25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை வைஷாலி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை வைஷாலி.

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது.பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக (2019, 2024) சாம்பியன் ஆனார்.அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்துதல்) முறையில் போட்டி நடந்தது. 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் வைஷாலி (தமிழகம்). 9.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, 'நாக் அவுட்' முறையிலான காலிறுதிக்கு முன்னேறினார்.முதல் போட்டியில் 'டிரா' செய்த வைஷாலி, அடுத்த இரு போட்டியில் சறுக்கினார். இதையடுத்து 0.5-2.5 என தோல்வியடைந்து, வெண் கலப்பதக்கம் பெற்றார்.  

"கடந்த 2021 முதல் இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உலக 'ரேபிட்' தொடரில் ஹம்பி சாம்பியன் ஆனார். 'பிளிட்ஸ்' தகுதிச்சுற்றில் வைஷாலி சிறப்பாக செயல்பட்டார். அடுத்து வெண்கலம் வென்றது மகிழ்ச்சி,'' என சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவர், இந்தியாவின் ஆனந்த்  கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News