பல்லாங்குழி -இருக்கும் இடத்தில் எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர.. பரமபதம் - ஏற்றம், இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த. கில்லி - கூட்டல், பெருக்கல் கணக்கைக் களிப்புடன் மகிழ்ந்து கற்க... தாயம்- வெட்டி, வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற... சதுரங்கம் -இதர வழி இல்லாதபோதும் இறுதிவரை போராடும் உறுதி மனம் பெற ... நொண்டி - சமமாக இல்லாதபோதும் சாதிக்கத் தூண்டும் சக்தியைப் பெற ... கண்ணாமூச்சி - ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும். தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற..
1-வது மாதம் - தலையைத் தூக்குதல் 2-வது மாதம் - சிரித்தல், புன்னகைத்தல் 3-வது மாதம் -பொருட்களை பிடிக்க முயற்சி செய்தல் 4-வது மாதம் - பொருட்களை பிடித்தல் 5-வது மாதம் - சரியாக உட்காருதல் 6-வது மாதம் - அசையும் பொருட்களை பிடித்தல் 7-வது மாதம் - உதவி இல்லாமல் தானே உட்காருதல் 8-வது மாதம் - பிறர் உதவியுடன் நிற்க பழகுவது 9-வது மாதம் - பொருட்களை பிடித்து நின்று கொண்டு இருப்பது 10-வது மாதம் தரையில் தவழுதல் 11-வது மாதம் - எதையாவது பிடித்துக் கொண்டு நடப்பது 12-வது மாதம் எதையாவது பிடித்துக்கொண்டு தரையில் இருந்து எழுந்து நிற்பது. ஒரு வயது ஒரு மாதம் படி ஏறுதல், 2-3 வார்த்தைகளை பேசுதல்
பூமியில் இருந்து8.2 கோடி கி.மீ., துாரத்தில் உள்ள'பென்னு' விண்கல்லின் பாறை, மண் மாதிரியை'ஆசி ரிஸ்ரெக்ஸ்' விண்கலம் மூலம் பூமிக்கு சமீபத்தில்'நாசா' கொண்டு வந்தது. இதன் துவக்க கட்ட ஆய்வில், இதில் கார்பன், தண்ணீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். தண்ணீர் என்பது அதிலுள்ள கனிமங்களில் கலந்துள்ளது. கொண்டு வரப்பட்ட விண்கல்லின் மண் மாதிரியை, விஞ்ஞானிகள் முழுமையாக திறக்கவில்லை. வெளிப்பகுதி மாதிரியை மட்டும் தற்போது ஆய்வு செய்தனர். மாதிரியை முழுமையாக ஆய்வு செய்யும் போது, புதியதகவல் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
1) மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பின் உணரலாம். 2) மகளின் மாற்றத்தை வாலிப வயதில் உணரலாம். 3) கணவனின் மாற்றத்தை மனைவி நோய்வாய் படுதலில் உணரலாம். 4) மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம். 5) நண்பனின் மாற்றத்தை கஷ்ட காலத்தில் உணரலாம். 6) சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம். 7) சகோதரியின் மாற்றத்தை சொத்து பரிமாற்றத்தில் உணரலாம். 8) பிள்ளைகளின் மாற்றத்தை நமது முதுமை காலத்தில் உணரலாம்.
பிறர் நம்மை கோபப்படும் படி செயல்படும் போதும், கோபப்படும் படி பேசும் போதும் மௌனமாக இருப்பது நல்லது. சூழ்நிலைகள் நமக்கு எதிராக இருக்கும் போது மெளனமாக இருப்பது நல்லது .வெற்றி பெரும் பொழுது எக்காரணம் கொண்டும் கூச்சிலிடக்கூடாது.மௌனமாக வெற்றிக்கனியை ருசிக்க வேண்டும்.பொருளாதார ரீதியாக வளரும் போது மெளனமாக இருக்க வேண்டும். maximum மௌனமாக இருப்பது நல்லது.
