இறுதிஊர்வலத்தின்போது சாலைகளில் மலர் மாலைகளை வீசினால் கடும் நடவடிக்கை
இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை வீசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுடி.ஜி.பி.,சுற்றறிக்கைஅனுப்பியுள்ளதாகசென்னைஉயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தில் சாலையில் வீசப்பட்ட மலர் மாலைகளால் பைக்கில் சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்தது குறித்து அன்புச்செல்வன் என்பவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்தை மனுவாகக் கருதி, தாமாக முன்வந்து வழக்கை தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. அனுப்பியுள்ள சுற்றறிக்கை தாக்கல் செய்ப்பட்டது. அதில், இறுதி ஊர்வலத்தின்போது, அதிக அளவில் மாலைகள், மலர்வளையங்களை கொண்டுச் செல்லக்கூடாது என்றும்,சாலைகளில் வீசப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை,பிரதான சாலைகள், உயர்மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலம் செல்வதை உறவினர்கள் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிபந்தனைகளை மீறினால், சம்பந்தப்பட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுடி.ஜி.பிசுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சுற்றறிக்கை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
0
Leave a Reply