25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Oct 21, 2025

மொராக்கோ ஜூனியர் உலக கால்பந்தில்  கோப்பை வென்றது.

 மொராக்கோ அணி ஜூனியர் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் ஆனது. பைனலில் 2-0 என, அர்ஜென்டினாவை வென்றது.சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன்,.சான்டியாகோவில் நடந்த பைனலில் அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதின. ஆடிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. .மொராக்கோ சார்பில் முகமது யாசிர் ஜாபிரி 2 கோல் (12,29வது நிமிடம்) அடித்தார். கானா அணிக்கு பின் (2009) ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆப்ரிக்க அணியானது மொராக்கோ.அர்ஜென்டினா (6 முறை), பிரேசில் (5)  அணிகள், இத் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற முதலிரண்டு இடத்தில் உள்ளன

Oct 18, 2025

சஹாஜா, மாயாவுக்கு சென்னை ஓபன் டென்னிசில் அனுமதி !

மூன்று ஆண்டுக்குப் பின் ,சென்னை ஓபன் 'டபிள்யு.டி.ஏ., 250 டென்னிஸ் தொடர் மீண்டும் சென்னையில் ,வரும் அக். 27 முதல் நவ. 2 வரை  நடக்க உள்ளது. இந்தியா சார்பில் அன்கிதா ரெய்னா-ராஷ்மிகா, ருடுஜா-ரியா ஜோடி களமிறங்குகிறது. இந்தியாவின் பிரார்த்தனா, அரியான்னேவுடன் (நெதர்லாந்து) இணைந்து பங்கேற்க உள்ளார் இத்தொடரில் பங்கேற்க்கும் வீராங்கனைகளின்  ('ரேங்க்') இரு குழந்தைகளுக்கு அம்மா, ஜெர்மனியின் டாட்ஜனா மரியாவுக்கு 'நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டது. 

Oct 18, 2025

தான்வி  சர்மா உலக ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்

 இந்தியாவின் தான்வி சர்மா, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ,ஜப்பானின் சகி மட்சுமோடோ மோதினர். தான்வி 13-15, 15-9, 15-10 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இம்முறை இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் தான்வி.தவிர இவர், 17 ஆண்டுகளுக்கு பின் இத் தொடரில் பதக்கம் வெல்லும் இந்திய வீராங்கனையாகிறார்.  இந்தியாவின் செய்னா நேவல் கடைசியாக 2008ல் புனேயில் நடந்த தொடரில் தங்கம் வென்றிருந்தார். 

Oct 18, 2025

ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த  இந்திய  அணி பங்கேற்க தகுதி பெற்றது!

ஆசிய கால்பந்து 10வது சீசன், பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) 2026ல் சீனாவில் (ஏப்.30-மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கிர்கிஸ்தானில் நடந்தன. '' பிரிவில் நேற்று இந்தியா, உஸ்பெகிஸ்தான் மோதின..இந்திய அணி  முதல் பாதியில்என  0-1 பின்தங்கியது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த  இந்திய  அணி (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி) பங்கேற்க தகுதி பெற்றது. 

Oct 18, 2025

பெண்கள்  கிரிக்கெட் உலக கோப்பையில் தென் ஆப்ரிக்கா வெற்றி !

பெண்கள் உலக கோப்பை கொழும்புவில் நேற்று நடந்த (50 ஓவர்) லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணி 12 ஓவரில், 46/2 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின், 20 ஓவர் போட்டியாக ,விஷ்மி (34) கைகொடுக்க இலங்கை அணி 20 ஓவரில் 120/7 ரன் எடுத்தது.  தென் ஆப்ரிக்க அணி 14.5 ஓவரில் 125/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Oct 18, 2025

சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி இந்தியா  அணி  பைனலில் வெற்றி !

 சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் ,மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன .கடைசி லீக் போட்டியில்  நேற்று இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும். முடிவில் இந்திய அணி  2-1 என்ற கோல் கணக்கில்'வெற்றி பெற்றது. 5 போட்டியில் 3 வெற்றி, 'டிரா' (1 தோல்வி) 1 செய்த இந்திய அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. இத்தொடரில் 8வது முறையாக பைனலுக்கு முன்னேறிய  இந்திய அணி ,இன்று நடக்கும் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

Oct 17, 2025

ஒவ்வொரு மாதமும் சர்வதேச போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைக்கு ,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.

இந்தியாவின் அபிஷேக் சர்மா சிறந்த வீரராக தேர்வானார்.இந்தியாவின் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, ஜிம்பாப் வேயின் பிரையன் பென்னட் கடந்த செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுருக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த வீரராக அபிஷேக் தேர்வானார். கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் குவித்து (314 ரன், சராசரி 44.85, 'ஸ்டி ரைக் ரேட்' 200.00) தொடர் நாயகன் விருது வென்றார் அபிஷேக்.இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாசிறந்த வீராங்கனைக்கான விருது.தென் ஆப்ரிக்காவின் தஸ் மின் பிரிட்ஸ் ,சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, பரிந்துரைக்கப்பட்டனர். இதில் மந்தனா, சிறந்த வீராங்கனையாக தேர்வானார். கடந்த மாதம் விளையாடிய 4 ஒருநாள் போட்டியில், 2 சதம் உட்பட 308 ரன் குவித்தார் (சராசரி 77.00, 'ஸ்டிரைக் ரேட்' 135.68) மந்தனா.

Oct 17, 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள்.

 உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர், அசாமின் கவுகாத்தியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, சீனாவின் லி யுவான் சன் மோதினர்.தான்வி 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் ஞான தத்து, அமெரிக்காவின்காரெட்டான் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் மோதினர். ஞானதத்து 15-12, 15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இந்தியாவின் பவ்யா சாப்ரா, விஷாகா  ஜோடி ,கலப்பு  இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் 12-15, 15-11, 15-12 என்ற கணக்கில் பிரான்சின் திபோட்ஸ் கார்டன், அகதே குவேஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். .

Oct 17, 2025

இந்தியாவுக்கு  ஆசிய பாரா டேபிள் டென்னிசில் இரண்டு வெண்கலம் !

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்  சீனாவின் பீஜிங் நகரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 1') அரையிறுதியில் இந் தியாவின் ஜெகன் மதன், தென் கொரியாவின் சாங்கு ஜியோங்மோதினர். ஜெகன் மதன் 0-3 (6-11, 1-11, 8-11) என்ற கணக்கில்தோல்வியடைந்து வெண்கலம் வென்றார். இந்தியாவின் சந்தீப் டாங்கி 0-3 (0-11, 1-11, 6-11) என, தென் கொரியாவின் ஹாக்ஜின் கிம். மிடம் தோல்வியடைந்து மற்றொரு அரையிறுதியில் வெண்கலம் கைப்பற்றினார்  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ,ஆசிய பாரா டேபிள் டென்னிஸ்  வரலாற்றில், இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் கிடைத்தது.

Oct 16, 2025

ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்டதொடரில்  ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.நேற்று இரண்டு பிரிவுகளாக  ,ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.ஆஸ்திரேலிய மண்ணில் சீனியர் வீரர்கள் செயல்பாடு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். ரோகித், கோலிக்கு இது சிறந்த தொடராக அமையும்," என்றார்.காம்பிர்  "உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு சிறந்த அணியை உருவாக்குவோம்  என்றார்.

1 2 ... 81 82 83 84 85 86 87 ... 158 159

AD's



More News