பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2024-2025) முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்ஃ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ரூ. 447ஃ- எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 316/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 135/- எனவும், கம்பு பயிருக்கு ரூ. 160/- எனவும், பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.228/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.441/- எனவும், நிலக்கடலை பயிருக்கு ரூ.311/- எனவும், எள் பயிருக்கு ரூ.120/- எனவும் மற்றும் சூரியகாந்தி பயிருக்கு ரூ.187/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ.568/- எனவும், மிளகாய் பயிருக்கு ரூ.1005/- எனவும், வெங்காயம் பயிருக்கு ரூ.1744/- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.3404/- எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2024 எனவும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2024, சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு 16.12.2024; எனவும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2024; எனவும் மற்றும் எள் பயிருக்கு 31.01.2025 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி பயிருக்கு 17.01.2025; எனவும் மிளகாய் மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு 31.01.2025 எனவும் மற்றும் வாழை பயிர்களுக்கு 28.02.2025 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply