முகச்சுருக்கங்கள் மறைய....
பவுல் ஒன்றில் பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் தோல் நீக்கிய பலாப்பழ கொட்டையை ஊற வைக்க வேண்டும்.அதனுடன் தேன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.முகத்தை நன்றாக கழுவி துடைத்த பிறகு முகம் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.இதேபோல் வாரத்திற்கு ஒருமுறை செய்தால் சுருக்கங்கள்மறையும்.பலாக்கொட்டையை பச்சையாக அரைக்கும் போது அவ்வளவு நைசாக முடிந்தவரை அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பலாக்கொட்டையை ஒரு காட்டன் துணியில்ஊற்றிநன்றாக பிழிந்தால் சாறு கிடைக்கும்.இந்த சாரோடு கொஞ்சமாக தேன் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த சாறை அப்படியே முகத்தில் தடவி மசாஜ் செய்து அப்ளை செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பின்பற்றலாம்.
இது தண்ணீராக இருப்பதால் இரண்டு மூன்று முறை கோட்டிங் போல உங்கள் முகத்தில் தடவ வேண்டும். இந்த சாறை முகத்தில் தடவி, இரண்டு மூன்று நிமிடங்கள் காய விட்டு ,காய்ந்த பிறகு மீண்டும் இந்த சாறை எடுத்து உங்களுடைய முகத்தில் தடவி உலர விட வேண்டும். இதே போலத்தான் உங்களுடைய கை,கால்களுக்கும் இதை தடவி நன்றாக உலர விட்டு20 நிமிடம் கழித்து வெறும் தண்ணீரில் சருமத்தை கழுவி விட்டால் உங்களுடைய சருமம் பொலிவாக இருக்கும். இதே பலாப்பழ சாறில் கோதுமை மாவு அல்லது கான்பிளவர் மாவு சேர்த்து கலந்தால் நமக்கு ஒரு ஃபேஸ் பேக் கிடைத்துவிடும். அந்த பேக்கை முகம் கை கால்களில் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளலாம்
0
Leave a Reply