25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Oct 14, 2025

சர்வதேச ஸ்குவாஷ்சாலஞ்சர் பி.எஸ்.ஏ., அரங்கில் ஜோஷ்னா வென்ற 11வது கோப்பை. ஜோஷ்னா 'சாம்பியன் 

 சர்வதேச ஸ்குவாஷ் சாலஞ்சர் பி.எஸ்.ஏ., தொடர் ஜப்பானில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் 117வது இடத்திலுள்ள இந்தியாவின் 39 வயது ஜோஷ்னா சின்னப்பா, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்துபெற்ற எகிப்தின் ஹயா அலியை எதிர் கொண்டார்.முதல் செட்டில் 11-5  , 2  வது செட்டில்  11-9 , ஜோஷ்னா,மூன்றாவது செட்டில்  ஹயா அலி (11-5) வென்றார். 4வது செட்டை ஜோஷ்னா 11-8 என ஜோஷ்னா கைப்பற்றினார்.போட்டியி ன் முடிவில் ஜோஷ்னா 3-1 (11–5,11-19, 5-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

Oct 14, 2025

விளையாட்டு போட்டிகள் 14th OCTOBER 2025

 பெண்களுக்கான இந்தியன் ஓபன் கோல்ப் தொடர் ஹரியானாவில்  நடந்தது.இந்தியாவின் ஹிட்டாஷீபக்சி, 283 'ஸ்டிரோக்' பெற்று, மூன்றாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனவி (284) 4வது இடம் பெற்றார். சிங்கப்பூரின் ஷனான் (281), இங்கிலாந்தின் அலைஸ் (282) முதல் இரு இடம் பெற்றனர்.பிரைம் வாலிபால் லீக், நான்காவது சீசன் இந்தியாவின் ஐதராபாத்தில் நடக்கிறது.மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டி யில் ஆமதாபாத் அணி 3-2 என்ற (9:15, 7:15, 15:9, 15:11, 15:8) கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் டில்லி அணி 3-0 என (15:11, 15:9, 15:11) கேரளா (கோழிக் கோடு) அணியை வென்றது. இன்று ஓடென்ஸ் நகரில் டென்மார்க்ஓபன் பாட்மின்டன் தொடர் துவங்குகிறது. இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பெண்கள் ஒற்றையரில்அன்மோல், ஆண்கள் இரட்டையரில் ச சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகின்றனர்.

Oct 13, 2025

இந்தியாவின் ஜோஷ்னா ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

சர்வதேச ஸ்குவாஷ் தொடர்  ஜப்பானில், பெண்கள் ஒற்றை யர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் நார்டைன் கராஸ் மோதினர். சிறப்பாக  ஆடிய ஜோஷ்னா 3-0 (11–8, 15-13, 11–9) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிக்குள் நுழைந்தார். எகிப்து வீராங்கனை ராணர் இஸ்மாயிலை ஜோஷ்னா, எதிர் கொள்கிறார். 

Oct 13, 2025

ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அபே சிங் வெற்றி.

ஓபன் ஸ்குவாஷ் தொடர்  அமெரிக்காவில், சிலிக்கான் வேலியில் ,முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் 3-0 (12-10, 11-7, 13-11) என, எகிப்தின் கரீம் எம் ஹம்மாமியை வீழ்த்தினார். இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்றுப் போட்டியில் 0-3 (3-11, 5-11, 9-11) என எகிப்தின் கரீம் எல்டோர்கியிடமும் , இந்திய வீரர் ரமித் டான்டன் 2-3 (10-12, 11-5, 11-4, 9-11, 8-11) ஹங்கேரியாவின் பாலாஸ் பர்காஸிடம் தோல்வியடைந்தனர்.

Oct 13, 2025

சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் இந்தியா 2வது வெற்றி .

 மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ,சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசனில்  . 'நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, நியூசிலாந்து  அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங் (2வது நிமிடம்), சுனில் (15வது அராய்ஜீத் சிங் (26வது) தலா ஒரு கோல் அடித்து ,முதல் பாதி முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.இந்தியாசார்பில் ரோமன் குமார் (47வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று ,2வது வெற்றியை பதிவு செய்தது.

