25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேசிய விளையாட்டு பாட்மின்டனில் இரண்டு தங்கம் வென்றார் சதிஷ்குமார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய விளையாட்டு பாட்மின்டனில் இரண்டு தங்கம் வென்றார் சதிஷ்குமார்.

 இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்களுக்கான ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் கருணாகரன், உத்தரகாண்ட்டின் சூர்யாக்ஸ் ராவத் மோதினார். இதில் சதிஷ்குமார்  21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, பைனலில் மகாராஷ்டிராவின் தீப் ராம்பியா, அக்சயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 21-11, 20-22, 21-8 போராடி வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது. 

பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் ஹரியானாவின் அன்மோல், உத்தரகாண்ட்டின் அனுபமாவை சந்தித்தார்.இதில் அன்மோல் 21-16, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப்ப தக்கம் வென்றார்.

பெண்கள் இரட்டையரில் கர்நாடகாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி  21-17, 15-21, 21-12 என காயத்ரி, மானசா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது. தமிழ கத்தின் வர்ஷினி, அருள் பாலா ஜோடி வெண்கலம் வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News