25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Nov 12, 2025

தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோதி .

இந்தியாவின் ஜோதி  தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் 147 -145 என தென் கொரியாவின் யூக்யுனை வீழ்த்தினார். மற்றொரு போட் டியில் இந்தியாவின் பிரித்திகா 148-146 என சக வீராங்கனை சிகிதாவை வென்றார்.இந்தியாவின் அபிஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி ஆண்களுக்கானகாம்பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில் 235-234 என மலேசியாவைவீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, தாய்லாந்து மோதின.இப்போட்டி 235-235 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' இந்திய ஆண்கள் அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.இந்திய பெண்கள் அணி காலிறுதியில்'ரீகர்வ் பிரிவில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. அன்ஷிகா குமாரி, அன் கிதா, சங்கீதா இடம் பெற்ற இந்திய அணி, 4-4 என சமன் செய்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 24-27 என தோற்றது. 

Nov 12, 2025

சீன ஓபன் ஸ்குவாஷ் 'கோல்டு லெவல்' தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் வெற்றி.

ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் 'கோல்டு லெவல்' தொடர் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மென்னா ஹமீதுவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என வென்றார்அடுத்த இரு செட்டுகளையும் 11-8, 11-3 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் அனாஹத், எகிப்தின் மற்றொரு வீராங்கனை சனா இப்ராஹிமை சந்திக்க உள்ளார். இந்தியாவின் வேலவன், செந்தில்குமார் 0-3 என்ற செட் கணக்கில் (8–11, 12-14, 6-11), ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ,எகிப்தின் முகமதுவிடம் தோல்வியடைந்தார். இந்திய வீரர் அபே சிங், மற்றொரு போட்டியில் , 0-3 (8-11, 7-11, 4-11), பிரான்சின் பாப் சிஸ்டேவிடம்தோல்வியடைந்தார்.

Nov 11, 2025

உலக துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என, 9 பதக்கங்கள் கைப்பற்றிய இந்தியா  2வது  இடத்துக்கு முன்னேறியது.

எகிப்தில், உலக துப் பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்'/'பிஸ்டல்') தொடர் எகிப்தில், ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் சாம்ராட் ராணா (586.27 புள்ளி),  வருண் தோமர்(586.26) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.பைனலில் சாம்ராட், 243.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார் . மூன்றாவது இடம் பிடித்த வருண் (221.7) வெண்கலம் கைப்பற்றினார்.  10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான ,சாம்ராட், வருண், ஷர்வன் குமார் அடங்கிய இந்திய அணி 1754.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றனர்.   25மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' ஆண்களுக்கான பைனலில், அனிஷ், 28 புள்ளிகளு டன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் பெண்கள் அணிகளுக்கான ,ஈஷா சிங் (583.25), மனு பாகர் (580.20), சுருச்சி இந்தர் சிங் (577.17) அடங்கியஇந்திய அணி 1740.62 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.

Nov 11, 2025

ரீகர்வ், காம்பவுண்டு பிரிவில் இந்திய அணிகள்ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்,  பைனலுக்கு முன்னேறின.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,ஆண்கள் அணிகளுக்கான ரீகர்வ்' பிரிவில் இந்தியா சார்பில் அடானு தாஸ், ராகுல், யாஷ்தீப் சஞ்சய் இடம் பெற்ற அணி பங்கேற்கிறது.காலிறுதியில் மலேசியாவை 6-0 என வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, இல்பாத், தஸ்டன், அலெக்சாண்டர் அடங்கிய கஜகஸ்தான் அணியை 5-3 என்ற கணக்கில்வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இந்தியாவின் தீபிக் ஷா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி ,பெண்களுக்கான காம் பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில், 235-225 என வியட்நாம் (கிம் ஆன், நிகுயேன், பம் வான்) அணியை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, வங்க தேசம் (போன்னா, குல்சும், புஸ்பிதா) மோதின.இதில் இந்திய அணி 234-227 என வென்று, பைனலுக்கு (நவ. 13) முன்னேறியது. இதில் தென் கொரியாவிடம் மோத உள்ளது. ஆண்கள் அணிதென்கொரியாவை (நவ. 14) சந்திக்க உள்ளது.

Nov 11, 2025

ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது .  ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 'நம்பர்-1 

ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11050 புள்ளி) 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இவர், ஏ.டி.பி., பைனல்ஸ் 3 தொடரின் லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால், ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.இத்தாலியின் ஜானிக் சின்னர் (10000) 2வது இடம். ஜெர்மனியின் ஸ்வெரேவ் (4960) 3வது இடம். செர் பியாவின் ஜோகோவிச் (4830) 4வது இடம்.அமெரிக் காவின் பென் ஷெல்டன் (3970) 5வது இடத் தில்  உள்ளனர். 

Nov 11, 2025

20 ஆண்டு களுக்கு பின் ஆசிய கோப்பையில் 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா.

தாய்லாந்தில்  நடக்கவுள்ள பெண்களுக்கான (20 வயது) ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன், தகுதிச் சுற்றில் 33 அணிகள் பங்கேற்றன.  20 ஆண்டு களுக்கு பின் ஆசிய கோப்பையில் 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, 3 போட்டி யில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என 7 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடம் பிடித்து,விளையாடும் வாய்ப்பை பெற்றது.தாய்லாந்தின் பாங்காக்கில்,  நேற்று அணிகளுக்கான  பிரிவு ('டிரா') தேர்வு12 அணிகள் 3 பிரிவுகளாக நடந்தது. மொத்தம் பிரிக்கப்பட்டன. இதில் 6 ஆசியாவின் 'நம்பர்-1' முறை கோப்பை வென்ற, அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன.இந்திய அணி 'குரூப் ஆப் டெத்' என்றழைக் கப்படும் 'சி' பிரிவில் இடம் பிடித்தது.

Nov 10, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் இந்தியா 24 பதக்கங்களை வென்றது.

மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் ஜப்பானில், ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்.3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 17-21, 21-19, 21-10 என ஜப்பானின் புஜிஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.இந்தியாவின் பிரமோத் பகத், மணிஷா ராம தாஸ் ஜோடி, கலப்புஇரட்டையர் 'எஸ்.எல். 3- எஸ். யு. 5' பிரிவு பைனலில் 21-19 என சகநாட்டை சேர்ந்த நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல்.3-4' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-17, 18-21, 21-16 என சகநாட்டை சேர்ந்த ஜெகதீஷ் தில்லி, நவீன் சிவகுமார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்தொடரில் பிர 'மோத் பகத் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.இந்தியாவின் நவீன் சிவகுமார் ,ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் , 21-14, 21-14 என சகவீரர் சுகந்த்தை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் 'எஸ். எச். 6' பிரிவு பைனலில்இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 23-20, 21-13 என அமெரிக்காவின் மைல்ஸ் கிரேஜெவ்ஸ்கியை தோற்கடித்து தங்கம் வென்றார் .பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' பிரிவு பைன லில் இந்தியாவின் துளசி மதி முருகேசன் 21-15, - 21-15 என சகவீராங் கனை மணிஷாவை வீழ்த்தி தங்கத்தை வென்றார் . இத் தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கங்கள் கிடைத்தது.

Nov 10, 2025

உலக கோப்பை செஸ் தொடரில் நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார் கார்த்திக் வெங்கடராமன்.

உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில் , 4வது சுற்றுக்கு இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஹரிகிரிஷ்ணா பிரக்ஞானந்தா, பிரனவ் முன்னேறினர். 'நடப்புஉலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 3வது சுற்றில் தோல்வியடைந்தார்.நேற்று, 3வது சுற்றுக்கான 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் தமிழகத்தின் கார்த்திக் வெங்கடராமன், ருமேனியாவின் போக்டன்-டேனியல் டீக் மோதினர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றார். முடிவில் கார்த்திக் 2.5- 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்தியா சார்பில் 5 பேர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

Nov 10, 2025

டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.

டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் ,சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், உலகின் 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்ற ,ஒற்றையர் பிரிவுபைனலில், உலகின் 'நம்பர்-1' பெலா ரசின் அரினா சபலென்கா, 6வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ரிபாகினா, 'டை பிரேக்கர்' வரை சென்று 2வது செட்டை 7-6 என கைப்பற்றினார்.ஒரு மணி நேரம், 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Nov 10, 2025

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இந்தியா 260 தங்கப் பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது.

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னைநேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த 35-100 வயதுடைய 3,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.போட்டிகள் நேற்று நிறைவுற்றன. இந்தியா 260 தங்கம், 253 வெள்ளி, 277 வெண்கலம் என மொத்தம் 790 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இரண்டாவது இடத்தை இலங்கை (39 தங்கம், 50 வெள்ளி, 39 வெண்கலம்), மூன்றாவது இடத்தை தாய்லாந்து (39-தங்கம், 26 வெள்ளி, 11 வெண்கலம்) பெற்றன. 

1 2 ... 87 88 89 90 91 92 93 ... 171 172

AD's



More News