25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 23, 2024

அமுல் நிறுவன பால் வந்தாலும் ஆவினுக்கு பாதிப்பில்லை என அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் பால், பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் சார்பில் தினமும் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ப்ளூ ஆகிய பாக்கெட்டுகளில் விற்பனையாகிறது. இதில் பச்சை ஒரு பாக்கெட் 22 ரூபாய்க்கும் ப்ளூ ஒரு லிட்டர் ரூ 20க்கும் ஆரஞ்ச் பாக்கெட்டின் விலை ரூ 30க்கும் விற்பனையாகிறது. இது தவிர ஊதா நிறத்தில் டிலைட் என்ற பாலும் விற்பனை செய்யப்படுகிறது. பால் பொருட்கள் மட்டுமல்லாமல் வெண்ணெய், நெய், தயிர், மோர் உள்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அது போல் குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் மூலம் பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. அமுல் நிறுவன பால் வந்தாலும் ஆவினுக்கு பாதிப்பில்லை என அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது. அமுல் பால் விற்பனையை தமிழகத்தில் தொடங்குவதாக வந்த தகவல்களில் உண்மையில்லை. பால் விற்பனையை அமுல் நிறுவனம் தற்போது தொடங்கவில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் இரு மாதங்களில் சித்தூர் அமுல் பால் பண்ணையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பால் விற்பனையை தொடங்குவதாக அமுல் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை,பால் மற்றும் பால் பொருட்களை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உரிய தரத்தில் தயாரித்து, குறைவான விலையில் ஆவின் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், சில நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் பால் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆவின் நிறுவனம் தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம், தர்மபுரி, துாத்துக்குடி, கரூர் மாவட்டங்களில், புதிய பால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதிகரித்து வரும் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பால் வினியோகம் எளிதாகவும், துரிதமாகவும் செய்யப்படும்.. 

May 23, 2024

கருப்பு நிற பால் கொடுக்கும் விலங்கு ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம்

மனிதர்களின் வாழ்க்கையில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை பாலை தங்களது அன்றாட வாழ்வில் உட்கொள்கின்றனர். ஏனென்றால் ஊட்டச்சத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பால் மிகவும் அவசியம்.மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது தாய் பால் கொடுக்கப்படுகிறது. அவர்கள் சற்று வளர்ந்ததும் ஆடு அல்லது மாட்டு பால் கொடுக்கப்படுகிறது. மனிதர்கள் மட்டுமன்றி ஆடு, மாடு, ஒட்டகம், சிங்கம், புலி என பெரும்பாலான மிருகங்கள் பாலூட்டிகளாக உள்ளன. உலகில் சுமார்6,400 பாலூட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு என்னவென்றால் இந்த6,400 பாலூட்டிகளில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிற பாலை தரும். உண்மையாகவே ஒரு பாலூட்டி கருப்பு நிறத்தில் பால் தருகிறது.கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு கருப்பு காண்டாமிருகம் தான். இவை ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகின்றன. இந்த வகை காண்டாமிருகங்களின் பாலில்0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. தண்ணீர் போல இருக்கும் காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும்.கருப்பு காண்டாமிருகங்களால்4 முதல்5 வயது வரைமட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும்.அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும். இவை ஒருமுறை ஒரு குட்டியை மட்டுமே ஈனும்.

May 22, 2024

2030ல் தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடும் என நகைக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்

அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற விற்பனையில் கடந்த ஆண்டு காட்டிலும்30 சதவீதம் அளவிற்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 15,000 வரை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், மக்கள் தங்கம் அதிக அளவில் வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக தங்கத்தின் மீது முதலீடு செய்தால் முழு லாபம் அடைய முடியும் என்றும் தங்கம் விலை தற்போது காட்டிலும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்இன்று22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,750க்கும், ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக 2030ல் ஒரு லட்ச ரூபாய் வரை தங்கத்தின் விலை உயரும் என்றும்,2030ல் தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடும் எனவும் நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

May 22, 2024

ATM செல்ல வேண்டாம்.. ரூ.50,000 வரை வீட்டுக்கே தேடி வரும்.

வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும்நமது தினசரி வாழ்க்கைக்குமத்தியில், வங்கி(Bank) சென்றோஅல்லது ஏடிஎம்(ATM) சென்றோபணம் எடுக்க நேரம் இல்லாத ஆதார் அட்டை(Aadhaarcard) பயனர்களுக்கு, வீடு தேடி வந்து பணத்தைஒப்படைக்கும் புதிய சேவையைஆதார் மற்றும் இந்தியஅரசாங்கம்(GovernmentofIndia) இணைத்துஉருவாக்கியுள்ளது.இந்த சேவை தற்போதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உங்களிடம்ஆதார் மட்டும் இருந்தால்போதும், ரூ.50,000 வரைஉங்கள் வீட்டுக்கே தேடி வந்து பணம் வழங்கப்படும் புதிய சேவையை இந்தியஅரசு அறிமுகம் செய்துள்ளது.இந்த சேவை ஆதார் எனப்பில்டு பேமெண்ட்சிஸ்டம்(AadhaarEnabledPaymentSystem) அல்லதுஏஇபிஎஸ்(AePS)என்ற பெயரின் மூலம் பொதுமக்களுக்காக செயல்படுகிறது. AePS என்பது NPCI என்றஇந்திய தேசிய கொடுப்பனவுகழகம் (National Payments Corporation ofIndia) மூலம்உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பாகும். இது ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள்வங்கிக் கணக்கில் பணத்தைடெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் அனுமதிக்கிறது.இதுமட்டுமின்றி, வங்கி கணக்குஇருப்பைச்(bankbalancestatus) சரிபார்க்கவும்மற்றும் ஆதாரில் இருந்துஆதாருக்கு நிதியை மாற்றவும்(AadhaartoAadhaarmoneyexchange) உதவுகிறது.பணம் எடுக்கவும்(Cashwithdrawl), பணம் டெபாசிட் (Cash deposti) செய்யவும்நீங்கள் வங்கிகோ, அல்லதுஏடிஎம் மையத்திற்கோ (ATM center) அல்லது டெபாசிட்இயந்திரத்தை (Deposit machine) தேடியோஅலையவேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.இந்த புதிய சேவை இந்தியா போஸ்ட்பேமெண்ட் வங்கி (Indiapostpaymentbank) உடன் இணைந்துசெயல்படுகிறது. இந்த சேவையின்மூலம் உங்கள் ஆதார் விபரங்களுடன் இணைக்கப்பட்டவங்கி கணக்கில் இருந்துரொக்கமாக பணத்தை உங்கள்வீடு தேடிய வரவழைக்கமுடியும். இந்த பணத்தைஉங்கள் ஏரியாவின் போஸ்ட்மேன்உங்கள் வீடு தேடி வந்து ஒப்படைப்பார். இந்த சேவை உங்களுக்கு 6 வகையான வங்கி சேவையைவழங்குகிறது.ஏடிஎம் மற்றும்வங்கி செல்லாமல் வங்கி தொடர்பான சேவைகளைஅணுக அனுமதிக்கிறது. இந்தAePS சேவையைபயன்படுத்த முதலில் உங்கள்வங்கி கணக்குடன் உங்கள்பயோமெட்ரிக் விபரங்கள் மற்றும்ஆதார் விபரங்கள் இணைக்கப்படவேண்டும். உங்களிடம் ஒன்றிற்கும்மேற்பட்ட வங்கி கணக்குகள்இருக்கிறது என்றால், அதில் எது உங்கள்பிரைமரி வங்கி கணக்காகசெயல்படுகிறதோ. அந்த கணக்குமட்டுமேAePS சேவைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.AePS சேவை மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றத்திற்கு(Moneytransactions) இந்தியரிசர்வ் வங்கி (RBI) எந்தவிதகட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.இருப்பினும் சில வங்கிகள் (banks) ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை மட்டுமே பணபரிமாற்றத்தைவழங்க அனுமதிக்கிறது.- போஸ்ட்மேன்னிடம்இருக்கும் POS மெஷினில் உங்கள்ஆதார் விபரங்களை உள்ளிட்டவேண்டும். - பரிவர்த்தனை வகையைத்தேர்ந்தெடுக்கவும். - வங்கியின் பெயரைக் குறிப்பிடவும். - பரிவர்த்தனையைத் தொடர பரிவர்த்தனைதொகையை உள்ளிடவும். - கட்டணத்தை உறுதிப்படுத்தபயோமெட்ரிக் அங்கீகாரத்தை வழங்கவும். - பயோமெட்ரிக் என்பது உங்கள்கைரேகை அல்லது கருவிழிஸ்கேன்னிங் ஆகும். - பணத்துடன்பரிவர்த்தனைக்கான ரசீது வழங்கப்படும்.

May 22, 2024

பூமியை தாக்குமா 'விண்கல்'

'2007 எப்.டி.3' விண்கல் விண்வெளியில் சுற்றி வருகிறது. இது2024ல் பூமியில் ஏதாவது ஒரு பகுதியில் விழும் வாய்ப்பு உள்ளது என நாசா எச்சரித்துள்ளது. விண்வெளியில் இதுவரை 32 ஆயிரம் விண்கற்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 2007ல் கண்டறியப்பட்ட'2007 எப்.டி.3' விண்கல் தன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி செல்வதை நாசா கண்டறிந்தது. இது இந்தாண்டு பூமியில் விழும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்பு என்பது1.15 கோடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் உள்ளது.

