25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல்

Jan 03, 2026

பொட்டுகடலை,நெய் உருண்டை.

தேவையான பொருட்கள் :4 கப் பொட்டுகடலை2கப்சர்க்கரை,6ஏலக்காய்,தேவைக்கு நெய்.செய்முறை  :முதலில்ஏலக்காய்,பொட்டுகடலையை மிக்ஸி ஜாரில்போட்டு அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.சர்க்கரையை அரைத்துக்கொள்ளவும்.பின்அரைத்த சர்க்கரை,பொட்டுகடலை மாவு இரண்டையும் கலந்துகொள்ளவும்.பின்வாணலியை அடுப்பில்வைத்து தேவைக்கு நெய்ஊற்றி,முந்திரிபருப்பு வறுத்து,நெய்கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.பொட்டு கடலைநெய்உருண்டைரெடி. சர்க்கரைகொஞ்சம் பிரியபட்டவர்கள்கூட்டிக் கொள்ளவும்.

Jan 03, 2026

வாழைப்பூ ஓட்ஸ் லட்டு உருண்டை.

தேவையான பொருட்கள்:வாழைப்பூ - 1 கப் ஓட்ஸ் - 1கப் தேங்காய் துருவல் - 4 கப் ஏலக்காய் பொடி,தேன்,நெய், முந்திரி - தேவையான அளவு.செய்முறை:வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, ஓட்ஸை நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.அதே வாணலியில், மீண்டும் சிறிது நெய் சேர்த்து, நீர் எதுவும் இல்லாமல் வாழைப்பூ மசியும் வரை வதக்கவும்.அதில் தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். பிறகு, வறுத்த ஓட்ஸை சேர்க்கவும். கடைசியாக சிறிதளவு தேன் ஊற்றி நன்கு கலந்து, கையால் உருட்டி லட்டு போல உருண்டை பிடிக்கவும்.பரிமாறும் போது, லட்டு உருண்டை மீது, வறுத்த முந்திரி வைக்கவும்.'வாழைப்பூ ஓட்ஸ் லட்டு!' தயார். சத்துடன், அபார ருசியும் இருக்கும்.

Jan 03, 2026

கடலை உருண்டை.

தேவையான பொருட்கள்:உடைத்த வேர்க்கடலை - இரண்டு கப்,பாகு வெல்லம் - ஒன்றரை கப், நெய் - இரண்டு தேக்கரண்டி.செய்முறை:வெல்ல பாகை, முற்றிய பதத்தில் எடுத்து, அதில் நெய் ஊற்றி உடைத்த வேர்க்கடலை போட்டு நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவை சிறிது ஆறியவுடன், கைகளில் நெய்யை தொட்டுக் கொண்டு, உருண்டைகளாக பிடிக்கவும்.இளம் பாகாக இருந்தால் உருண்டை பிடிக்க வராது.

Jan 03, 2026

பொரி உருண்டை.

தேவையான பொருட்கள்:பொரி -ஒரு கப், வெல்லம் ஒன்றரை கப்,பொட்டுக்கடலை, வேர்க்கடலை -தலா ஒரு தேக்கரண்டி,செய்முறை:வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். பாகு. கம்பி பதம் வந்ததும், அதில் பொரி, பொட்டுக்கடலை மூன்றையும் போட்டு நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.பொட்டுக்கடலை, வேர்க்கடலை இரண்டையும் கொரகொரப்பாக துாள் செய்தும் சேர்க்கலாம்.

Jan 03, 2026

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் உருண்டை.

தேவையான பொருட்கள்:எள் -ஒரு கப், வெல்லம்- ஒன்றரை கப்,பொட்டுக்கடலை, வேர்க்கடலை- தலா ஒரதேக்கரண்டிசெய்முறை:எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் சிறிது வறுக்கவும். பிறகு. அத்துடன் பொரி உருண்டைக்கு பாகு வைத்தது போலவே பாகு எடுத்து அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை மூன்றையும் கலந்து உருண்டை பிடிக்கவும்.எள் படபடவென்று பொரிந்தவுடனே கீழே இறக்கி, ஒரு தட்டில் கொட்டிவிட்டால் தீய்ந்துப் போவதை தடுக்கலாம்.

Jan 03, 2026

.பாசிப்பருப்புஉருண்டை.

