25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 20, 2024

மேகம் மிதப்பது ஏன் 

வானில் மேகக்கூட்டங்கள் மிதப்பதை காண்கிறோம். இவை எப்படி தனியாக மிதக்கிறது என்பதற்கு காரணம் உள்ளது. திரவம் அல்லது வாயு பொருட்களில், பொதுவாகவே'திணிவு அடர்த்தி' அதிகமாக இருக்கும் பொருட்கள் மூழ்கும். ஆனால் அடர்த்தி குறைவாக உள்ள பொருட்கள் மிதக்கும். நீரில் மரக்கட்டை மிதக்கிறது என்றால், மரக்கட்டையின்'திணிவு அடர்த்தி' என்பது நீரைவிட குறைவு என பொருள். நீராவி நிரம்பிய மேகத்தின் திணிவு அடர்த்தி, காற்றின் திணிவை விடக் குறைவு என்பதால்தான் மேகம் காற்றில் மிதக்கிறது

May 18, 2024

"தி கார்டன் ஆஃப் டைம்" டிரஸ் தயாரிக்க 10,000 மணிநேரம் Met gala

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷாஅம்பானி மெட்காலா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஆடைஅனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.உலகிலேயே மிகப்பெரிய பேஷன் நிகழ்வாக கருதப்படுகிறது மெட்காலா.இதில் உலகெங்கிலும் இருக்கக்கூடிய பல்வேறு பிரபலங்கள் புது விதமான ஆடைகளை அணிந்து வந்து கலக்குவார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருளாக வைக்கப்பட்டது "ஸ்லீப்பிங் பியூட்டி அவேக்கனின் ஃபேஷன்" என்பதாகும்இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த அந்த ஃப்ளோரல் கவுன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த கவுனை வடிவமைத்தவர் ராகுல் மிஸ்ரா ஆவார். இதனை வடிவமைக்க அவரும் அவரது உதவியாளர்களும்10,000 மணி நேரங்களை எடுத்துக் கொண்டார்களாம். ஃப்ளோரல் புடவையை அடிப்படையாகக் கொண்ட இந்த கவுன், இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் கைப்பட எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தான் அது அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள மெட்ரோபாலிடியன் மியூசியத்தை சென்றடைந்ததாம்.இங்கு தான் மெட் காலா நிகழ்ச்சி கோலாகலமாகவும் வண்ணமயமாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈஷா அம்பானி அணிந்திருந்த ஆடையின் கருப்பொருள்"தி கார்டன் ஆஃப் டைம்"என்பதாகும். பலவகையான மலர்கள் பட்டாம்பூச்சிகள் மற்றும் டிராகன் ஈக்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.ஃபரீசா (Fareesha), ஜர்தோசி( Zardozi), நாக்சி (Nakshi) , டப்கா(Dabka) மற்றும்(Frenchknots)பிரெஞ்சு நாட்ஸ் ஆகிய வகைகளைக் கொண்டு எம்ப்ராய்டரி இந்த ஆடை வடிவமைப்பில் பின்பற்றப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் அனைதா ஷெராஃப் தெரிவித்துள்ளார்.ஈஷா அம்பானி ஒரு பர்சையும் வைத்திருந்தார். இதுவும் பாரம்பரிய முறையில் இந்திய கிராமங்களில் தயாரிக்கப்பட்டதாம்.

