25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Oct 22, 2025

கொழும்புவில் நேற்று நடந்த லீக் போட்டியில் ,பெண்கள் உலக கோப்பையில்  தென் ஆப்ரிக்கா  அணி.

பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்)கொழும்புவில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி ' பீல்டிங் தேர்வு செய்தது.தென் ஆப்ரிக்க அணி 2 ஓவரில் 6/1 ரன் எடுத்திருந்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்  பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும், தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி 40 ஓவரில் 312/9 ரன் குவித்தது. பாகிஸ்தான் சார்பில் சாடியா, நஷ்ரா தலா 3 விக்கெட் சாய்த்தனர். பாகிஸ்தான் அணி 4 ஓவரில் 22/1 ரன் எடுத்திருந்தது.

Oct 22, 2025

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி தோல்வி .

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், ஆஸ்திரேலியாவில்,  2026, மார்ச் 1–26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக இத்தொடருக்கு தகுதி பெற்றது.  தனது முதல் போட்டியில்இந்திய அணி வியட்நாம் (2026, மார்ச் 4) அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகத் தரவரிசையில் 63வது இடத்திலுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஈரான் ('நம்பர் - 73), நேபாள (89) அணிகளுடன்இணைந்து முத்தரப்பு ‘நட்பு தொடரில் பங்கேற்கிறது.  மேஹாலயாவின் ஷில்லாங்கில்  முதல் போட்டியில். இந்தியா, ஈரான் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 64வது நிமிடம் ஈரான் வீராங்கனை சாராதிதார் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 74 வது நிமிடம் மீண்டும் சாரா, இரண்டாவது  கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது. 

Oct 22, 2025

இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ,உலக பாட்மின்டன் கூட்டமைப்பு தரவரிசையில்   'நம்பர்-3  …

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான  உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு. எப்.,) சார்பில், தரவரிசை பட்டியல் வெளியானது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சமீபத்தில் எவ்வித தொடரிலும் கோப்பை வெல்ல வில்லை.உலக சாம்பியன்ஷிப்பில் 2025 இல் வெண்கலம் வென்றது. இரு தொடரில் பைனல், 6 தொடரில் அரையிறுதி வரை சென்றது.இதனால் 80,050 புள்ளியுடன், மூன்று இடம் முன்னேறி, மூன்றாவது இடத்தில் உள்ளது. தவிர, கடந்த 2024 செப்டம்பர்மாதத்துக்குப் பின், முதன் முறையாக 'டாப்-5' இடத்துக்குள் நுழைந்தது.முதல் இரு இடத்தில் தென் கொரியாவின் கிம் வான் (1,14,805), சியோ சியுங் (92,450), மலேசியாவின் ஆரோன் சியா, சோ ஊய் ஜோடி உள்ளது. ஆண்கள் ஒற்றையரில் தர வரிசையில் 5 இடம் முந்தி, 16 வது இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா, தனிஷா ஜோடி 15வது இடத்துக்குமுன்னேறியது. (ஒற்றையர்), சிந்து திரீஷா, காயத்ரி ஜோடி (பெண்கள் இரட்டையர்) 13வது இடத்தில் தொடர்கின்றனர்.

Oct 21, 2025

திவ்யான்ஷி ஜோடி யூத் டேபிள் டென்னிசில்  சாம்பியன் !

சர்வதேச டேபிள் டென்னிஸ் யூத் கன்டெண்டர் தொடர்  மான்டெனெக்ரோவில் ,பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, சின்ட்ரல்லா ஜோடி, போர்டோரிகோவின் எட்மையர் லியான், போலந்தின் நடாலியா ஜோடியை சந்தித்தது. தொடர்ந்து  3 செட்டையும்11-4 , 11-5 , 11-4 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயதுக்கு உட்பட்ட) பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் இஷிதாவை சந்தித்தார்.. முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது

Oct 21, 2025

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 760 பாட்மின்டன் தொடரில் சாதிப்பாரா லக்சயா சென் .

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 760 பாட்மின்டன் தொடர்பிரான்ஸ் தலைநகர் பாரீசில், இன்று துவங்குகிறது.2022, 2024 பாரிஸ் தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையரில் களமிறங்குகிறது.இந்த ஆண்டு பாரிசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதுபோன்றவை இந்திய ஜோடி சிறப்பாக செயல் பட தூண்டுகோலாக அமையும்.ஆண்கள் ஒற்றையரில் உலகத் தரவரிசையில் 21வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென். முதல் சுற்றில்  நிகுயேனை சந்திக்க உள்ளார். சமீபத்திய ஹாங்காங் ஓபன் பைனலுக்கு முன்னேறிய சாதிக்க லக்சயா முயற்சிக்கலாம். இவருடன் ஆயுஷ் ஷெட்டியும் பங்கேற்கிறார்.பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் அன்மோல்கார்ப், முதல்சுற்றில் தென் கொரியாவின் வலிமையான ஆன் சேயங்கை சந்திக்க உள்ளார். மற்றொரு வீராங்கனை அனுபமா, இத்தொடரின் ‘நம்பர்-4' அந்தஸ்து பெற்ற சீனாவின் ஹான்யுவேவை சந்திக்க - காத்திருக்கிறார்.சாய் பிரதீக், கிருஷ்ணமூர்த்தி ஜோடி, பெண்கள் இரட்டையரில் கவிப்பிரியா, சிம்ரன் சிங், ருதுபர்ணா-ஸ்வே தாபர்ணா சகோதரிகளும் இத்தொடரில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.

