25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Oct 23, 2025

லக்சயா ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்  மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றார்.

ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட் மின்டன் சாம்பியன்ஷிப்தொடர்  சீனாவின் செங்டு நகரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது சுற்றில்இந்தியாவின் லக்சயா, சீனதைபேயின் குவான்யிலின் மோதினர். இதில் லக்சயா 21-17, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் திக்ஷா  மற்றொரு 2வது போட்டியில் 17- 21, 21-16,  21-11 சீனாவின் யாருலுவோவை வீழ்த்தினார்.இந்தியாவின் ஜாக் ஷேர் சிங் 21-14, 21-17 என சீனாவின் பெங் யூ ஜாங்கை, ஆண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது வீழ்த்தினார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் நிஷ்சல் சந்த், ஹர்திக் திவ்யான்ஷ் தோல்வி யடைந்தனர்.

Oct 23, 2025

பெண்களுக்கான ஆசிய யூத் கபடி: பைனலில்  இந்திய பெண்கள்  அணி முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது.

ஆசிய யூத் விளையாட்டு  பஹ்ரைனின் மனாமா நகரில் ,பெண்களுக்கான கபடியில்இந்திய அணி, முதல் மூன்று போட்டியில் வங்க தேசம், இலங்கை, தாய்லாந்தை வீழ்த்தியது. நான்காவது போட்டியில் இந்திய பெண்கள் அணி,  ஈரானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 59-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பட்டியலில்முதலிடம்பிடித்துபைனலுக்குமுன்னேறியது..இன்று, இரண்டாவுது இடம் பெற்ற ஈரானை எதிர் கொள்கிறது.  இந்திய அணி தனது நான்காவது போட்டியில் ஆண்களுக்கான கபடியில் ,ஈரானை எதிர் கொண்டது. இந்தியா, 46–29 என்ற புள்ளிக் கணக்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு வெற்றி பெற்ற இந்திய அணி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று தனது ஐந்தாவது போட்டியில் தாய்லாந்தை சந்திக்க உள்ளது.இந்திய அணி இதுவரை ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது

Oct 22, 2025

விளையாட்டு போட்டிகள் 22 nd OCTOBER.

தெற்காசிய தடகள சீனியர் சாம்பியன் ஷிப் போட்டி, இந்தியாவின் ராஞ்சியில் அக். 24-26ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட் பட 7 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியினர் நேற்று ராஞ்சி வந்தடைந்தனர்.சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் பிரான்சில் ,ஆண்கள் இரட்டையர் முதல்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஸ்பெயினின் மார் டோஸ், வேஹா ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியில் இந்திய ஜோடி 6-7, 6-1,10-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தது. ஆசிய கால்பந்து பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) ,10வது சீசன், 2026ல் சீனாவில் ( ஏப்ரல் 30- மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, பிரதான தொடருக்கு முன்னேறியது. இதையடுத்து அகில இந்திய கால்பந்து கூட்ட மைப்பு, ரூ.22,00,000 பரிசு தருவதாக அறிவித்துள்ளது. பஹ்ரைனில் ஆசிய யூத் குத்துச் சண்டை விளையாட்டு, அக். 23ல் துவங்குகிறது.

Oct 22, 2025

கொழும்புவில் நேற்று நடந்த லீக் போட்டியில் ,பெண்கள் உலக கோப்பையில்  தென் ஆப்ரிக்கா  அணி.

பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்)கொழும்புவில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி ' பீல்டிங் தேர்வு செய்தது.தென் ஆப்ரிக்க அணி 2 ஓவரில் 6/1 ரன் எடுத்திருந்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்  பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும், தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி 40 ஓவரில் 312/9 ரன் குவித்தது. பாகிஸ்தான் சார்பில் சாடியா, நஷ்ரா தலா 3 விக்கெட் சாய்த்தனர். பாகிஸ்தான் அணி 4 ஓவரில் 22/1 ரன் எடுத்திருந்தது.

Oct 22, 2025

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி தோல்வி .

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், ஆஸ்திரேலியாவில்,  2026, மார்ச் 1–26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக இத்தொடருக்கு தகுதி பெற்றது.  தனது முதல் போட்டியில்இந்திய அணி வியட்நாம் (2026, மார்ச் 4) அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகத் தரவரிசையில் 63வது இடத்திலுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஈரான் ('நம்பர் - 73), நேபாள (89) அணிகளுடன்இணைந்து முத்தரப்பு ‘நட்பு தொடரில் பங்கேற்கிறது.  மேஹாலயாவின் ஷில்லாங்கில்  முதல் போட்டியில். இந்தியா, ஈரான் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 64வது நிமிடம் ஈரான் வீராங்கனை சாராதிதார் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 74 வது நிமிடம் மீண்டும் சாரா, இரண்டாவது  கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது. 

