12TH APRIL விளையாட்டு போட்டிகள்
டென்னிஸ்
பெண்கள் அணிகளுக் கான 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் நடக்கிறது. புனேயில், 'ஆசிய-ஓசி யானா' குரூப்-1 போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி, தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளுடன் விளையாடுகிறது. நேற்று நடந்த போட்டி யில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியா வின் வைதேகி சவுத்ரி, சீனதைபேயின் ஆன் லின் பாங் மோதினர்.
அபாரமாக ஆடிய6-2, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வெற்றியை உறுதி செய்தது.
துப்பாக்கி சுடுதல்
அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப் பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. இதன் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி (581.26 புள்ளி), மனு பாகர், ரவிந்திர் சிங் (579.19) ஜோடிகள் முறையே 3, 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றன. மூன்றாவது இடத்துக்கான போட் டியில் ஷ்ருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி 16-8 என, மனு பாகர், ரவிந்தர் சிங் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றி யது. தங்கப்பதக்கத்தை சீன ஜோடி தட்டிச் சென்றது. இத்தொடரில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக் கம் வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா (5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) கைப்பற்றியது.
0
Leave a Reply