May 21, 2024

கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் பெற ...

நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் உடனடி முன்பதிவு செய்யும் விருப்பத்தையும் கொண்டுள்ளனர். ஆனால் உடனடியாக முன்பதிவு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெற முடியும். ரயிலின் பயணத் தேதிக்கு1 நாள் முன்னதாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் பயணிகளின் அதிக தேவை காரணமாக, உடனடி முன்பதிவு செய்வது இன்றைய காலத்தில் மிகவும் கடினமாக உள்ளது.சாமானியர்களுக்கு பதிலாக, முன்பதிவு முகவர்கள் தான் அனைத்து தட்கல் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்வதாக மக்கள் புகார் கூறுகின்றனர். ரயிலுக்குள் எந்த இருக்கையும் காலியாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் உறுதியான டிக்கெட்டுகளைப் பெறுவதற்காகவும் தற்போதைய டிக்கெட் முன்பதிவை ரயில்வே தொடங்கியுள்ளது.இதில், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரம் முதல்5 நிமிடம் வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தற்போதைய டிக்கெட்டின் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் போலல்லாமல், பயணிகள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.தட்கல் டிக்கெட்டை விட தற்போதைய டிக்கெட்டில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை முன்பதிவு செய்வது எளிது. கிடைக்கும் தன்மையைப் பொறுத்து, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை இதில் எளிதாகப் பெறலாம்.ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ரயில்வே டிக்கெட் முன்பதிவு முன்பதிவு கவுண்டரில் இருந்து தற்போதைய டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்யலாம்.

May 21, 2024

4 மாத பெண் குழந்தை இஷான்வி.  உலக சாதனை புத்தகத்தில் .....

பெங்களூரைச் சேர்ந்தவர்கள் பிரஜ்வல்- சினேகா. இவர்களின் நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி. மகள் பிறந்து இரண்டு மாதங்களிலேயே, தன் மகளிடம் சினேகா, சில பொருட்களை காட்டி, அறிமுகப்படுத்தி வந்தார்.ஒருநாள் ஒருபொருளை சுட்டிக் காட்டி, கேட்டபோது, சரியான பொருளை இஷான்வி அடையாளம் காட்டியது. இதனால் ஆச்சர்யமடைந்த சினேகா, மேலும் தான் சொல்லிக் கொடுத்த பொருட்களை அடையாளம் காட்ட ஊக்கப்படுத்தினார். இப்படியாக இஷான்வியும் பொருட்களை சரியாக அடையாளம் காணத் துவங்கியது. இதையறிந்த உறவினர்கள், நண்பர்கள், இதை வீடியோவாக பதிவு செய்து,நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு அனுப்பும்படி கூறினர்.அதன்படி பெற்றோரும், குழந்தையிடம் 10 பறவைகள், 10 வீட்டு விலங்குகள், 10 வெவ்வேறு பறவைகள், 10 பூக்கள், 10 வாகனங்கள், 10 விலங்குகள், 11 வண்ணங்கள், 15 காய்கறிகள், 14 பழங்கள், 13 பொது உருவங்கள், 12 வடிவங்கள் என, 125 பொருட்களை இஷான்வி அடையாளம் காட்ட பழக்கியிருந்தனர்.இதை வீடியோவாக எடுத்து'நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு பிரஜ்வல்- சினேகா தம்பதி அனுப்பி வைத்தனர். இதை ஆய்வு செய்த அமைப்பினர், நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி, புதிய உலக சாதனை படைத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.இதனால் பெற்றோர், குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான்கு மாத குழந்தை, 120 பொருட்களை அடையாளம் காண்பித்ததே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனையை இஷான்வி முறியடித்துவிட்டது.

May 21, 2024

நீராவி இன்ஜின்

ரயில் பாதைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் பிரிட்டனின் ஜார்ஜ் ஸ்டீபன்சன். சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் சிறுவயதிலேயே நீராவி இயந்திரத்தை உருவாக்க ஆர்வம் கொண்டிருந்தார். பல முயற்சிகளை மேற்கொண்டு ரயிலை உருவாக்கினார். மரத் தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினில் உள்ள குறையை சரிசெய்தார். ஸ்டாக்டன்- டார்லிங்டன் வரை இரும்பு தண்டவாளம் அமைத்து ஓட்டிக் காட்டினார். இவரது கண்டுபிடிப்பால் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இவர் நிர்ணயத்த ரயில் பாதை அளவே பின்னாளில் உலகம்முழுவதும்பின்பற்றப்பட்டது.

