25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

Oct 27, 2022

SERVE YOURSELF, SERVE NATION

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகஆற்றல் ஊட்டும் நிகழ்வு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாககர்னல் ராகேஷ் பிரசாத், சாத்தூர் S.R.N.M கல்லூரி N.C.C. அதிகாரி டாக்டர் அஜந்தா மற்றும் Rtn. பார்த்தசாரதி அவர்களும் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களை முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன்அவர்கள் வரவேற்று அறிமுகம். செய்ய பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்திஅவர்கள் விருந்தினர்களுக்கு சிறப்புப் பரிசினை வழங்கி கௌரவம் செய்தார்.கர்னல் தமது உரையில் மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால லட்சியம் என்ன என்பதைக் கேட்டு அதற்கான திட்டமிடலை பற்றிஎடுத்துக் கூறினார். ஒவ்வொரு மாணவர்களும் சிறு வயதிலேயே ஒரு குறிக்கோளினை கொண்டிருக்க வேண்டும் என்றும் அதனை அடைவதற்கு இடையறாது உழைக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். மேலும் நல்லொழுக்கம் மட்டுமே ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். எதிர்கால வாழ்வு சிறக்க கடின உழைப்பும் நற்குணமும் மிக அவசியம் தேவை என்றார், மக்களின் நல்ல பண்புகளே அவர்களின் பெருமையைத் தீர்மானிக்கிறது என்று மிக அழகாகக் கூறினார்.இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வழிகளைப் பற்றியும், என். டி.ஏ.(NDA) எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பயில்வது,தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறை பற்றியும் மாணவர்களுக்கு சிறப்பாக விளக்கினார். நிறைவாக மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு சரியாக பதிலையும் எடுத்துக் கூறினார். ஆசிரியை திருமதி நிவேதா அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

1 2 3

AD's



More News