25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


APRIL 14TH விளையாட்டு போட்டிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

APRIL 14TH விளையாட்டு போட்டிகள் .

 வில்வித்தை, 

உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் - 1') தொடர் அமெரிக்காவில் ஆண்கள் அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அடானு தாஸ், திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் இடம் பெற்ற அணி, சீனாவுடன் மோதியது.

முதல் செட் 54-54 என சமன் ஆனது. அடுத்த செட்டை சீனா 58-55 என கைப்பற்றியது. 3வது செட்டில் சற்று தடுமாறிய இந்திய அணி 54-55 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 1-5 என (54-54, 55-58, 54-55) கணக்கில் தோல்வி யடைந்து, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.  இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத் தம் 4 பதக்கம் வென்றது.  

ஹாக்கி

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க  ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முதலிரண்டு போட்டியில் (ஏப். 26, 27) ஆஸ்தி ரேலியா 'ஏ' அணியை சந்திக்கும். இந்திய அணி, கடைசி மூன்று போட்டி யில் (மே 1, 3, 4) சீனியர் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடக்க உள்ளன.

இத் தொடருக்கான கேப்டனாக சலிமா, துணை கேப்டனாக நவ்னீத் கவுர் நியமிக்கப் பட்டனர். கோல்கீப்பராக சவிதா, பிச்சு தேவி தேர் வாகினர். ஜோதி சிங், சுஜாதா குஜூர், அஜ்மினா குஜூர், பூஜா யாதவ், மஹிமா டென் என, ஐந்து புதுமுக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.  26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது

டேபிள் டென்னிஸ் 

உலக கோப்பை டேபிள் டென்னிஸ்  சீனாவில், (ஒற்றையர்) தொடரில் இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா பங்கேற்கின்றனர். 

பெண்கள் ஒற்றையர் 'குரூப்-16' முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரான்சின் கிரெட் மேலிஸ் மோதினர். மணிகா 4-0 (11-1, 11-2, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.  

 இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, குரூப்-9' முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டான்டினா சைஹோ கியோஸ் மோதினர். இதில் ஸ்ரீஜா 3-1 (11-9, 11-4, 11-8, 6-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News