25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


'பகீரா கிப்லிங்கி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பகீரா கிப்லிங்கி" ஜம்பிங் ஸ்பைடர் .

உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளது. சிலந்திகள் எல்லாம் உணவுக்காக பூச்சிகள், வண்டுகளை வேட் டையாடுகின்றன.  அசைவம் உண்ணாத, தாவரங்களை உண்டு வாழும் ஒருசிலந்தி இருக்கிறது. அதன் பெயர் 'பகீரா கிப்லிங்கி. இந்த சிலந்தி தான் உலகத் தில் மாமிச உண்ணியாக இல்லாத சிலந்தி என அறியப்படுகிறது, இதற்கு ஜம்பிங் ஸ்பைடர் என்ற பெயரும் உள்ளது.

மத்திய அமெரிக்காவின் காடுகளில் காணப்படும் இந்த சிலந்தியின் உணவு என்பது அகாசியா என்ற தாவரங்கள் தான். இந்த தாவரங்கள் அவற்றின் இலைகளின் நுனியில் சிறிய, புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஒரு உணவை உருவாக்குகிறது. இதற்கு, பெல்டியன் உடல்கள் என்று பெயர். இதனை எறும்புகள் விரும்பி உண்ணும். இந்த எறும்புகள் எப்போதும் அகாசியா தாவர இலைகளில் உலா வருவதால் தாவரங்களை உண்ணும் விலங்குகள் இந்த தாவரத்தை நெருங்குவதில்லை.

, சின்னஞ் சிறிய இந்த பகீரா கிப்லிங்கி சிலந்தி எறும்புகளுக்கு பலியாகாமல் தந்திரமான முறையில், அகாசியா தாவரத்தின் இலை நுனியில் இருக்கும் பெல்டியன் உணவை தந்திரமாக உண்கின்றன. தாவரத்தில் ரோந்து செல்லும் எறும்புகள், பெல்டியன் உடல்களை உண்ண செல்லும் பாதைக்கு மாற்றாக, எறும்புகள் செல்லாத மரங்களின் பழமையான அகாசியா இலைகளின் முனைகளில், அதன் வீட்டை உருவாக்குகிறது. அங்கு பாதுகாப்பாக இருந்து கொண்டு எறும்புகளின் உணவை ருசி பார்த்து பசியை தீர்த்துக் கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News