May 18, 2024

சாலையோர உணவகம் நடத்தும் சிறுவனுக்கு உதவி அளிக்க ஆனந்த் மகிந்திரா முடிவு

டெல்லியின் திலக் நகர்பகுதியில் உள்ளசிற்றுண்டி கடையை10 வயதே ஆனஜஸ்பிரித் கவனித்துவருகிறார். ஜஸ்பிரித்திற்கு துணையாக அவரின் சகோதரிஉள்ளார். மாமாவின்அரவணைப்பில் இந்தகடையை ஜஸ்பிரித்கவனித்து வருகிறாராம்.சமீபத்தில் சிறுவன்ஜஸ்பிரித்தின் தந்தைநோய்வாய்ப்பட்டு உயிரிழந்துவிட்டதால் தனதுதாய் மற்றும்14 வயது அக்காவைகாப்பாற்றுவதற்காக அந்தகடையை தானேஏற்று நடத்துவதாகஜஸ்ப்ரீத் தெரிவித்துள்ளார்.சரப்ஜித் சிங் என்றஉணவு ரிவ்யூசெய்யும் நபர்இந்த கடைக்குசென்றுள்ளார். அவர்தான்அந்த சிறுவனிடம்வீடியோ எடுத்துபதிவிட்டு இருந்தார்.அந்த வீடியோதற்போது வைரல்ஹிட் அடித்துள்ளது. சிறுவன் நம்பிக்கையுடன் பேசும்வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானலைக்குகளை குவித்துள்ளது.27,000க்கும்மேற்பட்டோர் இந்தவீடியோவிற்கு பாராட்டுதெரிவித்து உள்ளனர். தற்போது டெல்லியைசேர்ந்த10 வயதுசிறுவனின் வீடியோஒன்று கடந்தசில தினங்களாகவேகமாக பரவிவருகிறதுஇந்த வீடியோ பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவின் கண்ணிலும் பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய ஆனந்த் மகிந்திரா, சிறுவன் வீடியோவை பார்த்ததும் நெகிழ்ந்து போனார். உடனடியாக தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா சிறுவனுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:- துணிவின் பெயர் ஜஸ்ப்ரீத். எனினும், சிறுவனது கல்வி எந்த வகையிலும் பாதிக்க கூடாது. அவர் டெல்லியின் திலக் நகரில் இருக்கிறார் என கருதுகிறேன். அவரது தொடர்பு எண்ணை யாரேனும் வைத்திருந்தால் பகிரவும். அவரது கல்விக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து மகிந்திரா அறக்கட்டளை குழு முயற்சி செய்யும்"என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஹிட் அடிக்கும். ஆனந்த் மகிந்திராவை எக்ஸ் தளத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். பலரது திறமைகளை பாராட்டுவதோடு பலருக்கும் ஆனந்த் மகிந்திரா உதவியும் செய்து வருகிறார். அந்த வகையில் தான் தற்போது இந்த சிறுவனுக்கும் உதவ ஆனந்த் மகிந்திரா முன்வந்துள்ளார்.

May 18, 2024

பெரிய நிறுவனத்தில் பெங்களூருவில் சேல்ஸ் பிரிவில் தலைமை பொறுப்பு வகித்து, வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்த சேத்தன் ஷெட்டி

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் சேத்தன் ஷெட்டி. மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பெங்களூருவில் சேல்ஸ் பிரிவில் தலைமை பொறுப்பு வகித்து வந்தார்.சேத்தன் ஷெட்டியின் குடும்பத்தினர் மங்களூர் பகுதியில்  விவசாயம் செய்து வந்தனர். விடுமுறை நாட்களில் இவர் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வருவது வாடிக்கை. அப்படி விவசாயத்தின் மீது ஆர்வம் பிறந்துள்ளது. முதல்கட்டமாக ஊரில் தங்களுடைய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். இது இவருக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. எனவே தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார். இந்தியாவில் அரிதாக கிடைக்கக்கூடிய பழங்களை நாம் விளைவித்து விற்பனை செய்யலாம் என்று யோசனையும் இவருக்கு பிறந்துள்ளது..2015 ஆம் ஆண்டு நிலத்தில் மஞ்சள் பயிரிட்டார். முதலில் அவருக்கு 165 கிலோவிற்கு மஞ்சள் அறுவடை நடைபெற்றது. அதனை மஞ்சளாகவே விற்பனை செய்யாமல் மஞ்சள் பவுடராக மாற்றி ஒரு கிலோ 450 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்துள்ளார். இது அவருக்கு நல்ல லாபத்தை இனிப்பு கடையை தொடங்கி இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகத்தை உருவாக்கிய LOVELY SWEET OWNER. LOVELYஅசோக் குமார் மிட்டல் , பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த புகழ்பெற்ற இனிப்பு கடைக்காரரின் மகன். அசோக் குமார் மிட்டலின் பால்தேவ் ராஜ் மிட்டல் 1961 ஆம் ஆண்டில் ஜலந்தரில் நண்பரிடம் இருந்து 500 ரூபாய் கடனாக பெற்று லவ்லி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஒரு இனிப்பு கடையை தொடங்கினார். அவரது மோட்டீச்சூர் லட்டு பஞ்சாப் முழுவதும் மிகப் பிரபலமானது. இதன் மூலம் இவரது இனிப்பு கடை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. 1969 ஆம் ஆண்டு ஜலந்தரிலேயே அவர் மூன்று இனிப்பு கடைகளை திறந்தார். தற்போது ஜலந்தரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இனிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. தந்தையின் வியாபார நுணுக்கங்களை கண்டு வளர்ந்த அசோக் குமார் மிட்டல் தற்போது பெரிய கல்வி குழுமத்தின் நிறுவனராக மாறி இருக்கிறார். சட்டப் படிப்பு மற்றும் டாக்டரேட் முடித்த அசோக் குமார் மிட்டல் 2005ஆம் ஆண்டில் தி லவ்லி ஃபுரொபஷனல் பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது இந்த பல்கலைக்கழகம், ஆண்டுக்கு 1153 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. 30,000க்கும் அதிகமான மாணவர்கள் இங்கே கல்வி பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி லவ்லி பல்கலைகழகம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரபலமான கல்லூரிகளோடு ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி, அதிகப்படியான வாய்ப்புகளை அளித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் செயல்படும் கல்வி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கல்வி குழுமத்தை நிறுவியதோடு நிற்காமல் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் அசோக் குமார் மிட்டல் உயர்ந்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தற்போது செயல்பட்டு வருகிறார். 500 ரூபாய் கடனில் துவங்கிய ஸ்வீட் கடை.. இன்று மாபெரும் பல்கலைக்கழகத்தின் அதிபதி.