விஞ்ஞானி வளர்மதி அவர்கள் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரியலூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர் கல்லூரிப் படிப்பினை அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பயின்றார். பிறகு கோயமுத்தூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியியல் பொறியியல் படிப்பையும் சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மின்னனுவியல் மற்றும் தொடர்பியலில் எம் இ படிப்பினையும் கற்றுத் தேர்ந்தார் . DRDO மற்றும் இஸ்ரோ ஆகிய இரண்டிலும் வாய்ப்புக்கள் வந்தபோது இஸ்ரோவைத் தேர்ந்தெடுத்தார். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக தமிழக சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதினைப் பெற்ற முதல் நபர் இவர்தான்.1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்தார் 2012 ஆம் ஆண்டு ரேடார் இமேஜ் சாட்டிலைட் - 1ன் திட்ட இயக்குநராக பணியாற்றினார் 2017-ல் இந்து தமிழின் தமிழ் திரு விருதும் பெற்றுள்ளார். சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவிய நிகழ்வு முதல் பல பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவிய நிகழ்வு வரை கடந்த ஆறு வருடமாக மிஷன் ரேஞ்ச் ஸ்பிக்கராக வளர்மதி பணியாற்றியிருக்கிறார் 2012-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட RISAT-1 திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு இருக்கிறார் தனது கம்பீரமான குரலுக்காக பலராலும் பாராட்டப்பட்டவர் சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டு நிலவின் தென்பகுதியில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனைப் படைத்தது அதற்கும் கவுண்டவுன் கொடுத்தவர் வளர்மதி அவர்கள்தான். உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வளர்மதி,மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவரது இழப்பு இந்திய விண்வெளித்துறைக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
விருந்து தருவதற்கு விருந்துக்கு செல்வதற்கு சிறந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகும்.கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும்.மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்ட ஐஸ்வர்யம் அதிகரிக்கும்.தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்ட புகழ் ஓங்கும்.வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.விரதத்திற்கு அடுத்த நாள் சாப்பிடும் போது உணவில் நெல்லிக்காய்,சுண்டைக்காய் வாழைப்பழம் மற்றும் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவு தூங்கும் முன் கடந்த காலத்தை பற்றி சிந்திக்காதீர்கள். நாளை நீங்கள் செய்யப்போகும் வேலையை, மனதில் நினைத்து அதை ஒத்திகை பாருங்கள். தூங்கும் முன் உங்கள் கடந்த கால ஏதோ நிகழ்வை சிந்தித்துவிட்டு தூங்கிவிட்டால் இரவு முழுவதும் உங்கள் மூளையில் அதுமட்டுமே pause Mode ல் இருக்கும். அதனால் நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஏதோ குழப்பம். முகத்தில் பொலிவும் சுறுசுறுப்பும் இருக்காது. அன்றய தினம் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் தெளிவு இருக்காது,மாற்றிக்கொள்ளுங்கள்.
1. மகாராஷ்டிரா( GDP- 38 லட்சம் கோடி ) 2. தமிழ்நாடு( GDP- 28.3 லட்சம் கோடி ) 3. குஜராத் ( GDP- 25.62 லட்சம் கோடி ) 4. கர்நாடகா ( GDP- 25 லட்சம் கோடி ) 5.உத்திரப்பிரதேசம் ( GDP- 24 லட்சம் கோடி )
1.அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும். 2. வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும். 3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். 4. கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும். 5.தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும். 6.நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும். 7.தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும். 8 வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும். 9.தேன் தானம்-புத்திர பாக்கியம் உண்டாகும். 10. நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 11.அரிசி தானம் - பாவங்களைப் போக்கும். 12 பால் தானம்- துக்கம் நீங்கும். 13. தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும். 14 தேங்காய் தானம்- நினைத்த காரியம் நிறைவேறும். 15. பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.