அனுமன்
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் , சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும். எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம். புதியதாக துவங்கிய வேலைகளில் தடை நீங்க விரதம் இருந்து அனுமன் வாலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சந்தனமும், அதன்மேல் குங்குமமும் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு செய்து வரவேண்டும். பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, விரதம் இருந்து அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டுவைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.தடைகள் அகலும், குடும்பப் பிரச்சினைகள் அகலும், அனுமனுக்கு வாலில் பலம், முருகனுக்கு வேலில் பலம் அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.
0
Leave a Reply