25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நேற்று காலை பழைய பாளையம், சக்கராஜா கோட்டை, சிங்கராஜா கோட்டை, திருவனந்தபு ரம் ஆகிய நான்கு கோட்டை சாவடிகளில் இருந்து சாமை கதிர் கட்டுகளை ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வீட்டில் பூஜை செய்து உற வினர்கள் வீடுகளுக்கு சென்று ஒருவருக்கொருவர் சாமை கதிர்களை வழங்கி மகிழ்ந்தனர்

 

ராஜபாளையத்தில் ராஜூக்கள் சமூகம் சார்பில் விவசாயம் செழிக்கவும், உறவுகளுக்குள் எழுந் துள்ள பூசல்களை சரி செய்யவும், சொந்த பந்தங்களை நேரில் கண்டு மகிழ்ச்சியை பரிமாறவும் ''கொத்தலு' என்ற புதியல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் ஊர் நிர்வாகம் சார்பில் சாமை கதிர்கள் அறுவடை செய்து பொது இடத்தில் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.கதிர்களை வீட்டில் வைத்து பூஜித்த பின் மாவிளக்கு, கொழுக்கட்டை, பானகரம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவர். அதேபோல் ஒவ்வொருவரும் பூஜித்த கதிர்களை எடுத்துக் கொண்டு உற வினர் வீடுகளுக்கு சென்று வழங்கி உறவுகளை புதுப்பிப்பர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News