25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


விளையாட்டு (SPORTS)

Feb 12, 2025

தேசிய விளையாட்டுபோட்டிகள்

பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நேற்று பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் நடந்தது.பாரிஸ் ஒலிம்பிக் 4X400 5., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் வித்யா 26, , 58.11 வினாடி நேரத்தில் ஓடிவந்து, தங்கப்பதக்கம் வென்றார். .மற்றொரு தமிழக வீராங்கனை ஸ்ரீவர்தானி (59.86) , மகா ராஷ்டிராவின் நேஹா (1:00.52) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். உயரம் தாண்டுதல்பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஹரியானாவின் பூஜா (1.84 மீ.,) தங்கம் வென்றார். தமிழகத்தின் கோபிகா,1.79 மீ., உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம்  வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபிநயா (1.77 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.  ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ,உ.பி.,வீரர் சச்சின் யாதவ், 84.39 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உ.பி., வீரர்கள் ரோகித் யாதவ் (86.23 மீ.,), விகாஷ் சர்மா (79.33 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம்ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் சவான் பார் வல் (13 நிமிடம், 45.93 வினாடி) தங்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். 

Feb 12, 2025

சீனாவில், ஆசிய பாட்மின்டன்

சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின.கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-10, 21-9 என மக்காவின் லியோங், வெங் சி ஜோடியை வீழ்த்தியது.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-12 என மக்காவ் வீரர் பாங் போங் புய்யை வென்றார். பெண்கள் ஒற்றையரில் இந்தியா வின் மாளவிகா 21-15, 21-9 என மக்காவின் ஹாவோவை சானை தோற்கடித்தார்.ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-9 என மக்காவின் புய் சி சோன், வோங் கோக் வெங் ஜோடியை வென் றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-5 என மக்காவின் வெங்சி, புய் சிவா ஜோடியை வீழ்த்தியது.முடிவில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. 

Feb 12, 2025

கிரிக்கெட்

 இந்தியாவந்தஇங்கிலாந்துஅணிமூன்றுபோட்டிகள்கொண்டஒருநாள்தொடரில்பங்கேற்றது.இந்தியஅணி, தொடரை 20 என ஏற்கனவேகைப்பற்றிவிட்டது.மூன்றாவதுபோட்டிநேற்றுஉலகின்பெரியமோடிமைதானத்தில்(ஆமதாபாத்) நடந்தது.   இந்திய அணி 41 ஓவரில் 289/5 ரன் எடுத்து வெற்றி. இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.சச்சின் (21,741), சங்ககரா (18,423), ஜெய வர்தனாவுக்கு (17,386), அடுத்து கோலி (16,000) உள்ளார் இந்திய வீரர் சுப்மன் கில் நேற்று தனது 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன், 50 வது ஒருநாள் போட்டி யில் சதம் அடித்த முதல் இந்தியர் ஆனார். ஆசிய அளவில் அதிக ரன் குவித்த வீரர் களில்நேற்று 52 ரன் எடுத்த கோலி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 4000 ரன் எடுத்த முதல் இந்தியர் ஆனார்.  ஆசிய மண்ணில் நடந்த மூன்று வித போட்டிகளில் அதி வேகமாக 16,000 ரன் எடுத்த வீரர் வரிசையில் இந்தியாவின் சச்சினை (353) முந்தினார் கோலி.     

Feb 11, 2025

தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் தேசிய விளையாட்டு 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஓட்ட பந்தயம் தமிழக வீரர் ராகுல் குமார் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் (21.06 வினாடி), நிதின் (21.07) இரண்டு, மூன்றாவது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தன. ஒடிசா வீரர் அனிமேஷ் (20.58) தங்கம் வென்றார்.  தமிழகத்தின் தீபிகா, பெண்களுக்கான 'ஹெப் டத்லான்' போட்டியில், வெண்கலம் கைப்பற்றினார்.தமிழகம் 74 பதக்கங்கள் வென்று, முதலிடத்தில் உள்ளது. தேசிய விளையாட்டில் இதுவரை தமிழகம் 21 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கம் வென்று, 6வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் அணி (49 தங்கம், 18 வெள்ளி, 19 வெண் கலம் என 86) முதலிடத்தில் உள்ளது. டென்னிசில் தங்கம்தமிழகத்தின் அக்ஸ் பத் ரிநாத், லட்சுமி பிரபா ஜோடி,டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில், 6-4, 6-1 என கர்நாடகாவின் நிக்கி, சோகா ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.  குஜராத்தின் ஜாவியாவை சர்வீசஸ் வீரர் இஷாக் இக்பால், 3-6, 6-4, 7-6 என  வென்று, தங்கம் வென்றார்.குஜராத்தின் வைதேகி பெண்கள் ஒற்றையர் பைனலில், 6-4, 6-4 என நேர் செட்டில் மகாராஷ்டிராவின் ஜீல் தேசாயை வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.அரையிறுதியில் வீழ்ந்த ஆமோதினி (கர்நாடகா),  ஆகான்ஷா (மகா ராஷ்டிரா), வெண்கலப் பதக்கம் பெற்றனர். 9 பேரும் சாதனை 11 பேர் பங்கேற்ற ,பெண்களுக்கான 10 கி.மீ., நடை பந்தயம் நேற்று நடந்தது.2 பேர் பாதியில் விலகினர். ஹரியானாவின் ரவினா (45.52 நிமிடம்), தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். அடுத்து வந்த உத்தரகாண்ட் வீராங்கனைகள் ஷாலினி  (46.12), บយល់ (47.36), மான்சி (48.32), உ.பி.,யின் முனிதா (46.23), ரேஷ்மா (48.16), மோகவி (46.23, தமிழகம்), சேஜல் (49.33 மகா ராஷ்டிரா), மோனிகா (51.45, ஹரியானா) என 8 பேரும் தேசிய சாதனை படைத்தனர்.தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக் கிறது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நேற்று நடந்தது. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.50 மீ., நீளம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற் றினார்.தமிழகத்தின் மற்றொரு வீரர் முகமது சலாஹு தீன், 16.01 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார். கேரளாவின் முகமது முஹாசின் (15.57 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.   