Oct 13, 2025

விளையாட்டு போட்டிகள் 13 th OCTOBER 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அசாமின்கவுகாத்தியில், (தனிநபர், இரட்டையர்) இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, ரக் ஷிதா ஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் இந்தியா சார்பில் அபிஷேக் பால் (1:04.17), 8 (1:11.23) முதலிடம் பிடித்தனர்.கென்யாவின் அலெக்ஸ் மடாடா (59.50 நிமிடம், ஆண்கள்), லிலியன் கசாய்ட் ரெங் கெருக் (1:07.20, பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றனர்.உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், 'ஸ்கீட்' பிரிவில்ஏதென்சில் இந்திய வீராங்கனை ரைசா தில்லான், 16வது இடம் பிடித்தார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பாவ்தேக் சிங் கில், 38வது இடம் பிடித்தார்.ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில், பெண்களுக்கான வாட்டர் போலோ போட்டியில் 8வது இடம் பிடித்த இந்தியா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றது. ஆண்கள், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றது.

Oct 13, 2025

நீச்சல் போட்டியில் சென்னை, செங்கல்பட்டு முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டில் முன்னிலை.

 முதல்-அமைச்சர் கோப்பைக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடந்து வருகிறது.சென்னை வேளச்சேரியில் நடந்து வரும்தொடரின் 11-வது நாளான நீச்சல்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் செங்கல்பட்டை சேர்ந்த கவீன்ராஜ் 16 நிமிடம் 54.97 வினாடிகளில் இலக்கைகடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். சென்னை வீரர் சாய் கணேஷ் வெள்ளிப்பதக்கமும், நெல்லை வீரர் லியோனர்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.  100 மீட்டர் பட்டர்பிளையில் ரோகித்பெனிடிக்சன் (செங்கல்பட்டு),  100 மீட் டர் பிரீஸ்டைல் ஜாஷூவா தாமஸ் (சென்னை) நிதிக் நாதெல்லா (செங்கல்பட்டு), 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக்கில் சுதேஷ் குமார் (செங்கல்பட்டு), ஆகியோர்  இதன் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் ,தங்கப்பதக்கத்தை வென்றனர். 

Oct 13, 2025

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் 13-வது பெண்கள் திருவிழா .

இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ் தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றுமுடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன்,'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில்இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். முடிவில் இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்து  ஆல்அவுட் ஆனது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்குமேல்எடுத்தமுதல்அணிஎன்றபெருமையைஇந்தியாபெற்றது. ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்து 3 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. 

Oct 11, 2025

இந்தியாவின் வினய் உலக 'பாரா பவர்லிப்டிங்' தொடரில் தங்கம் வென்றார்.

 மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'பாரா பவர்லிப்டிங்' சாம்பியன்ஷிப் தொடர்  எகிப்தில், ஜூனியர் ஆண்கள் 72 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் வினய் பங்கேற்றரர். முதலிரண்டு வாய்ப்புகளில் 137, 142 கிலோ தூக்கிய இவர், கடைசி வாய்ப் பில் 147 கிலோ தூக்கியது செல்லாது என நடுவர்கள் அறிவித்தனர். இருப்பினும் அதிகபட்சமாக 142 கிலோ துாக்கிய வினய், முதலிடத்தை உறுதி செய்து தங்கத்தை வென்றார். 

Oct 11, 2025

இந்தியா உலக ஜூனியர் பாட்மின்டனில், வெண்கலம் வென்றது .

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில், காலிறுதியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, முதன் முறையாக பதக்கத்தை உறுதி செய்தது ..இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' இந்தோனேஷியா அணிகள்  நேற்று நடந்த அரையிறுதியில் மோதின. உன்னதி ஹூடா, பார்கவ் ராம், விஸ்வா தேஜ், விஷாகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்திய அணி 0-2 (35-45, 21-45) என்ற கணக்கில்  தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது.உலக ஜூனியர் பாட்மின்டனில், கலப்பு அணிகளுக்கான இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தனிநபர் பிரிவு போட்டிகள் அக். 13 முதல் நடக்கவுள்ளன.

1 2 ... 83 84 85 86 87 88 89 ... 158 159

AD's



More News