25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.44.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை அமைச்சர்  அவர்கள் திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.44.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி வாழ்வாங்கி கிராமத்தில் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், செட்டிகுறிச்சி ஊராட்சியில் ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  (19.10.2024) திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று  அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி வாழ்வாங்கி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், செட்டிகுறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடம் என மொத்தம் ரூ.44.10 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அருப்புக்க்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சசிகலா பொன்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News