அறிவியல் தின விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் 28 .2 .2024 புதன்கிழமைஅன்று அறிவியல் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ராக்கெட் ஏவுகணை, விவசாய முறை, காற்றாலை, சூரிய குடும்பம், நீர்மின் சக்தி, பாம்பன் பாலம்
என பலவிதமான அறிவியல் படைப்புகளை மாணவர்கள் செய்து வைத்திருந்தனர்.இவ்விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாவட்டப் பொருளாளர் நித்யாகணேசன் அவர்கள் கலந்து கொண்டார்.அவர் மாணவர்களிடம் அறிவியலில் நாட்டம் கொண்டுசமூக சிந்தனையோடு இருக்க வேண்டும் என்றும் படிப்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்என்றும் கூறினார்.
பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் அறிவே ஆயுதம் என்று கூறி மாணவர்களின்படைப்புகளைப் பாராட்டி பேசினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெயபவானி அவர்கள் மாணவர்களிடம் தனது உரையில்புதிது புதிதாக அறிவியல் சாதனங்களை கண்டறிந்து தாங்கள் படித்த ஆனந்தா பள்ளிக்கு சிறப்புவிருந்தினராக வருகை புரிய வேண்டும் என்று பேசினார்.
மாணவர்களில் சிலர் தங்களது படைப்புகள் பற்றியும் பாரம்பரிய உணவு வகைகள்,விவசாயம் பற்றியும் பேச விழா இனிதே நிறைவடைந்தது.
0
Leave a Reply