ்' பிரிவின் 12 சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ் 18, பிரக்ஞானந்தா 19,தலா 8.5 புள்ளியுடன் முதல் இடத்தில் இருந்தனர். 43 சுற்று முடிவில் குகேஷ் ஞானந்தா (8.5), (8.5) பிரக் FLD நிலையில் இருந்தனர்'டாடா ஸ்டீல்' தொடரின் விதிப்படி, 13 சுற்றுக்குப் பின் இருவரும் சம புள்ளியில் இருந்தால், வெற்றியாளரை செய்ய இரண்டு முடிவு ரேபிட் 'டை பிரேக்கர்' போட்டி கள் நடத்தப்படும். இரு வருக்கும் தலா 3:00 நிமி டம் தரப்படும். இதிலும் முடிவு கிடைக்காத பட்சத்தில்,'சடன்டெத்'முறையில்வெற்றியாளர்முடிவுசெய்யப்படுவார். பிரக்ஞானந்தா,62 வது நகர்த்தலில் 'திரில்' வெற்றி பெற்றார். 2.0-1.-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். குகேஷ் இரண்டாவது இடம் பெற்றார்.
. மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐ.சி.சி., சார்பில், இத் தொடரில் சிறப்பாக விளை யாடிய வீராங்கனைகளை தேர்வு செய்து கனவு 'லெவன்' அணியை வெளியிட்டது. இதில் இந்தியா சார்பில் திரிஷா, கமலினி, ஆயுஷி, வைஷ்ணவி என, நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.இத்தொடரில் அதிக ரன் குவித்த திரிஷா (309), தொடர் நாயகி விருது வென்றார்.
சென்னையில், ஏ.டி. பி.. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், சுவிட்சர்லாந்தின் லுாகா காஸ் மோதினர். டெல்னுவோஅபாரமாக ஆடிய தமிழகத்தின் மணிஷ் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. இதன் 'மாஸ்டர்ஸ்' பிரிவு 12வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சி சரணா மோதினர். பிரக்ஞானந்தா, 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதின.இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணி யில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் முகமது ஷமி இடம் பெற்றார்.'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'பவுலிங்' தேர்வு செய்தார். அபிஷேக் ஆட்டம் ஆரம்பமானது. இவரது சிக்சர் மழையில் வான்கடே மைதானம் அதிர்ந்தது. ஓவர்டன் ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசிய இவர், 17 பந்தில் அரைசதம் எட்டினார். அபிஷேக் சர்மா, தொடர்ந்து சிக்சர், பவுண்டரி விளாச, இந்திய அணி 16 ஓவரில் 202/6 ரன்னை எட்டியது.ரஷித் 'சுழலில்' அபிஷேக் (54 பந்தில் 135 ரன், 7 பவுண்டரி, 13 சிக்சர்) அவுட்டானார். இவரது ஆட் டத்தை பயிற்சியாளர் காம்பிர், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் டுக்கு 247 ரன் எடுத்தது. இந்திய பந்து வீச்சில் இங்கிலாந்து அணி பில் சால்ட் மட்டும் 55 ரன் எடுத்தார். 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு தோல்வி அடைந்தது.