May 18, 2024

மொபைல் சேஃப் ஆக ,மொபைலை ரீஸ்டார்ட் செய்வது நல்லதா? பவர் ஆஃப் செய்வது நல்லதா?

செல்போனின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பணப்பரிவர்த்தனை என பெரிய மற்றும் சிறிய அனைத்து வகையான வேலைகளையும் செல்போனில் செய்கிறார்கள். செல்போன் புதியதாக இருக்கும் போது,அதை பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் அது பழையதாக மாறத் தொடங்கும் போது,எல்லா வகையான சிக்கல்களும் அதில் தோன்றத் தொடங்குகின்றன. பல நேரங்களில்,செல்போனில் இதுபோன்ற சில சிக்கல்கள் வரத் தொடங்குகின்றன, இதனால் செல்போன் உறைந்துவிடும், அதனால் செல்போனை உடனடியாக அணைக்கிறோம்.இதனால் அதை மீண்டும் ரீஸ்டார்ட் செய்யும்போது செல்போன் சரியாக வேலை செய்யத் தொடங்குகிறது. செல்போனில் பவர் ஆஃப் மற்றும் ரீஸ்டார்ட் ஆகிய இரண்டு விருப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் இரண்டின் வேலையும் ஒன்றுதான், இரண்டு ஆப்ஷன்கள் கொடுப்பதில் நன்மை இருக்கிறது,ஒவ்வொரு வாரமும் உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்வது உங்கள் மொபைலின் மெமரி லீக்கேஜைத் தடுக்க உதவுகிறது. பேட்டரீஸ் பிளஸ் வெளியிட்ட அறிக்கை, ஒரு செயலி செயல்பட அதிக அளவு மெமரி தேவைப்படும்போது மெமரி லீக்கேஜ்கள் ஏற்படுகின்றன. அதனால் அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வதும் மெமரியை சீராக பயன்படுத்துவதும் செல்போனுக்கு நல்லது என்கின்றனர். உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்வது கனெக்டிவிட்டி சிக்கல்களை தவிர்க்க உதவும். பழைய ஸ்மார்ட்போன்கள் சில நேரங்களில் தரவு மற்றும்WiFi உடன் இணைக்க முடியாது மற்றும் செல்போனை ரீஸ்டார்ட் செய்த பிறகு மீண்டும் இணைக்கப்பட வேண்டும்.- உங்கள் செல்போனை பவர் ஆஃப் செய்வது அதன் கேச் டேட்டாவை அழிக்க உதவும், இதனால் உங்கள் போன் மிகவும் திறமையாக செயல்படும். மொபைலை ஷட் டவுன் செய்து ரீஸ்டார்ட் செய்வதைத் தவிர, செல்போனின் பின்னணியில் இயங்கும் அப்ளிகேஷன்களை அழிக்க வேண்டும். செல்போன் இயங்கும் போது இது பேட்டரி ஆரோக்கியத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.பொதுவாக செல்போனை ரீஸ்டார்ட் செய்வது, செல்போன் செயலிழக்கும் போது,ஆப்ஸ் சரியாக இயங்காமல், மென்பொருள் கோளாறுகள் ஏற்படும் போது நடக்கும். ஆனால் இது ஒரு நல்ல நடைமுறையாகும், இதன் காரணமாக செல்போன் சீராக இயங்குகிறது.

