25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஏசியை ரிமோட் மூலம் ஆஃப் செய்வதால் மட்டும் மின்சாரத்தை சேமிக்க முடியாது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏசியை ரிமோட் மூலம் ஆஃப் செய்வதால் மட்டும் மின்சாரத்தை சேமிக்க முடியாது

.தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. வெயில் காலத்தில் ஃபேன், ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்கள் அதிகளவில் தொடர்ச்சியாக வீடுகளில், அலுவலகங்களில் இயக்கப்படும் என்பதால், இந்த கூடுதல் மின் நுகர்வை எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொள்ள, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் தயாராக உள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மே மாதத்தில் அதன் அளவு இன்னும் கூடி 17,400 மெகாவாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பள்ளி ஆண்டுத் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து பள்ளிகளுக்கும் மின்சாரம் எவ்வித தடங்கலுமின்றி வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகும் வகையில் இரவு பகலாக தடையின்றி மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. ஆண்டு தேர்வுகள் முடிவுற்ற பின் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 இதனிடையே மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விழிப்புணர்வு பதிவுகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் வெயில் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஏசியை ஆஃப் செய்யும் போது வெறுமனே ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆஃப் செய்யாமல் ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் மறக்காமல் ஆஃப் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலமாக தான் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் அதிக மின் கட்டணத்தை தவிர்க்க முடியும் எனவும் அலர்ட்செய்துள்ளது.அரசு என்னதான் மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் நம்மில் ஒவ்வொருவரும் மின் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே கோடைக்காலத்தில் தடங்கலின்றி மின்சாரம் பெற முடியும்.அதேபோல் தேவையற்ற அலங்கார விளக்குகள், தோட்டங்களில் பயன்பாடுக்கு அதிகமாக ஆழ்துளை மோட்டார்களை இயக்குதல் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News