இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜெய பவானி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில்சிறப்புவிருந்தினராக ஆசிரியை திருமதி.விஜயலட்சுமி அவர்கள் கலந்துகொண்டு நல்ல மனிதனாக வாழ உடற்பயிற்சியும் தேவை என்பதை வலியுறுத்தியும் சிறுகதைகள் கூறியும் மாணவர்களை உற்சாகப் படுத்தினார்.மேலும் சிறப்பு விருந்தினராக திருமதி. கேன்டி பெர்னான்டஸ் கலந்து கொண்டு சிறப்புசெய்தார்.ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தினத்தைப் பற்றி முதலாம் வகுப்பு மாணவி சுபிக்க்ஷா ஸ்ரீ தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்தாள்.அறிவியல் சாதனங்களின் பயன்பாடு பற்றி இரண்டாம் வகுப்பு மாணவன் அஸ்வின் மற்றும் மகிழ்ச்சியின் சிறப்பு குறித்த கருத்துக்களை ஐந்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீநித் ஆகியோர் அழகாக பேசினார்கள்.நான்காம் வகுப்பு மாணவி ஜெனிதா அப்பாவின் பெருமை பற்றி எடுத்துரைத்தாள்.
நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் இயற்கை பற்றிய பாடல் ஒன்றை பாடினார்கள். மற்றும் நாட்டுப்புற கலைகளை நினைவூட்டும் வண்ணம் நடனம் ஒன்றும் ஆடினார்கள். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித்தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் பாராட்டி பேசினார். பள்ளியில் நடைபெற்ற கதை சொல்லும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக ஐந்தாம் வகுப்பு மாணவி மதுமித்ரா நன்றியுரை கூற விழா இனிதேநிறைவடைந்தது.
0
Leave a Reply