May 18, 2024

11 மாதங்களுக்கு மட்டுமே வாடகை ஒப்பந்தங்கள் போடப்படுகிறது ஏன் தெரியுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும். இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது.பொதுவாக வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2 குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள்11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே போடப்படுகின்றன. இதனை பதிவு செய்ய இரு தரப்பினரும் அலைய வேண்டிய தேவை இருக்காது.குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்தியாவில் வாடகை ஒப்பந்தம் உரிமையாளருக்கும், வாடகைக்கு வருபவருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது.ஒப்பந்தமானது வாடகைக்கு குடியிருப்பவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்ட விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டின் மீது உரிமை கொண்டாடாமல் இருக்க, வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வது முக்கியம். அதே போல வீட்டை காலி செய்வது பற்றி எத்தனை நாட்களுக்கு முன் கூற வேண்டும் என்பது கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

May 17, 2024

இந்தியாவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்

 இந்தியர்கள் வேலை நிமித்தம் காரணமாக வெளிநாட்டில் தங்க வேண்டியுள்ளது. சிலர் படிப்பு அல்லது பிற தேவைகளுக்காக வெளிநாடுகளில் தங்குகிறார்கள். ஆனால், பல்வேறு அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவிற்கு வெளியே, பெரும்பாலான இந்தியர்கள் மொரிஷியஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர். இந்த நாடுகளில், இந்தியர்கள் மக்கள் தொகையில் நல்ல சதவீதத்தைக் கொண்டுள்ளனர். இந்த நாடுகளில் பெரும்பாலானவை ‘மினி இந்தியா’வைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம்.மொரீஷியஸில்70% இந்தியர்கள் என்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில், இந்த நாடு இந்தியர்களுக்கு கலாசார சொர்க்கம். எல்லா இந்திய உணவுகளும் கிட்டத்தட்ட நம் நாட்டைப் போலவே கிடைக்கும்இந்தியாவுக்கும்பிரிட்டனுக்கும்இடையேஉள்ளஆழமானகலாச்சாரஉறவுகளை புறக்கணிக்க முடியாது. உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற எண்ணற்ற இந்திய நிறுவனங்கள் இந்த நாட்டில் எங்கும் காணப்படுகின்றன. இந்த கலாச்சார பன்முகத்தன்மை ஒற்றுமை உணர்வை உருவாக்குவது மட்டுமல்லாமல், தொலைதூர நாடுகளில் உள்ள இந்தியர்களை சொந்த நாட்டில் இருப்பதுபோல் உணரவும் செய்கிறது. இங்கு மொத்தம்1.8 சதவீத இந்தியர்கள் வசிக்கின்றனர்ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீங்கள் எங்கு சென்றாலும், இங்கு ஏராளமான இந்தியர்கள் வசிப்பதால், நீங்கள் ஒரு இந்தியராக வீட்டில் இருப்பதைபோல் உணருவீர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் இந்தியர்களாம்.சவுதி  அரேபியாவில் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% முதல் 13% வரை இந்தியர்கள் உள்ளனர். கனடா நல்ல வேலை வாய்ப்புகளை கொண்ட நாடு. உயர் வாழ்க்கை முறை மற்றும் இலவச சுகாதாரம் போன்ற பல கூடுதல் நன்மைகள் இந்த நாட்டை இந்தியர்களை வசிப்பிடமாக ஈர்க்கின்றன. வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தரவுகளின்படி, 1,78,410 பேர் NRI இந்தியர்கள், 15,10,645 பேர் இந்திய வம்சாவளி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர்களின் மக்கள் தொகை சுமார் 16,89,055 ஆகும்.ஓமானின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20% இந்தியர்கள். 2023-க்குள் இந்த நாடு கிட்டத்தட்ட 9 லட்சம் இந்தியர்களின் தாயகமாக மாறிவிட்டது. ஓமானின் துடிப்பான கலாச்சார வாழ்வில் இந்திய இருப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.சிங்கப்பூர் 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் இந்தியர்களின் எண்ணிக்கை7 லட்சத்தை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர்‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது, இது இந்திய கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா:2.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, இரண்டாவது பெரிய இந்திய புலம்பெயர்ந்தோர் தாயகமாக அமெரிக்கா இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்த நாட்டை வேலை செய்யும் இடமாகவும், வணிக முயற்சிகளுக்கான ஊடகமாகவும் மட்டும் பார்க்காமல், வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் பார்க்கின்றனராம்

