வசூலில் நம்பர் ஒன் ஆக காந்தாரா கன்னட திரைப்படம்
கே ஜி எஃப்’ திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனமான, ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்து ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த படம் ஸ்லோ பிக்கப் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி இன்று நம்பர் ஒன் ஆக இருக்கிறது.
இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பரபரப்பை ஏற்படுத்தியது..பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் போதே, பான் இந்தியா மூவியாக காந்தாராசெப்டம்பர்30ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. ஆனால் காந்தாரா கன்னடத்தில் கிடைத்த ரீச்சுக்கு பிறகே, மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ,ரிலீஸ் ஆனது.
.காந்தாரா பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரிலீஸ் ஆகி இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் இதுவரை தெலுங்கில் 30 கோடியும், ஹிந்தியில்31 கோடியும் வசூலித்திருக்கிறது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.இப்போது பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்து இருக்கிறது.
0
Leave a Reply