Oct 21, 2025

யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் அபே சிங் வெற்றி .

. யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் தொடர்அமெரிக்காவில்,  முதல் சுற்றில் இந்திய வீரர் அபே சிங், எகிப்தின் முகமது எல் ஷெர்பினியை எதிர்கொண்டார். ஒருமணி நேரம். 2 நிமிடம் நீடித்த போட்டியில் ,அபே சிங் 3-2 , (11-8, 4-11, 4-11, 11-6, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன், நியூசிலாந்தின் பால் கோல் மோதினர். இதில் ரமித் டான்டன் 0-3  (5-11, 9-11, 7-11) என தோல்வியடைந்து வெளியேறினார்.

Oct 21, 2025

பெண்களுக்கான உலக கோப்பை  (50 ஓவர்) கிரிக்கெட்13வது சீசன்.

பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் இந்தியா, இலங்கையில், 8 அணிகள் மொத்தம் பங்கேற்கின்றன. இது வரை நடந்த போட்டி (9), இங்கிலாந்து (9), முடிவில், ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க அணிகள் (8) அரையிறுதிக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் உட்பட ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. இந்திய பெண்கள் அணி இதுவரை 5 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளி (ரன் ரேட் 0.526) மட்டும் பெற்று, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்துநியூசிலாந்து (அக். 23), வங்கதேச (அக். 26) அணிகளை சந்திக்க உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம்.ஏதாவது ஒரு போட்டியில் தோற்க நேரிட்டால், 6 புள்ளியுடன், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

Oct 21, 2025

மொராக்கோ ஜூனியர் உலக கால்பந்தில்  கோப்பை வென்றது.

 மொராக்கோ அணி ஜூனியர் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் ஆனது. பைனலில் 2-0 என, அர்ஜென்டினாவை வென்றது.சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன்,.சான்டியாகோவில் நடந்த பைனலில் அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதின. ஆடிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. .மொராக்கோ சார்பில் முகமது யாசிர் ஜாபிரி 2 கோல் (12,29வது நிமிடம்) அடித்தார். கானா அணிக்கு பின் (2009) ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆப்ரிக்க அணியானது மொராக்கோ.அர்ஜென்டினா (6 முறை), பிரேசில் (5)  அணிகள், இத் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற முதலிரண்டு இடத்தில் உள்ளன

Oct 18, 2025

சஹாஜா, மாயாவுக்கு சென்னை ஓபன் டென்னிசில் அனுமதி !

மூன்று ஆண்டுக்குப் பின் ,சென்னை ஓபன் 'டபிள்யு.டி.ஏ., 250 டென்னிஸ் தொடர் மீண்டும் சென்னையில் ,வரும் அக். 27 முதல் நவ. 2 வரை  நடக்க உள்ளது. இந்தியா சார்பில் அன்கிதா ரெய்னா-ராஷ்மிகா, ருடுஜா-ரியா ஜோடி களமிறங்குகிறது. இந்தியாவின் பிரார்த்தனா, அரியான்னேவுடன் (நெதர்லாந்து) இணைந்து பங்கேற்க உள்ளார் இத்தொடரில் பங்கேற்க்கும் வீராங்கனைகளின்  ('ரேங்க்') இரு குழந்தைகளுக்கு அம்மா, ஜெர்மனியின் டாட்ஜனா மரியாவுக்கு 'நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டது. 

Oct 18, 2025

தான்வி  சர்மா உலக ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்

 இந்தியாவின் தான்வி சர்மா, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ,ஜப்பானின் சகி மட்சுமோடோ மோதினர். தான்வி 13-15, 15-9, 15-10 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இம்முறை இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் தான்வி.தவிர இவர், 17 ஆண்டுகளுக்கு பின் இத் தொடரில் பதக்கம் வெல்லும் இந்திய வீராங்கனையாகிறார்.  இந்தியாவின் செய்னா நேவல் கடைசியாக 2008ல் புனேயில் நடந்த தொடரில் தங்கம் வென்றிருந்தார். 

1 2 ... 93 94 95 96 97 98 99 ... 171 172

AD's



More News