ஸ்விக்கியின் Instamart சேவை, மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை 10 நிமிடங்களில் விநியோகம் செய்து வருகிறது. தற்போதுஇந்தசேவையின்மூலம் சமையல்எரிவாயுசிலிண்டர்களையும் ஆர்டர்செய்துபெறும்வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.இதற்கிடையில், போராட்டத்திற்கு முன்பாக மத்திய டெல்லி மற்றும் நாடாளுமன்றம் சுற்றுவட்டாரத்தில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.
இயற்கையான ஷார்ட்கட் ஹேர் ஸ்டைல் மட்டுமே இருக்க வேண்டும். நீளமாகவோ, side cut அதிகமாகவோ இருக்க கூடாது.பள்ளி வளாகத்தில் மொபைல், ப்ளுடுத் பயன் படுத்த கூடாது.தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.18 வயதிற்குள் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் பயன் படுத்த கூடாது.கலர் டை அடிக்கக்கூடாது.மீறினால் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் தண்டனை கிடைக்கும்.ஒழுக்கம் தான் எதிர்காலம்ஒழுக்கமான மாணவன் உயர்ந்த தமிழகம்.
தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், 2031ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது தினமும் 520-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், ஒரு சார்ஜிங் நிலையத்திற்கு சராசரியாக 254 வாகனங்கள் என்ற விகிதம் உள்ளது. புதிய நிலையங்களை விரைவாக அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு Single Window முறையில் அனுமதி வழங்கவும், அனைத்து சார்ஜிங் நிலையங்களையும் Google Maps-ல் இணைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான OCI அட்டை இனி e-OCI என்ற டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காகித ஆவணங்களின் தேவையின்றி, விரைவான சரிபார்ப்பு மற்றும் எளிதான அணுகல் கிடைக்கும். புதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ OCI சேவை இணையதளத்தில் பதிவு செய்து, பாஸ்போர்ட் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே OCI அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து e-OCI நகலை நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தினமும் மகிழ்ச்சியாக வாழ இரண்டு விஷயங்கள் முக்கியம் என தெரிவித்துள்ளார்.நம்முடன் இருப்பவர்கள் இணக்கமானவர்களாக இருக்க வேண்டும்; அதேபோல் நாமும் மற்றவர்களுக்கு இணக்கமாக நடக்க வேண்டும்.மனதை எதிர்மறை மற்றும் தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுவித்து, கற்றல் அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
HCL குழுமத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். அவர் கூறிய முக்கியமான பொன்மொழி:"உங்கள் லட்சியங்களைப் பொறுத்தவரை நீங்கள் நிதானமாக இருந்தால், நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் நம்பிக்கை பிறக்கும்."இந்தக் கருத்து, இலக்கை அடைய அவசரப்படாமல் பொறுமையுடனும் தெளிவுடனும் செயல்பட வேண்டும் என்பதைக் கூறுகிறது. வெற்றி என்பது ஒரே இரவில் கிடைப்பதல்ல; தொடர்ச்சியான முயற்சி, மன அமைதி மற்றும் தன்னம்பிக்கையால் கிடைக்கும் என்பதை இந்த பொன்மொழி உணர்த்துகிறது.மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நம் பயணத்தில் கவனம் செலுத்தி, சவால்களை நிதானமாக எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதே ஷிவ் நாடாரின் ஊக்கமூட்டும் செய்தியாகும்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு இனி 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.முதலில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அறிமுகமான இந்தத் திட்டம், பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது சுமார் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.மேலும், வரும் செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹343 கோடி செலவிடப்பட உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் ₹217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரியில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஒருங்கிணைந்த ஏவுகணை உற்பத்தி மையத்தை அமைக்க அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு இது முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானின் அதிவேக ஷின்கான்சென் ரயிலில் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஜப்பானின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்திய கிராமப்புற தொழில்களுடன் இணைக்கும் நோக்கில் அவர் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின்'தகுமி' கைவினை கலாச்சாரத்தை இந்திய கிராமப்புற திறமைகளுடன் இணைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அவரது இலக்கு.