May 17, 2024

புதிதாக வாடகை வீட்டுக்கு செல்பவர்களுக்கு டெபாசிட் தொகையை தயார் செய்வது என்பதே மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது

புதிதாக வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வீட்டு உரிமையாளர்கள் கேட்கக்கூடிய டெபாசிட் தொகை. வழக்கமாக வீட்டு உரிமையாளர்கள் ஆறு மாதங்களில் இருந்து ஓராண்டு கால வாடகை தொகையை டெபாசிட்டாக கேட்கின்றனர்எனவே புதிதாக வாடகை வீட்டுக்கு செல்பவர்களுக்கு டெபாசிட் தொகையை தயார் செய்வது என்பதே மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. உரிமையாளர்களை பொறுத்துவரை டெபாசிட் தொகையை ஒருபாதுகாப்பாக கருதுகின்றனர்.வீட்டை காலி செய்யும் போது சில உரிமையாளர்கள் டெபாசிட் தொகையில் இருந்து கணிசமான தொகையை எடுத்து கொண்டு கிட்டதட்ட பாதி தொகையை தான் தருவார்கள். எனவே டெபாசிட் தொகை எப்போதுமே உரிமையாளருக்கும், குடியிருப்பாளருக்கும் இடையே ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தான் தற்போது ரெண்டல் பாண்ட்(Rental Bond) எனப்படும் வாடகை பத்திரங்கள் இந்தியாவில் டிரெண்டாகி வருகின்றன. வாடகை பத்திரம் என்பது வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் மற்றும் வாடகைக்கு வருபவருக்கு உத்திரவாதம் வழங்கக்கூடிய ஒரு நிறுவனம் ஆகிய மூவருக்கு இடையிலான ஒரு ஒப்பந்தமாகும். வாடகைக்கு குடி வருபவர் வாடகை செலுத்தாமல் தவிர்ப்பது என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் போது, வாடகை பத்திரம் மூலம் அதனை பெற்றுக் கொள்ளலாம்.வாடகை பத்திரம் முறையானது பாரம்பரிய டெபாசிட் முறைக்கு மாற்றாக உரிமையாளருக்கு விரிவான காப்பீட்டை வழங்குகிறது. வாடகை பத்திரம் வழங்கும் நிறுவனம் குடியிருப்பாளருக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறது.வாடகைக்கு குடி வருபவர் நம்பகமானவர் என்பதற்காக அந்நிறுவனம் ஒரு பத்திரத்தை வழங்குகிறது. அந்த நம்பகத்தன்மையை மீறி வாடகை செலுத்தாமல் விடுவது, மின்சார கட்டணம் செலுத்தாமல் இருப்பது போன்ற சிக்கல்களில், இந்த உத்தரவாதம் வழங்கிய நிறுவனம் அந்த தொகையை வீட்டு உரிமையாளரிடம் வழங்கிவிடும். பின்னர் குடியிருப்பாளரிடம் இருந்து அதனை வசூல் செய்து கொள்ளும். வாடகை பத்திரத்தின் மதிப்பு பாரம்பரிய டெபாசிட் தொகையில் இருந்து6 முதல்10% வரை தான் இருக்கும். எனவே டெபாசிட்டுக்காக பெரிய தொகையை தயார் செய்ய வேண்டிய நிலை குடியிருப்பவர்களுக்கு ஏற்படாது. தற்போது சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் வாடகை பத்திரங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.வாடகை பத்திரங்கள் நிறுவன உத்தரவாதத்துடன் வருவது மட்டுமில்லாமல்,5 நாட்களில் உரிமையாளர்களுக்கு செல்ல வேண்டிய தொகை செலுத்தப்பட்டு விடும் என்கிறார், ஈகுவாரா கேரண்டீஸ்(Eqarosecurities) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விகாஷ்கந்தேல்வால். பொதுவாக நாம் ஒரு வீட்டிற்கு குடி போகும் போது உரிமையாளருக்கும்,நமக்கும்  இடையே வாடகை ஒப்பந்தம் போடப்படும். இதில் வாடகை செலுத்த வேண்டிய தேதி மற்றும் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இது இருதரப்புக்குமான நம்பகத் தன்மையை வளர்ப்பதில்லை. ஆனால் வாடகை செலுத்தாமல் விட்டால் என்ன செய்வது?, வீட்டினை சேதப்படுத்தினால் என்ன செய்வது என உரிமையாளருக்கு ஒருஅச்சம் இருக்கும். அதே போலடெபாசிட் தொகையில் எவ்வளவு திரும்ப கிடைக்குமோ என்ற சந்தேகம் குடியிருப்பாளருக்கு இருக்கும். இதற்கு தீர்வாக இரு தரப்புக்கும் நிம்மதியான ஒரு அனுபவத்தை வழங்குகின்றன வாடகை பத்திரங்கள். உரிமையாளர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதால் இந்த Rental Bond  வரவேற்பை பெற்றுள்ளது.

