‘ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப்' விருதை வென்றது
முதல் முறையாக இந்திய திரைப்படம் மதிப்புமிக்க இந்த விருதை வென்றது. திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான ஆர். ஆர்.ஆர்., திரைப்படம் சர்வதேச அளவில் வெற்றி பெற்றது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற் றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா வின்'ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம்' ஆண்டுதோறும் அளிக்கும் கவுரமிக்க கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர்.,திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ், பாடல் வரிகளை எழுத, கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் பாடியுள்ளனர். நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., நடனமாடி உள்ளனர். ப்ரேம் ரக் ஷித் என்பவர் நடனம் அமைத்துள்ளார்.. நாட்டு நாட்டு... பாடல் விருதை வென்றது. படக்குழுவினர் ஆர்ப்பரிக்க இசையமைப்பாளர் கீரவாணி மேடை ஏறி விருதை பெற்றுக் கொண்டார்.
'பாடலை இசையமைத்தவர் இயக்கியவர் நடனம் அமைத்தவர் நடித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது' என, குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.
0
Leave a Reply