Oct 22, 2025

இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ,உலக பாட்மின்டன் கூட்டமைப்பு தரவரிசையில்   'நம்பர்-3  …

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான  உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு. எப்.,) சார்பில், தரவரிசை பட்டியல் வெளியானது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சமீபத்தில் எவ்வித தொடரிலும் கோப்பை வெல்ல வில்லை.உலக சாம்பியன்ஷிப்பில் 2025 இல் வெண்கலம் வென்றது. இரு தொடரில் பைனல், 6 தொடரில் அரையிறுதி வரை சென்றது.இதனால் 80,050 புள்ளியுடன், மூன்று இடம் முன்னேறி, மூன்றாவது இடத்தில் உள்ளது. தவிர, கடந்த 2024 செப்டம்பர்மாதத்துக்குப் பின், முதன் முறையாக 'டாப்-5' இடத்துக்குள் நுழைந்தது.முதல் இரு இடத்தில் தென் கொரியாவின் கிம் வான் (1,14,805), சியோ சியுங் (92,450), மலேசியாவின் ஆரோன் சியா, சோ ஊய் ஜோடி உள்ளது. ஆண்கள் ஒற்றையரில் தர வரிசையில் 5 இடம் முந்தி, 16 வது இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா, தனிஷா ஜோடி 15வது இடத்துக்குமுன்னேறியது. (ஒற்றையர்), சிந்து திரீஷா, காயத்ரி ஜோடி (பெண்கள் இரட்டையர்) 13வது இடத்தில் தொடர்கின்றனர்.

Oct 21, 2025

திவ்யான்ஷி ஜோடி யூத் டேபிள் டென்னிசில்  சாம்பியன் !

சர்வதேச டேபிள் டென்னிஸ் யூத் கன்டெண்டர் தொடர்  மான்டெனெக்ரோவில் ,பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, சின்ட்ரல்லா ஜோடி, போர்டோரிகோவின் எட்மையர் லியான், போலந்தின் நடாலியா ஜோடியை சந்தித்தது. தொடர்ந்து  3 செட்டையும்11-4 , 11-5 , 11-4 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயதுக்கு உட்பட்ட) பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் இஷிதாவை சந்தித்தார்.. முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது

Oct 21, 2025

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 760 பாட்மின்டன் தொடரில் சாதிப்பாரா லக்சயா சென் .

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 760 பாட்மின்டன் தொடர்பிரான்ஸ் தலைநகர் பாரீசில், இன்று துவங்குகிறது.2022, 2024 பாரிஸ் தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையரில் களமிறங்குகிறது.இந்த ஆண்டு பாரிசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதுபோன்றவை இந்திய ஜோடி சிறப்பாக செயல் பட தூண்டுகோலாக அமையும்.ஆண்கள் ஒற்றையரில் உலகத் தரவரிசையில் 21வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென். முதல் சுற்றில்  நிகுயேனை சந்திக்க உள்ளார். சமீபத்திய ஹாங்காங் ஓபன் பைனலுக்கு முன்னேறிய சாதிக்க லக்சயா முயற்சிக்கலாம். இவருடன் ஆயுஷ் ஷெட்டியும் பங்கேற்கிறார்.பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் அன்மோல்கார்ப், முதல்சுற்றில் தென் கொரியாவின் வலிமையான ஆன் சேயங்கை சந்திக்க உள்ளார். மற்றொரு வீராங்கனை அனுபமா, இத்தொடரின் ‘நம்பர்-4' அந்தஸ்து பெற்ற சீனாவின் ஹான்யுவேவை சந்திக்க - காத்திருக்கிறார்.சாய் பிரதீக், கிருஷ்ணமூர்த்தி ஜோடி, பெண்கள் இரட்டையரில் கவிப்பிரியா, சிம்ரன் சிங், ருதுபர்ணா-ஸ்வே தாபர்ணா சகோதரிகளும் இத்தொடரில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.

Oct 21, 2025

யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் அபே சிங் வெற்றி .

. யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் தொடர்அமெரிக்காவில்,  முதல் சுற்றில் இந்திய வீரர் அபே சிங், எகிப்தின் முகமது எல் ஷெர்பினியை எதிர்கொண்டார். ஒருமணி நேரம். 2 நிமிடம் நீடித்த போட்டியில் ,அபே சிங் 3-2 , (11-8, 4-11, 4-11, 11-6, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன், நியூசிலாந்தின் பால் கோல் மோதினர். இதில் ரமித் டான்டன் 0-3  (5-11, 9-11, 7-11) என தோல்வியடைந்து வெளியேறினார்.

Oct 21, 2025

பெண்களுக்கான உலக கோப்பை  (50 ஓவர்) கிரிக்கெட்13வது சீசன்.

பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் இந்தியா, இலங்கையில், 8 அணிகள் மொத்தம் பங்கேற்கின்றன. இது வரை நடந்த போட்டி (9), இங்கிலாந்து (9), முடிவில், ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க அணிகள் (8) அரையிறுதிக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் உட்பட ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. இந்திய பெண்கள் அணி இதுவரை 5 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளி (ரன் ரேட் 0.526) மட்டும் பெற்று, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்துநியூசிலாந்து (அக். 23), வங்கதேச (அக். 26) அணிகளை சந்திக்க உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம்.ஏதாவது ஒரு போட்டியில் தோற்க நேரிட்டால், 6 புள்ளியுடன், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

1 2 ... 80 81 82 83 84 85 86 ... 158 159

AD's



More News