May 17, 2024

உலகின் விலை உயர்ந்த பொருள் Costly Elements

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமம் ஃபிரான்சியம். இதன் விலை ஒரு கிராம் ரூ.8,313 கோடி ஆகும். இதன் ஆயுட்காலம் வெறும்22 நிமிடங்கள் மட்டுமே. அதாவது22 நிமிடங்களுக்கு பிறகு இது மற்றொரு உலோகமாக மாறிவிடும். இது பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் இது உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக உள்ளது.காலிஃபோர்னியா என்பதும் ஃபிரான்சியத்தை போலவே மிகவும் விலை உயர்ந்த கனிமம் ஆகும். இது கடந்த1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கழைகழகத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு பிறகு சில கிராம்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கிராமின் மதிப்பு ரூ.2.22 ஆகும். இந்நிலையில் இது ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்கப்படுகிறது.கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். இது அனைத்து உயிரினங்களிலும் காணப்படும். ஆனால் இதன் விலை கிராபைட்டை விட மிக அதிகமாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராம் ரூ.54 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியமும் விலையுயர்ந்த தனிமங்களின் பட்டியலில் ஒன்றாகும். புளூட்டோனியம்239 மற்றும்241 ஆகியவை அதிக கதிரியக்கம் கொண்டவை. இவற்றை சேமித்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் இவை எளிதில் தீப்பற்றக்கூடியவை. இதன் விலை ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் ஆகும்.ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இது மிகவும் அரிதானது. அலுமினிய உலோக கலவைகளில் அதன் விளைவு முதன்முதலில்1970ல் கவனிக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக இது இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒரு கிராம் விலை ரூ.22,000 ஆகும். லுடேடியம் பூமியில் உள்ள அரிய உலோகங்களில் ஒன்றாகும். இதன் வணிக பயன்பாடு குறைவு என்றாலும் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கிராம் ரூ.57,000-க்கு விற்பனை செய்யப்படுகிறதுபிளாட்டினம் மிகவும் வினைத்திறன் கொண்ட உலோகம். இது அதிக வெப்பநிலையிலும் துருப்பிடிக்காது. ஆனால் இவை பூமியில் காணப்படுவது அரிது. இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உறப்த்தி செய்யப்படுகிறது. இது ஒரு கிராம் ரூ.48,0000க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகைகளில் பயன்படுத்தப்படும் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் ஒன்றாகும். இதற்கு உலகம் முழுவதும் அதிக தேவை உள்ளது. இது விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

May 16, 2024

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகமாகச் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திகழ்கிறார்..தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (sundar pichai) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை. தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ (Google CEO) என்ற பதவியைப் பெற்றார் இவர். குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. அதேபோல் 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரு முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1800 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.பின்பு கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்குச் சம்பளம் ரூ.1869 கோடியாக இருந்தது. குறிப்பாக இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்திற்கும் மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொட்டுவரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.டாலர்கள் அல்லது ரூ.10215 கோடி என ஹூருன் பட்டியலில் ( Hurun List) மதிப்பிடப்பட்டு இருந்தது  . அதேபோல் சமீபத்தில் சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

1 2 ... 25 26 27 28 29 30 31 ... 47 48

AD's



More News