Feb 11, 2025

விளையாட்டு போட்டிகள் FEBRUARY 12TH

  டென்னிஸ்இந்தியாவின் சசிகுமார் முகுந்த் டில்லி ஓபன் தொடரின் முதல் சுற்றில் ,பிரான்சின் சாஸ்ச்சா கய்மார்ட் வேயன்பர்க்கை 4-6, 6-2, 6-0 என்ற கணக்கில் வென்றார்.  பிரான்சில் ஆண்களுக் கான ஏ. டி. பி., டென்னிஸ் தொடர் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகிபாம்ப்ரி, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி, நெதர்லாந்தின் டேவிட் பெல், அமெரிக் காவின்பாட்ரிக் ஜோடியை எதிர்கொண்டது. செஸ் "நார்வே தொடர் உட்பட வரும் போட்டிகளில் வென்று கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதே இலக்கு," என்று தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி கூறினார். 

Feb 11, 2025

தேசிய இந்தியன் ஸ்னூக்கர் தொடரில் 36 வது கோப்பை வென்றார் அத்வானி

 தேசிய ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப் மத்திய பிரதேசத்தின் இந்துார் தொடரின் 91வது சீசன் நடந்தது.  இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பங்கஜ் அத்வானி, ஆண்களுக்கான பைனலில் , கோல்கட்டாவின் பிரிஜேஷ் தமானி பலப்பரீட்சை நடத்தினர்.துவக்கத்தில் 2-4 என பின் தங்கினார் அத்வானி., அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.  36 வது கோப்பையை தேசிய தொடரில் அத்வானி வென்றார்.   

Feb 10, 2025

தாய்லாந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வில்வித்தை.. 

ஆசிய கோப்பை உலக ரேங்கிங் ,தாய்லாந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வில்வித்தை தொடர். நேற்று கடைசி நாளில் தனிநபர் பிரிவு நடந்தன. போட்டிகள் உலகபெண்களுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, சிங்கப்பூரின் நுார் அலிம் மோதினர். சரிதா 143–142 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், 143-141எனஇந்தோனேஷியாவின் சுவாகு மிலாங்கை வென்று தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.   பெண்களுக்கான ரிசர்வ் பிரிவு பைனலில் இந்தியாவின் பூஜா ஜத்யன், 0-6 என செக் குடியரசின் ஜீவா  லாவ்ரின்ச்சிடம் தோற்க வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இத்தொடரில் இந்தியா, 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் வென்றது.  

Feb 10, 2025

மலேஷியா  நடந்த 19 வயதுக்கு உட்பட்ட T20 கிரிக்கெட் மற்றும் கோகோ போட்டிகள்

மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'டி-20' உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இதில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை கமலினி (143 ரன், 2 கேட்ச்,4 ஸ்டம்பிங்) சிறப்பாக விளையாடினார்.டில்லியில் நடந்த கோ- கோ உலக கோப்பையை இந்திய ஆண்கள் அணி வென்றது. இதில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சுப்ரமணி சிறப்பாக விளையாடினார்.கமலினியை ஊக்கப்படுத்தும் வகையில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். சுப்ரமணிக்கும் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 

Feb 10, 2025

ஜெர்மனியில் 'பிரீஸ் டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்

 ஜெர்மனியில் 'பிரீஸ் டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியா வின் குகேஷ்,  பிரீஸ்டைல் செஸ் தொடர் காலிறுதியில் குகேஷ் தோல்வி அடைந்தார். தகுதிச்சுற்றில் பங்கேற்ற 9 போட்டியில் 7 'டிரா, 2 தோல்வி அடைந்த குகேஷ், 3.5 புள்ளியுடன் 8வது இடம் பிடித்தார்.  

Feb 10, 2025

தேசிய துப்பாக்கி சுடுதல்

டில்லியில் நடக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிப் போட்டி 25 மீ., 'பிஸ்டல்' பைனலில் மனு பாகர் 3வது இடம். முதலிரண்டு இடத்தை ஹர்மன்பிரீத் கவுர், ஈஷா சிங் கைப்பற்றினர். 

1 2 ... 81 82 83 84 85 86 87 ... 93 94

AD's



More News