மும்பையில் புரோ கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் மே 31ல் துவங்குகிறது.
2014 புரோ கபடி லீக் முதல் 11 சீசன் முடிந்துள்ளன. நடப்பு ஆண்டில் புரோ கபடி லீக் 12வது சீசன் வீரர்கள் ஏலம், மும் பையில் வரும் மே 31, ஜூன் 1ல் நடக்கவுள்ளன. கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்ச மாக 8 வீரர்கள் தலா ரூ. ஒரு கோடிக்கு மேல் ஒப்பந்தமாகினர். தமிழ் தலை வாஸ் அணி, . 2.15 கோடிக்கு சச்சின்தன்வரை வாங்கியது. இதுபோல இம்முறை நிறைய வீரர்கள் அதிக விலைக்கு ஒப்பந் தம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
புரோ கபடி லீக் சேர்மன் அனுபம் கோஸ்வாமி கூறுகையில், ''புரோ கபடி லீக் 12வது சீசனுக் கான வீரர்கள் ஏலம் மே 31ல் துவங்குகிறது. சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்து, வலுவான அணியை தேர்வு செய்ய ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்," என்றார்.
0
Leave a Reply