நெல்சன் இயக்கத் தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் ரூ. 650 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் இயக் கும் 'கூலி' படத்தில் நடிக்கும் ரஜினி, அடுத்ததாக 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறார். இப்ப டம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளி யாகும் நிலையில் ரஜினியின் முந்தைய படங்களை விட அதிக நாடுகளில் படத்தை வெளியிடும் நோக்கில் ஆங்கில மொழியிலும் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
கமல் இயக்கி, நடித்த 'விருமாண்டி' படம் மூலம் பிரபலமானவர் அபிராமி, இவர் அளித்த பேட்டியில் 'விருமாண்டியில் நடித்தசமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கு இங் கிருந்து பிரபலமான ஒருவ ரின் சிபாரிசு கடிதம் இருந் தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபா லகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் தந்தார். கமலிடமும் கடிதம் கேட்டேன். அதற்கு அவர் சினிமாவை விட்டு நீ போகக்கூடாது, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எனக் கூறி மறுத்தார். விருமாண்டி படம் முடிந்த பின் அந்த கல்லுாரியில் அட்மிஷன் கிடைத்து படிக்க சென்றுவிட்டேன்" என்றார்.
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கும் 40வது படம் '3பிஎச்கே'. இதில் சரத்குமார், தேவயானி, மீதாரகுநாத், சைத்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடுத்தர குடும்பத்து வர்க்கத் தினரின் பெரிய கனவுகளில் ஒன்று வீடு. இதை பின்ன ணியாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதன் படப்பி டிப்பு வளர்ந்து வரும் சூழலில் அறிமுக டீசரை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளனர்.
2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத் தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'திரிஷ்யம்' தமிழ், தெலுங்கு ஹிந் தியிலும் ரீமேக் ஆனது. தொடர்ந்து இரண்டாம் பாகமும் மலையாளம், தெலுங்கில் வெளியானது. இப்போது திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இதுபற்றி “கடந்த காலம் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
மார்ச் 7ல், "அம்பி, அஸ்திரம், படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில்,எமகாதகி' ஆகிய 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 இரு மாதங்களில் இதுவரை தமிழில் 45 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் மூன்று படங்கள் மட் டுமே லாபகரமாக அமைந்துள்ளன. . பிப்., 14ல் அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகின.
பிரதீப் ரங்கநா தன் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடிப் பில் பிப்.,1ல் திரைக்கு வந்த படம் 'டிராகன்', இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அஷ்வத், ரசிகர்கள் அளித்த அன்புக்கு 100 கோடி நன்றி.வெளியீட்டிற்கு முன் என் தன்னம்பிக்கையை உடைக்க முற்பட்ட போது 'நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்' என்று சொன்ன எல்லோருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி, கமல்,விஜய் மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த, விஜய் சேதுபதிக்கு, அஜித்துடனும் ஒரு படத்தில் நடிக்க முன்பு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், 'கால்ஷீட்' பிரச்னையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் காரணமாகவே. 'அஜித்துடன் வில்லனாக நடிக்க வேண்டுமென்றால். இயக்குனர்கள் என்னை தாராளமாக அணுகலாம்...' என, தகவல் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி.
ஷூட்டிங் முடிச்சுட்டு நாங்க கார்ல வந்துட்டு இருக்கும்போது ரோட்ல யாருக்கோ ஆக்சிடென்ட் ஆயிருக்கு. சூர்யா டக்குனு கார்ல இருந்து இறங்கி அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருந்தவர தன்னோட கார்ல ஏத்திட்டு பக்கத்துல இருந்த ஹாஸ்பிடலுக்கு (திருப்பதி) அனுப்பி வச்சார். தெரிஞ்ச நண்பர்களுக்கு எல்லாம் போன்பண்ணி 4 டாக்டரை வரவச்சு அந்த நபரை காப்பாற்றிய சூர்யா .
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் இந்தியாவில் அதிக அளவில் பிரபலமான 30 வயதுக்கு கீழ் உள்ள 30 பேர் கொண்ட பட்டியலை வெளி யிட்டது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் இந்தாண்டுக்காக வெளி யிடப்பட்ட பட்டியலில் நடிகை அபர்ணா பாலமுரளி, 29 மற்றும் பாலிவுட் நடிகர் ரோகித் சரப், 28 ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்” என்ற படத்தில், அழுத்தமான குணச்சித்ர வேடத்தில் நடிக்கிறார், சத்யராஜ்.சவ்ரவ் கங்குலி படத்தில் ராஜ்குமார் ராவ்இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டன் சவுரவ் கங் குலி. இவரது வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக எடுக்க உள்ளனர். அவரது வேடத்தில் ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள் ளார். இதை கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார். ராஜ்குமார் தற்போது பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பை இன்னும் ஓரிரு மாதங் கள் கழித்து ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளனர். இயக்குனர் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.