25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


SERVE YOURSELF, SERVE NATION
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

SERVE YOURSELF, SERVE NATION

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகஆற்றல் ஊட்டும் நிகழ்வு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக
கர்னல் ராகேஷ் பிரசாத், சாத்தூர் S.R.N.M கல்லூரி N.C.C. அதிகாரி டாக்டர் அஜந்தா மற்றும் Rtn. பார்த்தசாரதி அவர்களும் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களை முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன்அவர்கள் வரவேற்று அறிமுகம். செய்ய பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்திஅவர்கள் விருந்தினர்களுக்கு சிறப்புப் பரிசினை வழங்கி கௌரவம் செய்தார்.
கர்னல் தமது உரையில் மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால லட்சியம் என்ன என்பதைக் கேட்டு அதற்கான திட்டமிடலை பற்றி
எடுத்துக் கூறினார். ஒவ்வொரு மாணவர்களும் சிறு வயதிலேயே ஒரு குறிக்கோளினை கொண்டிருக்க வேண்டும் என்றும் அதனை அடைவதற்கு இடையறாது உழைக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். மேலும் நல்லொழுக்கம் மட்டுமே ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். எதிர்கால வாழ்வு சிறக்க கடின உழைப்பும் நற்குணமும் மிக அவசியம் தேவை என்றார், மக்களின் நல்ல பண்புகளே அவர்களின் பெருமையைத் தீர்மானிக்கிறது என்று மிக அழகாகக் கூறினார்.
இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வழிகளைப் பற்றியும், என். டி.ஏ.(NDA) எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பயில்வது,தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறை பற்றியும் மாணவர்களுக்கு சிறப்பாக விளக்கினார். நிறைவாக மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு சரியாக பதிலையும் எடுத்துக் கூறினார். ஆசிரியை திருமதி நிவேதா அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News