சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள் ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார்.இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில் நிலைதடுமாறி அந்தப் பெண்ணும் குழந்தைகளும் சாலையில் விழுந்தனர்.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக, பின்னால் வந்த வாகனங்கள் சமயோசிதமாக பிரேக் போட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் விழுந்த மூவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து அவர்களுக்கு உதவி செய்தனர்.
இத்தகைய பள்ளி நேரங்களில் ஏற்படும் சம்பவங்கள் நடப்பது குழந்தைகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஆபத்தாக முடியலாம் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
0
Leave a Reply