தேவையான பொருட்கள் :1/4 கிலோ பாசிப்பருப்பு1/4 கிலோ சீனி  10 முந்திரிபருப்பு150 மி.லி நெய் செய்முறை பாசிப்பருப்பை வறுத்து மாவு மில்லில் குடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.சீனியை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்காடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின் அதே கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கவும், பாசிப்பருப்பு மாவையும், சீனி மாவையும் சேர்த்துக்கொள்ளவும்.அந்த மாவில் வறுத்த முந்திரியையும், சூடான நெய்யையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும், இப்போது சுவையான, சத்தான பாசிப்பருப்பு உருண்டை .

Dec 27, 2025

தினை புட்டு

தேவையான பொருட்கள் :-1கப் தினை புட்டு மாவு,1/4 கப் துருவிய தேங்காய்,2 சிட்டிகை உப்பு,தேவையானஅளவு வெந்நீர்.செய்முறை :-தினை புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .இதில் வெண்ணெய் சேர்த்து ஈரப்பதம்பருவம் வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.புட்டுக் குழாயில் துருவிய தேங்காய் கொஞ்சம் போட்டு ,அதற்கு மேல் புட்டு மாவை சேர்க்கவும்.அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவியது ,இவ்வாறு மாற்றி குழாய் நிரம்பும் வரை சேர்க்கவும்.இதனை மூடி போட்டு சூடான புட்டுக் குழாயில் வைத்து, நன்கு ஆவி வரும் வரை வேகவிட்டுஎடுக்கவும்.இது ஆரோக்கியமான திணை புட்டுடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடசுவையாக இருக்கும்.

Dec 27, 2025

கோதுமை புட்டு

தேவையான பொருட்கள் :1 கப்கோதுமை மாவு,1/2 கப் தேங்காய்,1/4 கப் நாட்டு சர்க்கரை,1 ஸ்பூன் நெய்,2ஏலக்காய்,சிறிது உப்பு ,செய்முறை :கோதுமையை வறுத்து அரைத்து கொள்ளவும் வறுத்த மாவுடன் உப்பு,தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த மாவில்சர்க்கரை,தேங்காய், நெய்,ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

Dec 27, 2025

பாசிப்பருப்பு புட்டு.

தேவையான பொருட்கள் :200 கிராம் பாசிப்பருப்பு,5 டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரிப் பருப்பு,1/2 மூடி துருவிய தேங்காய்,100 கிராம் சக்கரை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்.செய்முறை :முதலில் 200 கிராம் பாசிப்பருப்பை நாம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும்.மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் முழுவதையும் நன்றாக வடித்து விட்டு வெறும் பருப்பைமட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நாம் இட்லி ஊற்றுவது போல் இட்லி சட்டியில் அரைத்த பாசிப்பருப்பு மாவை இட்லி போல்வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இட்லி வெந்ததும் அதனை தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக்கொள்ள வேண்டும். இட்லி ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் வைத்து இட்லி துண்டுகளை தூளாகஉதிர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்புகளைஉடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காய் நெய்யில் நன்றாக வதங்கும் வரைவதக்க வேண்டும்.பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு இட்லி துருவலை அதனுடன் சேர்த்து நன்றாககலக்கி பிறகு அதனுடன் 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.இனிப்பை இன்னும் தூக்கி கொடுப்பதற்காக ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஒரு 5 நிமிடம் வரை சிம்மில் அடுப்பை வைத்து கிளறி விட வேண்டும்.மிகவும் ருசியானஆரோக்கியமான சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பாசிப்பருப்பு புட்டு தயார்.புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

Dec 27, 2025

சிவப்பரிசி குழல் புட்டு

தேவையான பொருட்கள் :சிவப்பரிசி - 2கப், தேங்காய் துருவல்- 1 1/2 கப், உப்புதேவைக்கு. செய்முறை :ஒரு பாத்திரத்தில் புட்டு மாவு, அத்துடன் தேவையான உப்பு, சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகதண்ணி தெளித்து கட்டி இல்லாமல் மாவு உதிரியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்துவிடவும்.தேங்காயை துருவி வைத்துக்கவும். புட்டு பானையை ஸ்டவ்வில் வைத்து தண்ணி விட்டு சூடுபண்ணவும்.புட்டு குழலில் கொஞ்சம் தேங்காய் துருவல், அதற்க்கு மேல் அரிசி மாவு, என்று குழாய்முழுவதுமாக நிறைத்து புட்டு பானையில் 10நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான சிவப்பாரிசி குழாய் புட்டு தயார்..இந்த சுவைமிக்க புட்டை கடலை,பச்சை பயறு, தட்டை பயறு குருமாவுடன் பரிமாறவும்.இது ஒரு அருமையான காலைஉணவு.குழந்தைகள் சக்கரை, பழம் சேர்த்தும் சாப்பிடலாம்.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 70 71

AD's