25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


‘ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப்' விருதை வென்றது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப்' விருதை வென்றது

முதல் முறையாக இந்திய திரைப்படம் மதிப்புமிக்க இந்த விருதை வென்றது. திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான ஆர். ஆர்.ஆர்., திரைப்படம் சர்வதேச அளவில் வெற்றி பெற்றது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற் றுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா வின்'ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம்' ஆண்டுதோறும் அளிக்கும் கவுரமிக்க கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர்.,திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. 

இந்த பாடலுக்கு  இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ், பாடல் வரிகளை எழுத, கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் பாடியுள்ளனர். நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., நடனமாடி உள்ளனர். ப்ரேம் ரக் ஷித் என்பவர் நடனம் அமைத்துள்ளார்.. நாட்டு நாட்டு... பாடல் விருதை வென்றது. படக்குழுவினர் ஆர்ப்பரிக்க இசையமைப்பாளர் கீரவாணி மேடை ஏறி விருதை பெற்றுக் கொண்டார். 

'பாடலை இசையமைத்தவர் இயக்கியவர் நடனம் அமைத்தவர் நடித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது' என, குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News