இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று ராணுவ அதிகாரிகளும் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம்.
லடாக்கின் லே பகுதி அருகே இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று ராணுவ அதிகாரிகளும் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. விபத்திற்குப் பிறகு, நொறுங்கிய ஹெலிகாப்டரின் சிதைவுகளுக்கு அருகில் புன்னகையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர்களது மன உறுதி ஒட்டுமொத்த நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் இருந்து அவர்கள் மீண்டு வந்தது ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. துணிச்சலும், மன உறுதியும் கொண்ட நம் ராணுவ அதிகாரிகளின் இந்த செயல், பலரையும் ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0
Leave a Reply