May 20, 2024

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில்(SilliconValley) உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பு மட்டும் இன்றி அங்கே வேலை செய்து வருபவர்களிலும் பலர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்

அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவியில் இருப்பவர்கள் இந்தியர்கள்.கூகுளின் சுந்தர் பிச்சையில் தொடங்கி மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா, ஐபிஎம்மின் அரவிந்த் கிருஷ்ணா, ஸ்டார்பக்ஸின் லட்சுமண் நரசிம்மன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.அண்மையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சிலிக்கான் வேலியின் மத்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்பிர் கே பாட்டியா, அமெரிக்க தொழில்நுட்ப துறை என்பது இந்தியர்கள் இல்லாமல் செயல்படவே முடியாது எனக் கூறியுள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கமும் இந்தியர்களின் பங்களிப்பும் மிகப்பெரியது எனசுட்டிக்காட்டும் அவர், சிலிக்கான் வேலியில் பல்வேறு புதுமைகளுக்கு காரணமானவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர் என்றார். ஒரு காலகட்டத்தில் சிலிக்கான் வேலியில் உள்ள தலைமை செயல் நிர்வாக அதிகாரிகள் அல்லது நிறுவனர்களில்40% பேர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர், கூகுள், யூடியூப், கூகுள் பவுண்டேஷன், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்தியர்களே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார். இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் உற்பத்தி திறன் ஆகியவை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அவர்களை தலைமை பதவிக்கு கொண்டு சேர்க்கிறது என்றும் கூறியுள்ளார்.மேலும் ஒரு பிரச்சனையை சமாளிப்பதற்காக இந்தியர்கள் கையாளும் வழிமுறைகள் குறிப்பாக எளிதில் தீர்வு காணும் குணம் ஆகியவை தலைமை பொறுப்புவரை அவர்களை கொண்டு சேர்க்கிறது என்றார். அண்மையில் கூட அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, பார்ச்சூன் 500 நிறுவனங்களின்10 தலைமை செயல் அதிகாரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் படித்த இந்தியர்களாக உள்ளனர். 

May 20, 2024

இனிப்பு கடையை தொடங்கி இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகத்தை உருவாக்கிய LOVELY SWEET OWNER

அசோக் குமார் மிட்டல் , பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த புகழ்பெற்ற இனிப்பு கடைக்காரரின் மகன். அசோக் குமார் மிட்டலின் பால்தேவ் ராஜ் மிட்டல் 1961 ஆம் ஆண்டில் ஜலந்தரில் நண்பரிடம் இருந்து 500 ரூபாய் கடனாக பெற்று லவ்லி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஒரு இனிப்பு கடையை தொடங்கினார். அவரது மோட்டீச்சூர் லட்டு பஞ்சாப் முழுவதும் மிகப் பிரபலமானது. இதன் மூலம் இவரது இனிப்பு கடை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. 1969 ஆம் ஆண்டு ஜலந்தரிலேயே அவர் மூன்று இனிப்பு கடைகளை திறந்தார். தற்போது ஜலந்தரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இனிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. தந்தையின் வியாபார நுணுக்கங்களை கண்டு வளர்ந்த அசோக் குமார் மிட்டல் தற்போது பெரிய கல்வி குழுமத்தின் நிறுவனராக மாறி இருக்கிறார். சட்டப் படிப்பு மற்றும் டாக்டரேட் முடித்த அசோக் குமார் மிட்டல் 2005ஆம் ஆண்டில் தி லவ்லி ஃபுரொபஷனல் பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது இந்த பல்கலைக்கழகம், ஆண்டுக்கு 1153 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. 30,000க்கும் அதிகமான மாணவர்கள் இங்கே கல்வி பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி லவ்லி பல்கலைகழகம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரபலமான கல்லூரிகளோடு ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி, அதிகப்படியான வாய்ப்புகளை அளித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் செயல்படும் கல்வி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கல்வி குழுமத்தை நிறுவியதோடு நிற்காமல் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் அசோக் குமார் மிட்டல் உயர்ந்திருக்கிறார். ஆம்ஆத்மிகட்சிசார்பாகமாநிலங்களவைஉறுப்பினராகதற்போதுசெயல்பட்டுவருகிறார். 500 ரூபாய் கடனில் துவங்கிய ஸ்வீட் கடை, இன்று மாபெரும் பல்கலைக்கழகத்தின் அதிபதி.

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 47 48

AD's



More News