இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின் 23 ஆவது விளையாட்டு விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின் 23 ஆவது விளையாட்டு விழா பள்ளி நிறுவனர் திரு. M.V.பீமராஜா அவர்களின் ஆசியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இராஜபாளையம் முனிசிபல் கமிஷனர் திரு. பார்த்தசாரதி அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு ஆற்ற தலைமை ஆசிரியர் திருமதி ஜெயபவானி அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் படிப்பிற்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை போல விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது நமது பொறுப்பு. உயிர் வாழ தேவையான காற்றை சுவாசிக்க ஏராளமான மரங்களை நட்டு வைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், Reduce, Refuse, Reuse என்ற கோட்பாட் டினை கடைபிடித்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். நல்ல திடமான உடம்பு, திறமையான அறிவைக் கொடுக்கக் கூடிய யோகா, சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று மாணவர்களுக்கு மிக அழகாக எடுத்துரைத்தார்.
விழாவில் மாணவர்கள் டேக் வான்டோ, யோகா, பிரமிடு, வில்வித்தை, சிலம்பம், ஏரோபிக்ஸ் மற்றும் பல வகையான உடற்பயிற்சிகளை மாணவர்கள் அழகாக நிகழ்த்திக் காட்டினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினர். விழாவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
0
Leave a Reply