தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்ஆப்பிள் - 1 (தோல் நீக்கி துருவியது),நாட்டுச்சர்க்கரை - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்,முட்டை - 1,பால் - 3/4 கப் (தேவைக்கேற்ப),உப்பு - 1 சிட்டிகை,நெய் - சுடுவதற்கு தேவையான அளவு, செய்முறை:ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, துருவிய ஆப்பிள், நாட்டுச்சர்க்கரை மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.அதனுடன் முட்டையை உடைத்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.பாலை சிறிது சிறிதாக ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.பேனை சூடாக்கி, சிறிதளவு நெய் தடவவும். மாவை ஒரு கரண்டி எடுத்து தடிமனாக ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் நன்றாகச் சுட்டு எடுக்கவும். மென்மையான, சத்தான ஆப்பிள் பேன்கேக் தயார்.
தேவையான பொருட்கள் -1 கப் மைதா மாவு,2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை,2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்,2 டேபிள்ஸ்பூன் மசித்த வாழைப்பழம்,1 முட்டை.செய்முறை -மைதா மாவு சக்கரை பால் பவுடர் மசித்து வைத்த வாழைப்பழம் மற்றும் முட்டை சேர்த்து நன்கு விஸ்க் வைத்து கலக்கவும்.கேக் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பேட்டர் செய்யவும்.வெண்ணெய் தடவிய பேனில் ஒரு கரண்டி ஊற்றி மூடி வைத்து, இரண்டு பக்கமும் வேகவைக்கவும். சாக்லேட் சிரப் தேன் மற்றும் பழங்கள் வைத்து பரிமாறவும். சுவையான வாழைப்பழம் பேன் கேக் தயார்.குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம்.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்- 1 அல்லது 2முட்டை,1 கப்மைதா மாவு,1வாழைப்பழம்,2 மேசைக்கரண்டிசர்க்கரை,ஒரு சிட்டிகை உப்பு,ஒரு சிட்டிகைசோடா உப்பு,1/2 ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்,2 மேசைக்கரண்டி எண்ணெய்.செய்முறை- முதலில் மிக்ஸியில் வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.இதில் உப்பு, சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.இந்த அடித்த கலவையில் மைதா மாவு சேர்த்து ,கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் தடவி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, வேக வைத்து எடுக்கவும். சுவையான எக் பேன் கேக் தயார்.
தேவையான பொருட்கள்- 1 கப் ராகி மாவு,வெல்லம் தேவையான அளவு ,1-2வாழைப்பழம்,1/2டீஸ்பூன் ஏலக்காய்தூள்.செய்முறை -முதலில் கடாயில் ராகி மாவினை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின்னர் ஆற வைத்து பாத்திரத்தில் போடவும்.அதனுடன் வாழைப்பழம், வெல்லம் அல்லது பாகு காய்ச்சிய வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, நன்றாக மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இதனுடன் சிறிது பின்ச் சுக்கு பொடி சேர்த்தும் கொள்ளலாம்.தோசை கல் சூடானவுடன் ,மாவினை ஊற்றி தோசை போல நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வெந்ததும், அடுப்பினை அணைத்து விடவும்.சுவையான ராகி பேன்கேக் தயார்.
தேவையான பொருட்கள் -மைதா 2 கப்,சர்க்கரை 1 கப்,பால் 1/2 கப்,தேவையான அளவு - மாம்பழ ஜூஸ்,செய்முறை -நன்றாகச் சலித்த 2 கப் மைதா மாவில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.நன்றாக கலந்த பின்னர் சிறிது சிறிதாக அந்த கலவையில் பாலை ஊற்றி, தோசை மாவு பதத்தில் கொண்டு வரவும்.அந்தக் கலவையில் மாம்பழ ஜூஸ் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.மாவு தயாரான பின்பு ஒரு தோசைக்கல்லை காயவைத்து குழி கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போடவும்.முட்டையில்லாத மாம்பழ பான் கேக் தயார்.
தேவையான பொருட்கள்- 5 பலாப்பழ துண்டுகள்,1 கப்மைதா மாவு,1 கப்பால்,5 ஸ்பூன் சர்க்கரை,1ஸ்பூன் பேக்கிங் பவுடர்,1ஏலக்காய்,1 சிட்டிகை உப்பு,வெண்ணெய் அல்லது நெய்.செய்முறை -பலாப்பழம், பால், ஏலக்காய் ஆகியவற்றை அரைக்கவும்.மைதாமாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை கலக்கவும்.அரைத்த பலாப்பழ பேஸ்ட் மற்றும் மைதா கலவையை கலக்கவும்.10 நிமிடங்கள் கலவையை ஊறவைக்கவும். பான் இல் நெய் சேர்த்து கலவையை ஊற்றி, 2 பக்கங்களை சமைத்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :1கப் மீல் மேக்கர்அரைக்க:1பெரிய வெங்காயம்,2தக்காளி,1டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்,காரதிற்கேற்ப,2ஸ்பூன் மல்லிதூள் ,15 புதினா இலைகள்,1டேபிள்ஸ்பூன் அளவு மல்லி இலை,1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்,1துண்டு இஞ்சி,8சிறிய பூண்டு பற்கள்,2துண்டு பட்டை,1ஏலக்காய்,3கிராம்புதாளிக்க:3ஸ்பூன் எண்ணெய்,1/2ஸ்பூன் சீரகம்,கடைசியாக சேர்க்க:1ஸ்பூன் கஸ்தூரி மெதி, சிறிதளவு மல்லிதழை.செய்முறை : தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில்,தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் மீல் மேக்கர் சேர்த்துமூடி போட்டு 15நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.மிக்சி ஜாரில் அரைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து சூடானதும்,எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து,அரைத்த விழுதுசேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின் ஊறிய மீல்மேக்கர்-ல் நன்கு தண்ணீர் பிழிந்து சேர்க்கவும்.கொதித்ததும்,மூடி போட்டு மீல் மேக்கர் வேகவைக்கவும்.இதனுடன் கஸ்தூரி மேதி,மல்லி தழை சேர்த்து கலந்து விட்டு மீண்டும் மூடி வைக்கவும்.இவையிரண்டும் தான் கிரேவிக்கு சுவை கூட்டும். நன்கு கொதித்து, தேவையான கிரேவி பதம்வந்ததும்,மல்லித்தழை தூவி பரிமாறலாம்.சிம்பிளான, மீல் மேக்கர் கிரேவி ரெடி.இது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம்.
.தேவையான பொருட்கள் : 50 கிராம்மீல்மேக்கர்,சீரகம், ஒரு ஸ்பூன்சோம்பு,சிறிதளவு கருவேப்பிலை,வர மிளகாய்,1பெரிய வெங்காயம்,1பெரிய தக்காளி,சிறிதளவுஉப்பு,1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்,1ஸ்பூன்மல்லித்தூள்,1/2 ஸ்பூன்மிளகாய் தூள்,1 ஸ்பூன்கரம் மசாலா தூள்,1 ஸ்பூன்மிளகு தூள்,1 ஸ்பூன்தேங்காய் துருவல்,தேவையான அளவு எண்ணெய்.செய்முறை- ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கர் சூடான தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஊறியதும் நன்றாக பிழிந்து வைத்து கொள்ளவும்.கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், சோம்பு, கருவேப்பிலை ,வர மிளகாய் சேர்த்துவதக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.பின்பு மஞ்சள் தூள், வர மல்லி தூள், மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள் ,சோயா சேர்த்துகலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேக விடவும்.வெந்ததும் 1 ஸ்பூன் மிளகு தூள், 2 ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துகலந்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது சுவையான மீல் மேக்கர் மிளகு வறுவல் தயார்.
தேவையான பொருட்கள்-2 ஆழாக்கு பிரியாணி அரிசி,100 கிராம் மீல்மேக்கர்,2 பெரிய வெங்காயம்,2 தக்காளி,1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2 துண்டு பட்டை,1டீஸ்பூன் சோம்பு,1/2 டீஸ்பூன் கரம் மசாலா,1 டீஸ்பூன்தனி மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் தனியாத் தூள்,சிறிதளவு புதினா இலை,சிறிதளவுகிராம்பு ஏலக்காய்,தேவையான அளவு எண்ணெய்,சிறிதளவு கொத்தமல்லி,தேவையான அளவு உப்பு.செய்முறை :-ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பீல் மேக்கர்3 நிமிடங்கள் வேக வைத்துபிழிந்து எடுத்துக் கொள்ளவும்.பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள்ஊறவிடவும்.ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை,கிராம்புஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து வெங்காயம் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.இதனுடன் மீல்மேக்கரை நன்கு பிழிந்து அதனுடன் சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் கரம்மசாலா தூள் தேவையான அளவு உப்பு கொத்தமல்லி புதினா மற்றும் ஊற வைத்த அரிசியைமட்டும் சேர்த்து கிளறி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மூன்று ஆழாக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு குக்கரில் ஊற்றிமூடி வைத்து வெயிட் போட்டு குறைவான தீயில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால்சுவையான மீல்மேக்கர் பிரியாணி தயார்.மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு,1 வெங்காயம்,2தக்காளி,ஒரு கப்மீல் மேக்கர்,ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்,1பட்டை,2கிராம்பு,ஒரு கொத்துகறிவேப்பிலை,4 ஸ்பூன்தேங்காய் விழுது4 டீஸ்பூன் எண்ணெய்,4 டீஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்,கைப்பிடி அளவுகொத்தமல்லி தழை .செய்முறை: மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த தண்ணீரை அதன் மேல் ஊற்றிநன்றாக பிழிந்து கொள்ளவும்வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயை அரைத்துவிழுதாக எடுத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு மீல் மேக்கர் சேர்த்து ஐந்து நிமிடங்கள்கொதிக்க வைக்கவும்.தேங்காய் விழுது சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவவும். இந்த குருமாசப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.