25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள் ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள் ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார்.இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில் நிலைதடுமாறி அந்தப் பெண்ணும் குழந்தைகளும் சாலையில் விழுந்தனர்.

இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக, பின்னால் வந்த வாகனங்கள் சமயோசிதமாக பிரேக் போட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் விழுந்த மூவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து அவர்களுக்கு உதவி செய்தனர்.

இத்தகைய பள்ளி நேரங்களில் ஏற்படும் சம்பவங்கள் நடப்பது குழந்தைகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஆபத்தாக முடியலாம் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *