தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான மாற்றுதிளனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் .
மாற்றுதிளனாளிகளுக்கான பாரா தடகளம் போட்டி, செங்கல்பட்டு, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நடக்கிறது. இதில், அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் ஆடவர் பிரிவில் 100 மீட்டர் ஒட்டத்தில் கன்னியாகுமரி வீரர் விபின் தங்கமும், நெல்லை ரங்கராஜ் வெள்ளியும், சேலம் பூபதி வெண்கலமும் வென்றனர்.
மகளிர் பிரிவில், கன்னியாகுமரி ஜாஸ்மின், சிவகங்கை வானதி, திருப்பூர் தமிழ்செல்வி முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். உடல்சார் மாற்றுத்திறனாளி ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சென்னை ஷெய்க் அப்துல்காதர் தங்கமும், கோவை சந்தனகுமார் வெள்ளியும், சேலம் அஜித்குமார் வெண்கலமும் வென்றனர். பள்ளி மாணவியருக்கான பளுதூக்குதலில் 71 கிலோ எடை பிரிவில், சென்னை ஹன்சினா ஷெரின் தங்கமும், திருவள்ளர் வேதிகா வெள்ளியும், வேலூர் ரமணி வெண்கலமும் கைப்பற்றினர்.
0
Leave a Reply